Showing posts with label இணைய மாநாடு. Show all posts
Showing posts with label இணைய மாநாடு. Show all posts

Tuesday, August 27, 2013

என்ன சாதித்தது.. தமிழ் இணைய மாநாடு?

12ஆம் தமிழ் இணைய மாநாடு இம்முறை மலேசியத் தலைநகர் கோலாலும்பூரில் உள்ள மலாயாப் பல்கலைக்கழகத்தில் நடந்தேறியது. ஆகத்து 15 - 18 வரையில் நடந்த இம்மாநாட்டிற்காகக் 'கையடக்கக் கருவிகளில் தமிழ்க் கணிமை' என்னும் கருப்பொருள் தெரிவு செய்யப்பட்டிருந்தது. மலேசியாவிலிருந்தும் பன்னாடுகளிலிருந்தும் ஏறக்குறைய 1000 பேராளர்கள் இதில் கலந்துகொண்டனர்.

கட்டுரைப் படைப்பு, கண்காட்சி, மக்கள் கூடம் என மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இம்மாநாடு, தமிழின் பெயரால் மலேசியாவில் நடைபெற்ற மற்றைய பற்பல மாநாடுகளைப் போல கூடினோம் களைந்தோம் என முடிந்து போனதா? அல்லது காலத்திற்குத் தேவையான மாற்றங்களுக்கு வித்திட்டுள்ளதா? இதனைச் சிறிது ஆராய்ந்து பார்ப்பதே இந்தப் பதிவின் நோக்கமாகும்.

அதற்கு முன்னர் இம்மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட சில முயற்சிகளையும் முன்னெடுப்பு நடவடிக்கைகளையும் கண்ணோட்டமிடுவோம்.

#1 சி.ம.இளந்தமிழ் இந்தப் 12ஆம் உலகத் தமிழ் மாநாட்டின் ஏற்பாட்டுக் குழுத் தலைவராக உத்தமம் அமைப்பினால் நியமிக்கப்பட்டார்.

#2 சி.ம.இளந்தமிழ் தலைமையில் மலேசியாவில் மாநாட்டு வினைக்குழு அமைக்கப்பட்டது. மாநிலங்கள் தோறும் மாநிலத் தொடர்புக் குழு அமைக்கப்பட்டன.

#3 மலேசியாவில் உள்ள 6 ஆசிரியர் பயிற்சிக் கழகங்களில் 12ஆம் உலகத் தமிழ் இணைய மாநாட்டு தகவல் அறிதிறன் விளக்கக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.

#4 பொது இயங்களின் உதவியோடு நாடு முழுவதும் பல்வேறு ஊர்களில் மாநாடு தொடர்பான  பரப்புரையும் விளக்கக் கூட்டங்களும் நடத்தப்பெற்றன.

#5 மலேசியாவில் உள்ள 523 தமிழ்ப்பள்ளிகளுக்கும் மாநாடு தொடர்பான விளக்கக் கையேடுகள், அறிக்கைகள் அனுப்பப்பட்டன. சில தமிழ்ப்பள்ளிகளில் ஆசிரியர்களுக்குத் தமிழ்க் கணினி, இணையம், கட்டற்ற மென்பொருள் தொடர்பான பயில்மனைகள் நடைபெற்றன.

#6 12ஆம் உலகத் தமிழ் இணைய மாநாட்டை முன்னிட்டு தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கென அகப்பக்கம் உருவாக்கும் போட்டி, குறுஞ்செயலி போட்டி  இளையோர்களுக்கும் முகநூல் பயனர்களுக்கும் சிறப்புப் போட்டி ஆகியவை நடத்தப்பட்டன.

#7 வானொலி, தொலைக்காட்சி, இணையம், முகநூல், குறுஞ்செய்தி முதலான ஊடகங்கள் வழியாக 12ஆம் உலகத் தமிழ் இணைய மாநாடு தொடர்பான அறிவிப்புகள், செய்திகள், தகவல்கள் பரப்பப்பட்டன.

#8 மலாயாப் பல்கலைக்கழகத்தில் இந்த மாநாட்டை நடத்துவதற்குரிய அரங்கங்கள், கண்காட்சிக் கூடம், தங்குமிடம், விடுதி, உணவு, மாநாட்டுப் பை, நினைவுப் பரிசு, நிகழ்ச்சி நிரல் ஆகிய அனைத்து ஏற்பாடுகளும் மிக நேர்த்தியாகத் திட்டமிடப்பட்டு செய்யப்பட்டன.

இப்படியாக மேற்கொண்டு செய்யப்பட்ட பல்வேறு திட்டமிடல்கள் அனைத்தும் குறித்த நேரத்தில் சரியாக நடைபெற்றதால், 15.08.2013ஆம் நாள் இரவு மணி 7:30க்கு மலாயாப் பல்கலைக்கழகத்தின் பெர்டானா சிசுவா அரங்கத்தில் ஆயிரம் பேராளர்கள் பார்வையாளர்கள் முன்னிலையில் 12ஆம் உலகத் தமிழ் இணைய மாநாடு வெகு கோலாகலமாகத் தொடங்கியது.


4 நாட்களாக நடைபெற்ற இம்மாநாடு என்ன செய்தது? என்ன சாதித்தது? இம்மாநாட்டின் விளைபயன்கள் என்ன? என்பவை மிக முக்கியமான கேள்விகளாகும். பெருமாண்டமாக மாநாடுகளை நடத்திவிட்டுப் போவதென்பது எல்லாராலும் செய்யக்கூடியதே. ஆனால், விளைபயன்மிக்க மாநாட்டை நடத்துவதே இன்றைய காலத்திற்குத் தேவையானதும் செய்யத் தகுந்ததும் ஆகும்.

அப்படிப் பார்க்கையில் 12ஆம் உலகத் தமிழ் இணைய மாநாட்டின் பயனாக அல்லது விளைவாகக் கீழ்க்காணும் சிலவற்றைப் பட்டியலிடலாம்:-

#1 மலேசியாவிலிருந்து 680 பேரும் அயலகத்திலிருந்து 150 பேரும் உட்பட ஏறக்குறைய 1000 பேராளர்களும் சிறப்பு அழைப்பாளர்களும், கட்டுரையாளர்களும் கலந்துகொண்ட மிகப்பெரும் மாநாடாக இது அமைந்திருந்தது.

#2 மலேசியாவில் உள்ள தமிழ்ப்பள்ளிகள், இடைநிலைப்பள்ளிகள், உயர்க்கல்விக் கழகங்கள் ஆகியவற்றிலிருந்து ஏறக்குறைய பத்தாயிரம் மாணவர்கள் பார்வையாளர்களாக வந்து கலந்துகொண்டு, தமிழ்க் கணிமை குறித்தும் தமிழில் தகவல் தொழில்நுட்பம் பற்றியும் விழிப்புணர்வு பெற்றனர்.

#3 ஏறக்குறைய ஐந்து இலக்கம் (500,000) மலேசியத் தமிழர்களுக்குத் தமிழ்க் கணிமை - தமிழ்த் தகவல் தொழில்நுட்பம் பற்றிய சிந்தனைத் தூண்டலுக்கு இம்மாநாடு வித்திட்டுள்ளது.

#4 கணினி, இணைய, தகவல் தொழில்நுட்ப உலகில் தமிழ்மொழி குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டிப்பிடித்துள்ளது என்னும் உண்மையைப் பொதுமக்களுக்குக் குறிப்பாக, இளையோர்களுக்கு எடுத்துக்காட்டியுள்ளது. இதன்வழியாகத் தகவல் தொழில்நுட்பத்தில் புதிய பார்வையையும் தேடலையும் உண்டாக்கியிருக்கிறது.

#5 கணினி, திறன்பேசி, தட்டை, திறன்கருவிகளின் இடைமுகத்தைத் தமிழுக்கு மாற்றிக்கொள்ளவும் தமிழில் குறுஞ்செய்தி, மின்னஞ்சல் விடுக்கவும், முகநூல், டுவீட்டரில் தமிழில் எழுதவும் கூடிய ஆர்வம் மேலோங்கி இருக்கின்றது.

#6 பொதுவாகவே தமிழ் சார்ந்த மாநாடுகளில் பெரியவர்களும் மூத்தவர்களுமே வருகைதரும் சூழலில், இந்தத் தமிழ் இணைய மாநாட்டில் 60%-க்கும் மேல் இளையோர்களை ஈர்த்திருப்பது பாராட்டுக்குரிய ஒன்றாகும்.


#7 அதிக அளவில் தமிழாசிரியர்களும் பயிற்சி ஆசிரியர்களும் கலந்துகொண்டிருப்பதால் அவர்களிடம் பயிலும் ஆயிரக்கணக்கிலான தமிழ் மாணவர்களுக்கு தமிழ்க் கணிமை தொடர்பான தகவலும் அறிவும் சென்று பரவுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.

#8 அயலகத்தில் மட்டுமின்றி, மலேசியாவிலும் தகவல், தொழில்நுட்பம், கணினி, இணையம், கணிமை சார்ந்த துறைகளில் ஆய்வுக் கட்டுரைகள் எழுதிப் படைக்கும் ஆற்றல் கொண்டவர்கள் இருக்கிறார்கள் என்பதை இந்த மாநாடு அடையாளம் காட்டி ஆர்வமூட்டியுள்ளது. இதன்வழி இத்துறைகள் தொடர்பான ஆய்வுப்பணிகளும் ஆக்கப்பணிகளும் நடைபெறுவதற்கு வலிகோலியுள்ளது.


#9 தமிழ்த் தகவல் தொழில் நுட்பவியல், தமிழ்க் கணிமை, கையடக்கக் கருவி, இயற்கை மொழி ஆய்வு, தமிழ் மென்பொருள்கள், குறுஞ்செயலி, கணினி மொழியியல், கல்வி தொடர்பிலான ஏறக்குறைய 100 அரிய கட்டுரைகள் அடங்கிய மாநாட்டு ஆய்வடங்கள் ஒன்று ஆவணமாக்கப்பட்டுள்ளது.

#10  இயற்கை மொழி ஆய்வியல் (Natural Language Processing [NLP] ) துறையில் தமிழ்க் கணிமைக்கு ஓர் இருக்கையை ஏற்படுத்தித் தர மலாயாப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் கொள்கையளவில் ஒப்புதல் வழங்கியுள்ளதோடு, இதன் தொடர்பில் மலேசியப் பிரதமரிடம் பேசி இசைவுபெறுவதற்கு ஆவனசெய்யப்படுமென தெரிவித்துள்ளார். இதுவே இம்மாநாட்டின் மிக உச்சமான வெற்றியாகக் கருதலாம்.


#11 இந்த உலகத் தமிழ் இணைய மாநாடு முக முக்கியமான மூன்று தீர்மானங்களை ஏற்றுக்கொண்டுள்ளது. அவையாவன:-
  • தமிழ் தகவல் தொழில்நுட்பத்துக்கும் மொழியியலுக்குமான பன்னாட்டு ஆராய்ச்சி இதழ் ஒன்றை உத்தமம் தொடங்கும்.
  • ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்குமான மின் கல்வி இணையத் தளத்தை உத்தமம் தொடங்கும்.
  • தமிழ்க் கணிமை ஆராய்ச்சியாளர்களுக்கும் ஆராய்ச்சி மாணவர்களுக்கும் உதவும் வகையில் ஊடாடல் அறிவுத்தளம் ஒன்றை உத்தமம் ஆரம்பிக்கும்.

முதலாவது உலகத் தமிழ் இணைய மாநாட்டைத் தொடக்கிவைத்த மலேசியா, ஒரு மாமாங்கம் முடிந்து 12-ஆவது மாநாட்டை நடத்தும் வேளையில் தமிழ்க் கணிமையும் தமிழ்த் தகவல் தொழில் நுட்பமும்  மிகப்பெரிய வளர்ச்சியையும் உச்சத்தையும் எட்டியுள்ளது என்பது மறுக்கவியலா உண்மையாகும். ஒவ்வொரு நொடியும் முன்னேறிக்கொண்டிருக்கும் மின்னுட்பவியல் உலகத்தில் நிலைபெறவும் வெற்றிபெறவும் கூடிய ஆற்றலும் நுட்பமும் தமிழுக்கு உண்டு என்பது மறைக்க முடியாத மெய்யாகும். தனித்தியங்கும் ஆற்றல் தமிழுக்கு உண்டு என்பது தகவல் தொழில்நுட்ப உலகத்திலும் நிறுவப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.

எனினும், அடுத்துவரும் ஊழியில் தமிழ் நிலைத்து நிற்கவும் மற்றைய உலக மொழிகளுக்கு நிகராக தலையெடுத்து நிற்கவும் வேண்டுமானால், தமிழில் உருவாக்கம்பெறும் தகவல் தொழில்நுட்பங்களை உள்வாங்கிக்கொண்டு உடனே அதனை பயன்பாட்டுக்குக் கொண்டுவரும் அறிவாண்மை பெற்ற இனமாகத் தமிழினம் உருமாற்றம் பெறவேண்டும்.


தகவல்தொழில்நுட்பம் வழி தமிழை முன்னெடுப்போம்!
 நுண்மான் நுட்பப்புலத் தமிழராய் எழுவோம்! வெல்வோம்!

பி.கு: 12ஆம் உலகத் தமிழ் இணைய மாநாட்டுப் படங்கள், ஆய்வுக் கட்டுரைகள்

@சுப.நற்குணன், திருத்தமிழ்

Saturday, August 24, 2013

தமிழ் இணைய மாநாட்டில் சுப.நற்குணன் படைத்த கட்டுரை

கடந்த ஆகத்து 15 - 18 வரை, கோலாலும்பூர் மலாயாப் பல்கலைக்கழகத்தில் 12ஆம் உலகத் தமிழ் இணைய மாநாட்டில் நான் படைத்தளித்த கட்டுரை இது.

தலைப்பு: தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலின் இணையத்தின் பயன்பாடும் பங்களிப்பும்.

பாகம் 1:-



பாகம் 2:-



பாகம் 3:- 



பி.கு:- இந்த நிகழ்ப்படத்தைப் பதிவுசெய்து யூடியுப்பில் பதிவேற்றி என்னை அசத்திய என் மகன் சுப.ந.சரணமுதனுக்கு நன்றி.

@சுப.நற்குணன், திருத்தமிழ்

முத்து நெடுமாறன்: திறன் கருவிகளில் தமிழின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும்

உலகத் தமிழ் தகவல், தொழில் நுட்ப மன்றம் (‘உத்தமம்’) என்ற பெயரில் இயங்கும் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெறும் உலகத் தமிழ் இணைய 12ஆம் மாநாடு ஆகத்து 15 - 18 வரையில் நடந்தது. கோலாலும்பூர், மலாயாப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இம்மாநாட்டில் சுமார் 1,000 பேர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முதன்மைப் பொழிவாற்றும் முத்து நெடுமாறன்

மாநாட்டின் தொடக்க விழாவில், சிறப்பு அங்கமாக உத்தமம் அமைப்பின் நிறுவநர்களில் ஒருவரும், அந்த அமைப்பின் முன்னாள் தலைவரும், முரசு மென்பொருள், மற்றும் செல்லினம், செல்லியல் ஆகிய செயலிகளின் வடிவமைப்பாளருமான முத்து நெடுமாறன் முதன்மைப் பொழிவு வழங்கினார்.
.
இந்த ஆண்டு மாநாட்டின்  கருப்பொருளான ‘கையடக்கக் கணினிகளில் தமிழ்க் கணிமை’ குறித்து முத்து நெடுமாறன் அவர்கள் ஆற்றிய உரை பேராளர்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்ததோடு தமிழ்க் கணிமையின் வளர்ச்சியைக் கண்டு அனைவரும் வியந்து பார்க்கும் அளவுக்கு இருந்தது. 

முத்து நெடுமாறன் உரை பின்வருமாறு:-

“இந்த மாநாட்டின் முக்கிய கருப்பொருளே கையடக்கக் கருவிகளில் தமிழ்க் கணிமை. அதாவது தமிழ் கணிமை கையடக்கக் கருவிகளில் எந்த அளவிற்கு வளர்ந்துள்ளது என்பதைப் பற்றியும், அதன் அடுத்தகட்ட நிலை என்ன என்பதைப் பற்றியும் தெரிந்து கொள்வது தான் இதன் முக்கிய நோக்கம்.”

“தொழில்நுட்ப கருவிகளில் தமிழை எப்படி உள்ளிடுவது என்பது தான் எங்களின் முதல் முயற்சியாக இருந்தது. அதில் தற்போது வெற்றியும் அடைந்துள்ளோம் என்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. தற்போது மிகவும் புகழ்பெற்று  இருக்கும் பெரும்பாலான கருவிகளில் இயல்பாகவே தமிழை உள்ளிட முடியும் அது இன்னொரு வெற்றி.” என்று சொல்லி முடித்த பொழுது அரங்கம் அதிரும் வகையில் பேராளர்கள் கரவொலி எழுப்பி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

 “எனினும், இது போன்ற பெரிய நிறுவனங்கள் தமிழை கட்டாயம் பயன்பாட்டில் வைக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. தமிழைப் பயன்பாட்டில் வைக்கவில்லை என்றாலும் அவர்களது விற்பனை எண்ணிக்கை அதிகமாகத் தான் இருக்கும். தமிழ் பயன்பாடு அதிகம் இருக்கிறது என்று அவர்களுக்குத் தெரிய வந்தால் மட்டுமே அந்த நிறுவனங்கள் தமிழின் பயன்பாட்டை அதிகரிப்பார்கள். எனவே கையடக்கக் கருவிகளில் தமிழின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும். அதன் மூலம் அவர்கள் பயன்பாட்டில் வைக்கும் தமிழ் எழுத்துக்களின் தரமும் அதிகரிக்கும்” என்று தெரிவித்தார்.

செல்லினம் புதிய பதிப்பைப் பற்றி விளக்குகிறார் முத்து நெடுமாறன்.
அவருடன் செம்மல் மணவை முஸ்தப்பா, சுப.நற்குணன், இராணி, செண்பகவள்ளி

 தமிழ் அறிந்தவர்களும் தமிழைக் கற்றவர்களும் கையடக்கக் கருவிகள், திறன்பேசிகள், திறன்கருவிகள், ஆண்டிரோய்டு கருவிகள் ஆகியவற்றில் தமிழை அதிகமாகப் பயன்படுத்தும் காலம் விரைவில் வரவேண்டும். இன்றையச் சூழலில் திறன்பேசிகளில் தமிழில் குறுஞ்செய்தி அனுப்புவது மிக இயல்பாகிவிட்டது. மேலும் தமிழ் இணையத்தளங்களை வாசிக்க முடியும். அதுமட்டுமல்லாது புகழ்பெற்ற எழுத்தாளர்களின் நூல்களைத் தரவிறக்கம் செய்து வாசிக்க இயலும். இதில் இன்னொரு சிறப்பு என்னவெனில் ஒரு செய்தியில் அல்லது நூலில் குறிப்பிட்ட ஒரு சொல்லையோ அல்லது ஒரு தகவலையோ நொடிப்பொழுதில் தேடிவிடலாம்; அதனை நண்பர்களுடன் உடனடியாகப் பகிர்ந்துகொள்ளலாம். தொடர்பாளர் பெயர்களைத் தமிழிலேயே பதிவு செய்யலாம். அழைப்புகள் வரும் பொழுது அழைப்பாளர் பெயர் தமிழிலேயே வெளித்தோன்றும். பாடல் பட்டியல்களைத் தமிழிலேயே பதிவு செய்துகொள்ள முடியும் என்றெல்லாம் முத்துநெடுமாறன் ஒவ்வொன்றையும் செய்முறையோடு விளக்கிக் காட்டியபொழுது, தகவல் தொழில்நுட்பத்தில் தமிழ்மொழியின் வளர்ச்சி குறித்து பெருமிதம் அடையாமல் இருக்க முடியவில்லை. பேராளர்களின் கரவொலியும் ஆரவாரமும் இதனை உறுதிபடுத்துவதாய் அமைந்தன.

மேலும், தற்போது உலக அளவில் பயன்பாட்டில் இருக்கும் தமிழ் உள்ளீட்டு செயலியான செல்லினம் மென்பொருளின் அடுத்த கட்ட நிலை குறித்தும் முத்து நெடுமாறன் அவர்கள் விளக்கமளித்தார். இனி வரவிருக்கும் முரசு மற்றும் செல்லினம் புதிய பதிப்புகள் மேலும் பல புதுமைகளோடு வரவிருப்பதாகத் தெரிவித்தார்.

முத்து நெடுமாறன்

அடுத்து, மாநாட்டின் இறுதி நாளில் முத்து நெடுமாறனின் சிறப்புரை ஒன்றும் இடம்பெற்றது. இதில், தென்கிழக்காசிய மற்றும் இந்திய எழுத்துருக்களிடையே காணப்படும் ஒற்றுமை வேற்றுமைகள் பற்றி விரிவாகப் பேசினார். கணினிக்கு ஒரு மொழியைக் கற்றுக்கொடுப்பதில் உள்ள நெளிவுசுழிவுகளைப் பற்றி எடுத்துரைத்தார். கணினியில் தமிழ் மொழி எந்த அளவுக்குச் சிறப்பாக இயங்க முடியும் அதனை வளர்ச்சிகள் எவ்வாறு இருக்கின்றன முதலான செய்திகளைக் கூறுனார். அவையோர் அனைவரும் மிகவும் ஆர்வத்துடன் கூர்ந்து கவனிக்கும் அளவுக்கு அவருடைய விளக்கங்கள் அமைந்திருந்தன.
முத்து நெடுமாறானுடன் இல.வாசுதேவன்

சுப.நற்குணன், முத்து நெடுமாறன், செல்வன் சுப.ந.சரணமுதன்

கணினி, இணையம், தகவல் தொழில்நுட்பம், திறன்கருவி (Smart Device) , தட்டை (Tablet) ஆகியவற்றில் தமிழ்மொழி குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டிருக்கிறது; வியக்கத்தகு உயர்ச்சியை அடைந்திருக்கிறது என்பதை இந்த இணைய மாநாடு வெளிச்சம்போட்டுக் காட்டியிருக்கிறது. தமிழின் இந்த வளர்ச்சிக்கும் உயர்ச்சிக்கும் பங்காற்றிய பற்பலரில் நம் மலேசியக் கணிஞர் முத்து நெடுமாறனின் பங்களிப்பு மிக மிக முக்கியமானது - முகாமையானது என்றால் மிகையன்று. 

முத்து மலேசியத் தமிழர்களின் சொத்து! முத்து தமிழன்னையின் தவமுத்து!


@சுப.நற்குணன், திருத்தமிழ்



Wednesday, August 21, 2013

12ஆம் உலகத் தமிழ் இணைய மாநாடு * கோலாலம்பூர், மலேசியா

உத்தமம் எனப்படும் உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப அமைப்பு, 12ஆம் உலகத் தமிழ் இணைய மாநாட்டைக் கோலாலும்பூரில் கோலாகலமாக நடத்தியுள்ளது. இம்மாநாடு கடந்த ஆகத்து 15 - 18 வரையில் மலாயாப் பல்கலைக்கழகத்தில் நடந்தது. 'கையடக்கக் கருவிகளில் தமிழ்க் கணிமை' எனும் கருப்பொருளுடன் நடந்த இம்மாநாட்டில் மலேசியாவிலிருந்து 680 பேராளர்களும் அயலக நாடுகளைச் சேர்ந்த 150 பேராளர்களும் கலந்து சிறப்பித்தனர். இதுவரையில் நடந்த தமிழ் இணைய மாநாடுகளில் மிகவும் வெற்றிகரமாக நடந்த மாநாடாக இது கருதப்படுகிறது. 

மாநாட்டின் தொடக்கவிழா 15.08.2013 வியாழன் இரவு 8:00 மணிக்குத் தொடங்கியது. மலேசியத் தகவல், பல்லூடக அமைச்சர் மாண்புமிகு சபரி சிக் மாநாட்டினை அதிகாரப்படியாகத் தொடக்கிவைத்தார். 

மாநாட்டில் பேசிய மாநாட்டு ஏற்பாட்டுக் குழுத் தலைவர் சி.ம.இளந்தமிழ்,"இனிவரும் எதிர்காலம் எந்திரமயமாக இருக்கும். முழுக்க முழுக்க தகவல் தொழில்நுட்பமே எங்கும் எதிலும் அட்சி செய்யப் போகின்றது. வீட்டுக் வீடு எந்திர மனிதன் இருக்கப் போகின்றான். அந்த இயந்திய மனிதன் தமிழ் பேசவேண்டும் என்றால், இப்பொழுதே அதற்கான பணிகளை முடுக்கிவிட வேண்டும். மேலும், தமிழ்க் கணினி பயன்பாட்டைத் தமிழ் மக்கள் அதிகப்படுத்த வேண்டும்.  தமிழ் தகவல் தொழில் நுட்பத்தைத் உலகத்தரப்படுத்த வேன்டும். பன்னாட்டு நிறுவனங்களோடு இணைந்து தமிழுக்கான முன்னெடுப்புகளை முனைந்து செய்தல் வேண்டும். இந்த மாநாட்டின்வழி உத்தமம் அமைப்பு எதிர்காலத் தமிழுக்கு ஆக்கமான பணிகளையும் திட்டங்களையும் பற்றி சிந்திக்கும் மாநாடாக நடைபெறுகிறது" எனத் தெரிவித்தார்.

மலாயாப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் டான்ஶ்ரீ கவுத் பின் சேசுமான், இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் டாக்டர் மு.ஆனந்தகிருஷ்ணன் ஆகிய இருவரும் சிறப்புரை ஆற்றினர்.

இவர்களை அடுத்து, முரசு அஞ்சல் நிறுவநர் முத்து நெடுமாறன் முதன்மைப் பொழிவு நிகழ்த்தினார். இந்த முதன்மைப் பொழிவு அவையோர் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்ததோடு, கணினி இணைய உலகில் தமிழ்மொழியின் வளர்ச்சி அனைவருக்கும் பெரும் வியப்பை ஏற்படுத்துவதாக இருந்தது.

"கணினி, மடிக்கணினி, இணையம் ஆகியவற்றில் தமிழ்மொழி இன்று மிக எளிதாகவும் இயல்பாகவும் இயங்கும் நிலைமை உருவாகிவிட்டது. இன்று மிகப்பரவலாகிவரும் தட்டைகள் (Tablets), திறன்பேசிகள் (Smart Phones), கைக் கருவிகள் (Mobile Devices), குறுஞ்செயலிகள் (Apps) ஆகியவற்றிலும் தமிழ் வளர்ச்சிகண்டுள்ளது. ஆங்கிலம் போலவே தமிழையும் மிக எளிதாகப் பயன்படுத்தும் நிலைமை உருவாகிவிட்டது. ஆண்டிரோய்டு, விண்டோசு தளங்களிலும் தமிழைப் படித்தலும் எழுதுதலும் பெருகிவருகின்றன. தமிழின் வளர்ச்சி மேலும் விரவாக நடைபெற தமிழ் மக்கள் தமிழ்க் கணிமையைப் பயன்படுத்துபவர்களாக மாற வேண்டும். தமிழ்க் கற்றவர்கள் தமிழ்க் கணிமை பயனர்களாக மாற வேண்டும். அதோடு, தரமான பயனர்களாகவும் தரமிக்க கைக்கருவிகளைப் பயன்படுத்த முன்வரவேண்டும்." என்றார் முத்து நெடுமாறன்.

கைக்கருவிகளில் தமிழ்க் கணிமை, தமிழ்க் குறுஞ்செயலிகள், திறவூற்றுத் தமிழ் மென்பொருள்கள், தன்மொழியாக்கல், தமிழ்க் கணினிச் சொல்லாக்கம், கணினிக்குத் தமிழ் இலக்கண அறிவூட்டல், தமிழ் இணைய வளர்ச்சி, தமிழ்ச் சொல்திருத்தி, இயந்திர மொழி மாற்றம், இயன்மொழிப் பகுப்பாய்வுப் பிழைதிருத்தி, கணினி இணையம் வழி தமிழ்க் கற்றல் கற்பித்தல் முதலான துறைகள் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகள் படைக்கப்பட்டன. மாநாட்டு ஆய்வுக் கட்டுரைகள்  பத்ரி சேசாத்திரி பொறுப்பில் ஆய்வடங்கலாக வெளியிடப்பட்டது.

மாநாட்டையொட்டி கண்காட்சியும் மக்கள் கூடம் எனும் தமிழ்க் கணிமை விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. ஏறக்குறைய 10,000க்கும் அதிகமான தமிழ்ப்பள்ளி, இடைநிலைப்பள்ளி மாணவர்களும் இளையோர்களும் பொதுமக்களும் வந்திருந்து கலந்து பயன்பெற்றனர்.

மொத்தத்தில், இந்த உலகத் தமிழ் இணைய மாநாடு மலேசியத் தமிழ் மக்களிடையே குறிப்பாக மாணவர்களிடையேயும் இளையோர்கள் மத்தியிலும் தமிழ்க் கணிமை மீது ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் ஏற்படுத்துவதில் பெரும் வெற்றி பெற்றுள்ளது என்றால் மிகையாகாது.




மேலும் செய்திகள் விரைவில்...

Sunday, August 08, 2010

இணைய மாநாட்டு உரை:- மலேசியக் கணிஞர் முத்து நெடுமாறன்


நமது மலேசியா கண்டெடுத்த முத்து. தமிழ்க் கணினி உலகின் சொத்து. கணினியில் செயல்படும் 'முரசு' தமிழ்ச் செயலியை உருவாக்கி, பிறகு கைபேசியில் செயல்படும் 'செல்லினம்' தமிழ்ச் செயலியை உருவாக்கி தமிழைத் தொழில்நுட்பத்திற்குள் கொண்டுவந்து சாதனை படைத்தவர்.

கணினி, கைபேசிக்குள் தமிழ் வந்தால் போதாது. அடுத்துவரப்போகும் ஐபோன்(iPhone), ஐபேட்(iPad) தொழில்நுட்பத்திலும் தமிழை மிளிரச்செய்யும் பணிகளை அமைதியாகச் செய்துகொண்டிருப்பவர்; கணிமைத் தொழில்நுட்பத்தில் தமிழை அடுத்த தளத்திற்குக் கொண்டுசெல்வதில் முனைப்பாக இருப்பவர்.

இந்த அறிமுகத்திலேயே இந்நேரம் இவரைத் தெரிந்திருந்திருக்கும் உங்களுக்கு. ஆம், நமது மலேசியத் தமிழர்களின் நிகராளியாக இருந்து கணிமை உலகில் பன்னாட்டுத் தமிழ் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ள அந்தப் பெருமைக்குரியவர் நமது முத்து நெடுமாறன்தான்.

அண்மையில் தமிழ் செம்மொழி மாநாட்டுடன் இணை மாநாடாக நடந்த தமிழ் இணைய மாநாட்டில் முத்து நெடுமாறன் தமிழின் வளர்ச்சியை மேலும் பல படிகள் உயர்த்தும் வகையில் தம்முடைய அரிய கண்டுபிடிப்பு பற்றி பேசினார்.

கணினி, இணையத் தொழில்நுட்பத் துறையில் தமிழ்மொழி மிக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதற்கு இவருடைய உரை நல்ல சான்று. இவருடைய உரை தமிழ் மீதான நம்பிக்கையை பல மடங்கு கூட்டுகிறது. தமிழைப் பற்றிய தாழ்வு எண்ணங்களை உடைத்துப் போடுகிறது. அடுத்த நூற்றாண்டிலும் தமிழ் நிலைத்து வாழும் என்ற நம்பிக்கையை விதைக்கிறது.

அனைவரும் கேட்க வேண்டிய முத்து நெடுமாறன் அவர்களின் உரை நிகழ்படமாக இதோ:-

பகுதி 1:- (முத்து நெடுமாறன் உரை 6.50 நிமயத்தில் தொடங்குகிறது)

பகுதி 2:-


பகுதி 3:-

பகுதி 4:-

பகுதி 5:-

பகுதி 6:-


Wednesday, July 28, 2010

தமிழுக்குப் பொருளியல் மதிப்பு உண்டு

நாளது 14.07.2010இல் பாரிட் புந்தார், தமிழியல் நடுவத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் நான் ஆற்றிய உரை நாளிதழில் செய்தியாக வந்தது. அதனை இங்குப் பதிவிடுகிறேன். - சுப.ந

பாரிட் புந்தார் ஜூலை 15,

உலகின் மிகப் பெரிய பணக்கார நிறுவனமாகிய பில் கேட்சின் மைக்ரோ சொப்ட் உள்ளிட்ட கணினி தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்கள் தமிழுக்குப் பொருளியல் மதிப்பு உண்டு என்பதை உணர்ந்துள்ள காரணத்தால் அவை மிக வெற்றிகரமாக தமிழைச் சந்தைப்படுத்தி வெற்றிப்பெற்றுள்ளன என்று செம்மொழி மாநாட்டையொட்டி கோவையில் நடைபெற்ற உலகக் கணினி மாநாட்டில் கட்டுரை படைத்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட சுப.சற்குணன் தெரிவித்தார்.


உலகின் மிகப் ¦ÀâÂô பணக்கார நிறுவனமாகிய பில் கேட்சின் மைக்§Ã¡ ¦º¡ப்ட், கூகிள், யாகூ மெக்கிந்§¾¡Š, லினிக்Š,§¿¡க்கியா முதலான கணினிò ¦¾¡ழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்கள் இன்று தமிழைச் சந்தைப்படுத்தி ¦À¡ÕÇ¢Âø ¿¢¨Ä¢ø ¦ÅüÈ¢ô¦ÀüÚûÇÉ.இதன் மூலம் §¸¡டிக்கணக்கில் பணத்தை ஈட்டி வருகின்றனர்.உலக அளவில் ¦À¡ருளாதார மதிப்பு இருப்பதால்தான் விண்§¼¡Š §À¡ன்ற கணினி மென்¦À¡ருள்களில் ¬ங்கிலத்§¾¡டு சேர்ந்து தமிழும் இடம்பெற்றுள்ளது.


இதே ¦À¡ருளியல் மதிப்பை உணர்ந்துள்ளதால் §¿¡க்கியா §À¡ன்ற கைப்பேசிகளில் தமிழும் இடம்பெற்றுள்ளன. இன்று ஆங்கிலத்திற்கு இணையாக தமிழ்¦Á¡ழி இணையத்தில் §¸¡§Ä¡ச்சி வருகின்றது எýபது உண்மை ±ýÚ þíÌ À¡Ã¢ð Òó¾¡÷ ¾Á¢Æ¢Âø ¿ÎÅò¾¢ø ¾Á¢Æ¢Âø ¬ö×ì ¸Çõ,¾Á¢ú Å¡úÅ¢Âø þÂì¸í¸Ç¢ø ²üÀ¡ðÊø ¿¨¼¦ÀüÈ Á¡¿¡ðÎô ÀÂý¸¨Çô À¸¢÷óÐ ¦¸¡ñ¼ì Üð¼ò¾¢ø ÍÀ.ºü̽ý §Áü¸ñ¼Å¡Ú ¦¾Ã¢Å¢ò¾¡÷.


அண்மையில் §¸¡வையில் நடந்த தமிழ் இணைய மாநாட்டில் தமிழ்¦Á¡ழியில் புதிய புதிய ¦¾¡ழில் நுட்பங்களை காண முடிந்தது. புதுப்புது மென்¦À¡ருள்கள், கணினி நிரலிகள் உருவாகி உள்ளன. முதன்முறையாக ¦¾¡டுதிரை கணினியை அந்த மாநாட்டில் காண முடிந்தது. பலரும் மிக வியப்புடன் அதனைப் பயன்படுத்தினர்.

கற்றல் கற்பித்தல் ¦¾¡டர்பாக பல ஆக்கங்கள் இன½யத்தில் நிகழ்ந்துள்ளன. இவை அனைத்தும் தமிழுக்குப் ¦À¡ருளாதார மதிப்பு இருப்பதைப் பறைசாற்றுகின்றன. இன்று உலக அளவில் தமிழ்¦Á¡ழி வணிக ¦Á¡ழியாக வளர்ந்துள்ளது என்பதற்கு கணினி, இணையம் சார்ந்த வளர்ச்சிகளும் கண்டுபிடிப்புகளும் நல்ல சான்றாக உள்ளன.


தமிழைப் ¦À¡ருளியல் மதிப்புள்ள ¦Á¡ழியாக வளர்த்தெடுக்க மலேசியத் தமிழர்களும் பாடாற்றியுள்ளனர். குறிப்பாக முத்து நெடுமாறன் முரசு தமிழ் மென்¦À¡ருளை வெளியிட்டு உலகச் சந்தையில் வணிகப்படுத்தி இருக்கிறார். மலேசியாகினி இன½யத்தளம் §Á¡பைல்கினி என்ற கைப்பேசி குறுஞ்செய்தி சேவையைத் தமிழில் ஏற்படுத்தி தமிழ்¦Á¡ழியைப் ¦À¡ருளியல் மதிப்புள்ள ¦Á¡ழியாக உருவாக்கியுள்ளது.


தமிழ் §º¡று §À¡டுமா? என்றும் தமிழுக்குப் ¦À¡ருளாதார மதிப்பு உண்டா?’ என்றும் இன்று தமிழர்களே கேட்க ¦¾¡டங்கிவிட்டனர்.ஆங்கிலம் உலக ¦Á¡ழி. அதை கற்றால்தான் முன்னேற்றலாம் என்று நம்புகின்றனர். அதனால் தமிழைப் புறக்கணிக்கின்றனர்.


எந்த ¦Á¡ழியும் தானாக வலிமை பெறுவது இல்லை, ¦À¡ருளாதார மதிப்பு பெறுவது இல்லை. ஆங்கிலம் உலக¦Á¡ழி ஆனது ஆங்கிலேயனால் தானே தவிர, அந்த ¦Á¡ழியினால் அல்ல. சீனம் வணிக ¦Á¡ழியாக இந்த நாட்டில் இருக்கிறது என்றால் சீனர்களின் முனைப்பினால்தா§É தவிர, சீன ¦Á¡ழி தானாக அப்படி ஆகவில்லை.



இதேபோல், தமிழ் வாழ வேண்டும், வளர வேண்டும், பொருளியல் மதிப்பு பெற வேண்டுமானால் தமிழர்கள் அதை நோக்கி சிந்தித்து செயல்பட வேண்டும்.அதைவிடுத்து, தமிழுக்கு ஒன்றுமே செய்யாமல் அல்லது தமிழில் எதையும் செய்யாமல், எல்லாச் சூழலிலும் தமிழை முன்படுத்தாமல் வாளாவிருந்துவிட்டு தமிழ் வளரவில்லை என்று குறை சொல்லுவது சரியல்ல என சுப.சற்குணன் குறிப்பிட்டார்.

  • நன்றி:மக்கள் ஓசை (22.07.2010)


Wednesday, July 14, 2010

செம்மொழி மாநாட்டில் மலேசியத் தமிழர்கள்

சூன் 23 – 27 கோவையில் பெருமாண்டமாக நடந்து முடிந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் மலேசியத் தமிழர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். தமிழகப் பேராளர்களுக்கு அடுத்த நிலையில் மலேசியாவிலிருந்துதான் அதிகமானோர் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசியத் தமிழ்க் கல்வி அதிகாரிகள், தமிழ் எழுத்தாளர் சங்கம், தமிழ் இளைஞர் மணிமன்றம், தமிழ் நெறிக் கழகம், அரசியல் தலைவர்கள், தமிழ் அமைப்பினர், தமிழ் அறிஞர்கள், ஊடகவியலாளர்கள், தமிழ்ப் பற்றாளர்கள் என 350க்கும் மேற்பட்ட மலேசியத் தமிழர்கள் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளனர்.

மாநாட்டு ஆய்வரங்குகளில் மலேசியத் தமிழர்களின் கட்டுரைகளும் அரங்கேறின. செம்மொழி மாநாட்டில் மலேசியாவிலிருந்து 23 ஆய்வுக் கட்டுரைகள் படைக்கப்பட்டன. உடன் நடைபெற்ற தமிழ் இணைய மாநாட்டில் தமிழ்க் கணினி, இணையம் தொடர்பில் 7 கட்டுரைகள் இடம்பெற்றன.

[மலேசியத் தமிழர்களின் மாநாட்டுப் படைப்புகள் நிகழ்ப்படங்களாக (video) திருத்தமிழ் வலைப்பதிவில் விரைவில் வெளியிடப்பெறும். தமிழ் இணைய மாநாட்டில் இடம்பெற்ற என்னுடைய படைப்பை பதிவேற்றியுள்ளேன். காண்க.]

ஏற்கனவே, 1966இல் முதலாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை நடத்தி உலக அரங்கில் தமிழுக்கு மகுடம் சூட்டியவர்கள் மலேசியத் தமிழர்கள் என்பது வரலாறு. இப்போது புதிய நூற்றாண்டில் தமிழுக்குப் புத்தெழுச்சி ஊட்டியுள்ள செம்மொழி மாநாட்டில் மலேசியத் தமிழர்களின் பங்களிப்பும் பெருமளவில் இருக்கிறது என்பது புதிய வரலாறு.

வரலாறு காணாத அளவில் வெகு சிறப்பாக நடந்த தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கலந்துகொண்டோம் என்ற பெருமையோடு நின்றுவிடாமல், மலேசியப் பேராளர்கள் அனைவரும் நாட்டில் தமிழ் உணர்வு பெருகவும் தமிழ் எழுச்சி பெறவும் தங்களால் ஆன சீரிய பணிகளை ஆங்காங்கே முன்னெடுக்க வேண்டும். இளையோரிடத்தில் தமிழ்ப் பற்றைச் செழிக்கச் செய்யும் செயற்பாடுகளை நிகழ்த்திட வேண்டும். புதிய சிந்தனையோடு தமிழின் வளர்ச்சிக்கு வித்திடும் வழிவகைகளைக் காண வேண்டும். இவ்வாறு செய்வது ஒன்றே தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கலந்துகொண்டதற்கு பொருளுடையதாக அமையும்.

மாநாட்டில் கலந்துகொண்ட மலேசிய அன்பர்களின் படத்தொகுப்பை கீழே வழங்குகிறேன்.

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தினர்
பாப்பா பாவலர் ஐயா முரசு.நெடுமாறன், சுப.நற்குணன்
கணித்தமிழ் அறிஞர்களுடன் தமிழறிஞர் ஐயா.சீனி நைனா முகம்மது
தமிழ் இளைஞர் மணிமன்றத் தலைவர் முரளியும் மன்ற மணிகளும்
மைக்ரோசாப்டு நிறுவன ஊழியர்கள் மைக்கேல், திங் சியு பே ஆகியோருடன் சுப..நற்குணன், விரிவுரைஞர் மன்னர் மன்னன், சி.ம.இளந்தமிழ்
மலேசியத் தமிழ்நெறிக் கழகத்தின் அருள்முனைவர், மாரியப்பனார்
தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் தேவையில்லை எனக் கருத்துரை வழங்கி பலத்த கைதட்டல் பெற்ற திருமதி நாகேசுவரி
எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ.இராஜேந்திரன், இளம் எழுத்தாளர்கள்

மாண்புமிகு கனிமொழி அவர்களுடன் கல்வி அதிகாரி புஷ்பராணி
சுப.நற்குணன், திருமதி.நாகேசுவரி, மலேசிய அறிஞர் இர.திருச்செல்வம், முகமை அமைப்பாளர் சு.பாஸ்கரன், ஆசிரியர் முத்தரசன், விரிவுரைஞர் அருட்செல்வன், கோவி.மதிவரன்

மலேசியக் கல்வி அதிகாரிகள்


Monday, July 12, 2010

செம்மொழி மாநாட்டு மணி(money)ச் செய்திகள்


1.மாநாடு நடைபெற்ற நாட்கள்:- 5
2.தொடக்க விழாவில் கலந்து கொண்டவர்கள்:- 200,000
3.இனியவை நாற்பது ஊர்வலத்தைக் கண்டு களித்தவர்கள்:- 500,000
4.கருத்தரங்கம், கவியயரங்கத்தைப் பார்த்தோர் (நிரலாக):- 150,000
5.கண்காட்சி அரங்கத்திற்கு வந்து பார்வயிட்டோர்:- 170,000
6.மாநாட்டு சிறப்பு மலர் கட்டுரைகள்:- 129


7.மாநாட்டு மலரில் இடம்பெற்ற கவிதைகள்:- 34
8.கட்டுரையாளர்களுக்கு வழங்கப்பட்ட மாநாட்டு மலர்கள்:- 3200
9.விற்பனையாகிய மாநாட்டு மலர்கள்:- 2300
10.இணைய மாநாட்டில் படைக்கப்பட்ட கட்டுரைகள்:- 110
11.இணைய மாநாட்டு மலரில் இடம்பெற்ற கட்டுரைகள்:- 130
12.கலந்துகொண்ட ஆய்வறிஞர்கள் எண்ணிக்கை:- 300


13.ஆய்வரங்கத்தின் மொத்த அமர்வுகள்:- 239
14.செம்மொழி மாநாட்டில் வாசிக்கப்பட்ட கட்டுரைகள்:- 913
15.செம்மொழி மாநாட்டின் மொத்தப் பொருண்மைகள்:- 55
16.மாநாட்டிற்கு வந்த வெளிநாட்டினர்:- 840
17.கலந்துகொண்ட நாடுகளின் எண்ணிக்கை:- 50

18.மாநாட்டில் வழங்கப்பட்ட உணவு பொட்டலங்கள்:- 400,000
19.பேராளர்கள் தங்கியிருந்த விடுதிகள்:- 92
20.பேராளர்கள் தங்கிய அறைகளின் எண்ணிக்கை:- 1642
21.மாநாட்டுக்கு வந்த விருந்தினர்கள் எண்ணிக்கை:- 2065
22.மாநாட்டுக்குச் செலவான மொத்த தொகை:- ரூ68 கோடியே 52இலட்சம்
23.மாநாட்டுக்காக கோவையில் ஏற்படுத்தப்பட்ட அடிப்படை கட்டமைப்புப் பணிகளுக்காகச் செலவிடப்பட்ட தொகை:- ரூ243 கோடி

  • நன்றி:-தினகரன், 29.6.2010

Saturday, July 10, 2010

தமிழ் இணைய மாநாட்டில் சுப.நற்குணன் பேச்சு (காணொளி)



கடந்த சூன் 23 - 27 வரையில், தமிழ்நாடு கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு வெகு பெருமாண்டமாக நடந்தேறியது. அதனுடன் சேர்ந்து, தமிழ் இணைய மாநாடும் நடைபெற்றது.


அதில், 24-6-2010ஆம் நாள் மாலையில் 'சிங்கை நா.கோவிந்தசாமி' ஆய்வரங்கில் என்னுடைய கட்டுரையினைப் படைத்தளித்தேன். அந்த அரங்கத்திற்கு ஐயா.நா.கணேசன் அவர்கள் முன்னிலை வகித்தார். அவ்வரங்கில் எனக்கு முன்னதாக ஐயா. காசி ஆறுமுகம் அவர்களும், முனைவர் ஐயா.துரை.மணிகண்டன் அவர்களும் கட்டுரை படைத்தனர்.


நான் படைத்தளித்த கட்டுரையின் தலைப்பு, 'வளர்ந்துவரும் மலேசியத் தமிழ் இணைய ஊடகம்' என்பதாகும். திருத்தமிழ் அன்பர்களின் பார்வைக்காக அதன் காணொளியை இங்கு பதிவிடுகிறேன். கண்டு மகிழ்க!


பகுதி 1:-


பகுதி 2:-


பகுதி 3:-


பகுதி 4:-

பி.கு:-இதே காணொளிகளை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு இணையத் தளத்திலும் காணலாம். அதற்குக் கீழே உள்ள தொடுப்புகளைச் சொடுக்கவும்.

1.http://www.wctc2010.org/videos.php?page=34&p=0 கோவிந்தசாமி அரங்கம் 8, 9, 10

2.http://www.wctc2010.org/videos.php?page=35&p=0 கோவிந்தசாமி அரங்கம் 11

Sunday, June 27, 2010

செம்மொழி மாநாடு வரலாறு காணாத நிகழ்ச்சி; தமிழுக்கு எழுச்சி

சூன் திங்கள் 23 தொடங்கி 27 வரையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, தமிழகம் கோவை நகரில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உலகமெங்கும் உள்ள பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் தற்போது கோவையில் குவிந்துள்ளனர். நூற்றுக்கணக்கில் தமிழ் அறிஞர் பெருமக்கள் பத்துக்கும் மேற்பட்ட ஆய்வரங்கங்களில் கட்டுரைகளைப் படைத்துக்கொண்டிருக்கின்றனர்.


ஆய்வரங்கம், கவியரங்கம், கலந்தாய்வரங்கம், கலைநிகழ்ச்சி, நாடகம், இசைநிகழ்ச்சி, கண்காட்சி எனப் பல பல நிகழ்ச்சிகள் மிகவும் எழுச்சியோடும் நேர்த்தியாகவும் நடந்துகொண்டிருக்கின்றன.


எல்லாவகையில் மிகுந்த கவனமெடுத்து இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது; மிக நேர்த்தியாகவும் கட்டுக்கோப்பாகவும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் நடத்தப்படுகின்றன; நேரக் கட்டுப்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது; பாதுகாப்பு நடவடிக்கைகள் வெகு செப்பமாக இருக்கின்றன.


இன்னும் சொல்லப்போனால், எந்த விதமான பெரிய குறைபாடுகளும் இல்லை என்று எல்லாரும் பாராட்டும் அளவுக்கு இந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.



இப்படியொரு எழுச்சியையும் பிரமாண்டத்தையும் நிகழ்த்திக்காட்டி; உலகத்தின் பார்வையைத் தமிழின் பக்கம் திருப்பியிருக்கும் பெருமையும் பெருமிதமும் நிச்சயமாகத் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களையே சாரும் என்றால் அதில் மறுப்பதற்கோ மறைப்பதற்கோ எதுவுமில்லை.


தமிழக முதல்வர் அவர்களுடைய நேரடியான ஈடுபாடும், ஒவ்வொரு நாளும் அவர் மாநாட்டு அரங்கத்திற்கு வந்து தமிழோடு இணைந்து இன்புற்று இருப்பதும் இந்த மாநாட்டின் வெற்றிக்குக் காரணமாகும். தம்முடைய முக்கியமான அலுவல்களுக்கு இடையிலும் மாநாட்டில் தவறாமல் பங்கேற்கும் முதல்வர் அவர்களின் தமிழ் உள்ளம் போற்றுதலுக்கு உரியது; வணக்கத்திற்கு உரியது.


உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடக்கும் கோவை, கொடிசியா தொழிற்கல்வி வளாகத்தில் 9ஆவது தமிழ் இணைய மாநாடும் வெகு சிறப்பாக நடந்துகொண்டிருக்கிறது. பேராளர்களும் பார்வையாளர்களும் மிரண்டுபோகும் அளவுக்குக் கணினி, இணையத் துறையில் தமிழ் வளர்ச்சி தொடர்பான ஆய்வுகளும் புதுப்புதுக் கண்டுபிடிப்புகளும் எடுத்துக்காட்டப்பட்டன; விளக்கிச் சொல்லப்பட்டன.


உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு - தமிழ் இணைய மாநாடு ஆகிய இரண்டிலும் கலந்துகொள்ள நம் மலேசியாவிலிருந்து 200க்கும் மேற்பட்டோர் இங்கு வந்துள்ளனர். 30க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் மலேசியத் தமிழர்களால் படைக்கப்பட்டன. தமிழ் இணைய மாநாட்டில் மலேசியாவிலிருந்து 7 கட்டுரையாளர்கள் ஆய்வுக் கட்டுரைகளைப் படைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


உலகத் தரத்திலான இவ்விரு மாநாடுகளிலும் கலந்துகொண்டதையும் தமிழ் இணைய மாநாட்டில் கட்டுரை படைத்ததையும் மிகவும் பெருமையும் பூரிப்பும் அடைகிறேன். அந்தப் பூரிப்பின் உந்துதலால், தமிழ் இணைய மாநாட்டுக் கணினி அறையிலிருந்து இந்தப் பதிவை இடுகின்றேன்.

மாநாட்டில் எடுக்கப்பட்ட சில படங்களைக் கீழே தருகிறேன்.


>மாநாட்டிற்கு அலையென திரண்ட மக்கள்

>தொல்காப்பியர் அரங்கில் நானும் நண்பர் கோவி.மதிவரனும்

>புத்தகக் கண்காட்சி அரங்கம்

>இனியவை நாற்பது அலங்கார வாகன ஊர்வல ஊர்தி

>தமிழ் இணைய மாநாட்டுக் கண்காட்சி அரங்கு

>தமிழ் - தமிழர் வரலாற்றுக் கண்காட்சி அரங்கு

> மாநாட்டு அரங்கில் மலேசிய அறிஞர் இர.திருச்செல்வம்
> மலேசியக் கல்வியாளர்கள் குழு

> தமிழ் இணைய மாநாட்டில் கட்டுரை படைக்கிறேன்

@தமிழ்ச் செம்மொழி மாநாடு - தமிழ் இணைய மாநாடு அரங்கிலிருந்து சுப.நற்குணன்


Tuesday, June 22, 2010

தமிழ் இணைய மாநாடு 2010இல் மலேசியப் பேராளர்கள்

சூன் 23 தொடங்கி 27 வரையில், தமிழ்நாடு கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு கோலாகலமாக நடைபெறவுள்ளது அனைவரும் அறிந்ததே. ஆனால், அதே நாளில்; அதே கோவை நகரில் உலக அளவிலான மற்றொரு மாநாடும் நடைபெறவிருக்கிறது என்பது பலரும் அறியாத செய்தி.


உலகத்தமிழ் தகவல் தொழில்நுடப மன்றம்(உத்தமம்) எனப்படும் அமைப்பின் ஏற்பாட்டில் 9ஆவது தமிழ் இணைய மாநாடு 2010, கோவை நகரத்தில் சிறப்புடன் நடைபெற உள்ளது.

கடந்த 2001இல் ஆகஸ்டு மாதம் 26 முதல் 28 வரை இந்தத் தமிழ் இணைய மாநாடு மலேசியாவில் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். முரசு தமிழ் மென்பொருளைத் தமிழ்க் கணினி உலகத்திற்கு அளித்த மலேசியத் தமிழர் முத்து நெடுமாறன் ஏற்பாட்டில் இந்த மாநாடு மலேசியாவில் நடந்தேறியது.

தற்போது ஒன்பதாவது முறையாக இந்த மாநாடு நடைபெறுகிறது. உலகம் முழுவதிலும் இருக்கும் தமிழ் கணினித்துறை அறிஞர்கள், தொழிநுட்பர்கள், ஆர்வலர்கள் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர். தமிழ்க் கணினி, இணையத்தை வளர்த்தெடுக்கும் நோக்கத்தோடு நடைபெறும் இம்மாநாட்டின் ஆய்வரங்கங்கள் 4 அரங்குகளில் 36 நிகழ்வுகளாக (Sessions) இடம் பெறவுள்ளன. இதில் 15 தலைப்புகளிலிருந்து 138 ஆய்வு கட்டுரைகள் இடம் பெறுகின்றன.

தமிழ் இணைய மாநாட்டில் மலேசியப் பேராளர்களும் திரளாகக் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளனர். இம்மாநாட்டில் மலேசியப் பேராளர்களின் பங்களிப்பு குறிப்பிட்டுச் சொல்லத்தக்க அளவில் இருக்கிறது.

நம் மலேசியாவைச் சேர்ந்த முத்து நெடுமாறன், சி.ம.இளந்தமிழ் ஆகிய இருவரும் இரண்டு அமர்வுகளுக்குத் தலைமயேற்க உள்ளனர். தமிழ்க் கணினி, இணைய வளர்ச்சியில் மிகப்பெரும் பங்காற்றியுள்ள இவர்கள் இருவருக்கும் இப்படியொரு வாய்ப்பு கிடைத்திருப்பது மலேசியத் தமிழர்களுக்குப் பெருமையளிப்பதாக உள்ளது.


மேலும், மலேசியாவிலிருந்து நால்வர் இம்மாநாட்டில் ஆய்வுக் கட்டுரைகள் படைக்கவுள்ளனர். அதன் விவரம் பின்வருமாறு:-

1.சுப.நற்குணன், (திருத்தமிழ் வலைப்பதிவர்) தலைப்பு: வளர்ந்து வரும் மலேசியத் தமிழ் இணைய ஊடகம்

2.இளங்குமரன், (மலாயாப் பல்கலைக்கழகம் நூலகப் பொறுப்பாளர்) தலைப்பு: மின்னணு நூலகம்


3.மணியரசன் முனியாண்டி, (துவான்கு பைனூன் ஆசிரியர் பயிற்சிக் கழக விரிவுரைஞர்) தலைப்பு ; இணையத்தில் தமிழ் மின் அகராதிகள்: ஒரு பார்வை


4.இரவீந்திரன் கே.பால் (தமிழ் மென்பொருள் மேம்பாட்டாளர்) தலைப்பு: தமிழ்த் தட்டச்சு மென்பொருள்கள் வடிவமைப்பும் வளர்ச்சியும்


5.மன்னர் மன்னன் (மலாயாப் பல்கலைக்கழக விரிவுரைஞர்) தலைப்பு: தொலைதூர தமிழ்க்கல்வியில் இணையம் வழிக் கற்றலின் பங்களிப்பு

உலக அளவில் தமிழ்க் கணினி, இணையத்துறையில் மலேசியத் தமிழர்களும் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க பங்களிப்பையும் ஆக்கங்களையும் செய்து வருகின்றனர் என்பதற்கு இதுவொரு நற்சான்றாகும்.

மேல்விவரங்களுக்குக் காண்க:-

1.தமிழ் இணைய மாநாடு இணையத்தளம்
2.மாநாட்டு நிகழ்ச்சி நிரல் / கட்டுரைகள்
3.மாநாட்டுக் கருத்தரங்கம் / கண்காட்சி


Blog Widget by LinkWithin