Sunday, August 08, 2010

இணைய மாநாட்டு உரை:- மலேசியக் கணிஞர் முத்து நெடுமாறன்


நமது மலேசியா கண்டெடுத்த முத்து. தமிழ்க் கணினி உலகின் சொத்து. கணினியில் செயல்படும் 'முரசு' தமிழ்ச் செயலியை உருவாக்கி, பிறகு கைபேசியில் செயல்படும் 'செல்லினம்' தமிழ்ச் செயலியை உருவாக்கி தமிழைத் தொழில்நுட்பத்திற்குள் கொண்டுவந்து சாதனை படைத்தவர்.

கணினி, கைபேசிக்குள் தமிழ் வந்தால் போதாது. அடுத்துவரப்போகும் ஐபோன்(iPhone), ஐபேட்(iPad) தொழில்நுட்பத்திலும் தமிழை மிளிரச்செய்யும் பணிகளை அமைதியாகச் செய்துகொண்டிருப்பவர்; கணிமைத் தொழில்நுட்பத்தில் தமிழை அடுத்த தளத்திற்குக் கொண்டுசெல்வதில் முனைப்பாக இருப்பவர்.

இந்த அறிமுகத்திலேயே இந்நேரம் இவரைத் தெரிந்திருந்திருக்கும் உங்களுக்கு. ஆம், நமது மலேசியத் தமிழர்களின் நிகராளியாக இருந்து கணிமை உலகில் பன்னாட்டுத் தமிழ் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ள அந்தப் பெருமைக்குரியவர் நமது முத்து நெடுமாறன்தான்.

அண்மையில் தமிழ் செம்மொழி மாநாட்டுடன் இணை மாநாடாக நடந்த தமிழ் இணைய மாநாட்டில் முத்து நெடுமாறன் தமிழின் வளர்ச்சியை மேலும் பல படிகள் உயர்த்தும் வகையில் தம்முடைய அரிய கண்டுபிடிப்பு பற்றி பேசினார்.

கணினி, இணையத் தொழில்நுட்பத் துறையில் தமிழ்மொழி மிக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதற்கு இவருடைய உரை நல்ல சான்று. இவருடைய உரை தமிழ் மீதான நம்பிக்கையை பல மடங்கு கூட்டுகிறது. தமிழைப் பற்றிய தாழ்வு எண்ணங்களை உடைத்துப் போடுகிறது. அடுத்த நூற்றாண்டிலும் தமிழ் நிலைத்து வாழும் என்ற நம்பிக்கையை விதைக்கிறது.

அனைவரும் கேட்க வேண்டிய முத்து நெடுமாறன் அவர்களின் உரை நிகழ்படமாக இதோ:-

பகுதி 1:- (முத்து நெடுமாறன் உரை 6.50 நிமயத்தில் தொடங்குகிறது)

பகுதி 2:-


பகுதி 3:-

பகுதி 4:-

பகுதி 5:-

பகுதி 6:-


Blog Widget by LinkWithin