![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhSR6bciCKNw53USqYCW41SlgLF_fWwKtfp31DEVME748gMAUVIVelOB6JuFfU-QHJyulpGIoOElc6IH4gnG5eG3jJ8hHe1wXV-bUVRIloYVreTC7b0mFwCq65tFSZkz8uj6RchGg/s400/tim%2520martin.jpg)
Saturday, May 30, 2009
தமிழர் நலனுக்காக பிரிட்டன் குடிமகன் போராடுகிறார்; ஆதரவு கையொப்பமாவது இடுங்கள் தமிழர்களே..!
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhSR6bciCKNw53USqYCW41SlgLF_fWwKtfp31DEVME748gMAUVIVelOB6JuFfU-QHJyulpGIoOElc6IH4gnG5eG3jJ8hHe1wXV-bUVRIloYVreTC7b0mFwCq65tFSZkz8uj6RchGg/s400/tim%2520martin.jpg)
Friday, May 29, 2009
தலைவர் பிரபாகரன் இருக்கிறார்:- தொடரும் ஆதாரங்கள்
இணைப்பைச் சொடுக்கவும்:-
Tuesday, May 26, 2009
மாவீரர் நாளில்.. மீண்டும் பிரபாகரன்:- விகடன் நம்பிக்கை
ஆனால், புலிகள் அமைப்பின் பிரதிநிதிகளாக உலகம் முழுக்க விரவியிருக்கும் முக்கியஸ்தர்கள், “அண்ணன் மிக பத்திரமா இருக்கார். அவருக்குப் பாதுகாப்பாக முக்கியத் தளபதிகளும் போராளிகளும் இருக்கிறார்கள். விரைவிலேயே அண்ணனின் வீர உரையை உலகம் கேட்கும்!” என உறுதியாகச் சொல்கிறார்கள்.
மூவாயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகள்… இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள்… பிரபாகரனின் சம காலத் தளபதிகள்… என நினைக்கவே நெஞ்சு பதறவைக்கும் ஈழத்து இழப்புகளையும், ஈழத்தின் கடைசி நிமிடங்களையும் வேதனையோடு நம்மிடம் பகிர்ந்துகொண்டார்கள் அந்தப் பிரதிநிதிகள்.
அடுத்து என்ன நடக்கும் என்று அவருக்குத் தெரியும்!
“முப்பது வருடப் போராட்ட காலத்தில் ‘அடுத்து என்ன நடக்கும்?’ என்பதை யூகிப்பதில் தலைவர் ரொம்பவே கெட்டிக்காரர். கடைசிக் கட்ட நெருக்கடிகள் குறித்து, அவருக்குப் பல மாதங்களுக்கு முன்பே தெரியும். அதனால்தான், கடைசிவரை பதிலடித் தாக்குதல் நடத்தாமல், ஆயுதங்களைப் பதுக்குவதிலேயே குறியாக இருந்தார். இரண்டு முறை மட்டுமே தாக்குதல் நடத்திய புலிகளின் டாங்கிப் படைகள், அதன்பிறகு எங்கு போயின என்பது யாருக்கும் தெரியாது..! (மேலும் படிக்க)
Monday, May 25, 2009
தலைவர் எங்கே?: பொய்ச் செய்தி திட்டமிட்டு பரப்பப்படுகிறதா?
என்ன நடந்தது என்ற உண்மையைச் சொல்ல யாராவது எத்தனிக்க முயலும் போதெல்லாம் முன்னுக்குப் பின் முரணாக அறிக்கைகள் விடுத்து மக்கள் உணர்வுகளோடு விளையாடுவதும், போராட்டத்தை நீர்த்து விடச் செய்வதுமான வேலை நடந்து வருகிறது.
இலங்கையின் வல்லமை அத்தனை பெரிதா… அல்லது புலிகள் அந்த அளவு இந்த உலகை அச்சுறுத்திவிட்டார்களா… பார்ப்போம்.
இன்னும் ஒரு 24 மணிநேரம் பொறுத்திருந்து பதிவு செய்வோம். ஒரு தகவல் என்ற அடிப்படையில் மட்டுமே இப்போது பின்வரும் செய்தியைத் தருகிறோம். அதாவது... (மேலும் படிக்க)
Saturday, May 23, 2009
உங்கள் வலைப்பதிவு முடக்கப்படலாம்! உடனடி நடவடிக்கை எடுக்கவும்!
Friday, May 22, 2009
தேசியத் தலைவர் உயிருடனும் நலமுடனும் உள்ளார்: புலிகள் தலைவர் அறிவிப்பு
இது தொடர்பாக அறிவழகன் 'தமிழ்நெட்' இணையத்தளத்துக்கு மேலும் தெரிவித்துள்ளதாவது:
எமது பாசத்துக்குரிய தேசியத் தலைவர் தமிழ் மக்களை எதிர்காலத்தில் சரியான தருணத்தில் தொடர்பு கொள்வார்.
தமிழீழ விடுதலைக்கு ஆதரவுக் குரல் எழுப்பி வரும் உலகத் தமிழ்ச் சமுதாயத்தை குழப்புவதற்காக சிறிலங்கா அரசாங்கம் தமிழீழ தேசியத் தலைவர் தொடர்பான பொய்ப் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விடுவதில் முனைப்பாக உள்ளது என்றார் அவர்.
சிறிலங்காவில் உள்ள மூத்த பத்திரிகையாளர் ஒருவர் மூலமாக தனது அடையாளத்தை உறுதிப்படுத்திய அறிவழகன், பாதுகாப்புக் காரணங்களுக்கான தனது இருப்பிடத்தை வெளிப்படுத்தவில்லை எனவும் 'தமிழ்நெட்' செய்தியில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
ஆதாரம்: புதினம் செய்தி
Thursday, May 21, 2009
மரணத்தை வென்றவர்; தமிழர் மறையாக வாழ்பவர்; தலைவர் பிரபாகரன்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhS24uEgVeT0It2DVkOz5nyeOq29M9ZHdir-ST0VRpmoAFZEUQSg6G3HkewhyTz5qgQg_TSA9ykjuVlEFL-JyPijHE5vE74VgjEsg-dohs7DjL0Nm22ePIM-SMGnJ7LsBLmmgw72A/s400/praba+5.bmp)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiKDEdEXGNHI8S-FuMCWSegSF6L8LyuYPIitGioZLny6-JZfAbSButYgQCYRDPlH_G5s_w4DddfVeckm5pwgjoqf4XvKIOAGLSz-WY3YwtTZNYAlGhhZFK_dtktFjtAY4wJTgfEew/s400/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D5.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEicOjD-8syW5zxi6D4r0TgXzULpmxaU_x-g0NuA_jm3MXeulQZWpSPr53Mn9k4eojXGKBdEwtO6Z4CxYGu3RRXnOZe31AWwyV0J9v4OyyvXr6J-LmoW9i6ZsOpCz_bKuYyIGsQQww/s400/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D3.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjVywFmuV43FYHDjZ7Iy0yAt-l5WFm0NBth5UP5b2rbRn6mAf9txI_9N6xcDzity4kpNYXPAPxU1E0w6tKbZrJqZp7mEBPoPWE4MLPPVpKBUxI4h7QhNlSQPw6F4LwCV06WLJfJLg/s320/praba+2.bmp)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiOgGNpFzPUTqFKxMj_wXcsNUbPpZCPoc1Wq8q-CWm31fYqu7lI9qJoAX9BGW6vvh7HtsL2S_zNhq5dfDyHYl40WcQStfWbD0iKdxx-VIRyjBjaetPqOePyogyoThED4LObjIom1Q/s400/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D2.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhLjP80E1nCAlcZrLahyJVV7YgxRk-PNGN9IVAoC5emKyvidYjuYJDrhUdbq3SV9ijE6w_KewoExodVMJj_uyYalUs3n_QyqoITqnIoLV9iBesaMRzoauhlNstMvbwOQW_svrS18w/s320/praba+1.bmp)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjIsdvFnrf_t27nHf1ux69cCWL9wKPC6KU63jYteTlBiR4K1FU2ADuG3KkcW5p3JqU1YD9hyxn3dxQ9eqQ8ud42ArYOwTrQV-6Eq5lynmxGWZ0D-fMoC9c_xUM6bBzOB-s5DAEnFQ/s320/untitled.bmp)
நன்றி:கை.அறிவழகன்
Tuesday, May 19, 2009
நம்பிக்கையோடு இருப்போம்..! பொறுமையோடு காத்திருப்போம்..!
சிறிலங்கா சொல்லும் செய்தியையும் காட்டும் படங்களையும் அப்படியே எடுத்து உலக ஊடகங்கள் ஓயாமல் ஒலி – ஒளிபரப்பிக் கொண்டிருக்கின்றன.
இணைய ஊடகத்திலும் இச்செய்திகள் காட்டுத் தீயாகப் பரவிக் கொண்டிருக்கின்றன. கொடுந்தீயாகத் தமிழர்கள் உணர்வுகளை சுட்டெரித்துக் கொண்டிருக்கின்றன.
இந்த அவலச் செய்திகளுக்கு இடையில், தலைவர் பிரபாகரன் அவர்கள் பற்றிய நம்பிக்கை இன்னமும் முற்றிலும் தளர்ந்துவிடவில்லை – தமிழர் மனங்கள் இன்னமும் சோர்ந்துவிடவில்லை – உணர்வுகள் இன்னமும் உறங்கிவிடவில்லை!
இருந்தாலும்கூட, வல்லாதிக்க இலங்கையின் போக்கினாலும் வல்லரசு ஊடகங்களின் தாக்கத்தாலும் உலகமெங்கும் விரிந்து பரந்திருக்கும் தமிழர்கள் சொல்லொனா அதிர்ச்சிக்கும் துயரத்திற்கும் துன்பத்திற்கும் உள்ளாகி தவித்துக் கொண்டிருக்கின்றனர் – கண்ணீரில் புலம்பிக் கொண்டிருக்கின்றனர் – கடுமையான மனப்போராட்டத்திற்கு ஆளாகி இருக்கின்றனர்.
தமிழ் மக்களின் உள்ளமும் உயிரும் ஒவ்வொரு நொடியும் மரண வேதனையில் வெந்துக் கொண்ருக்கின்றன.
எது எப்படியிருப்பினும், தலைவர் கட்டியெழுப்பிய விடுதலை இயக்கத்தின் மீது முழு நம்பிக்கையும் அசைக்க முடியாத பற்றுதலும் ஆழமான பிடிமானமும் மிக மிக உறுதியாக இருப்பதால்... வாருங்கள் தோழர்களே..
நம்பிக்கையோடு இருப்போம்..! பொறுமையோடு காத்திருப்போம்..!
எவன் வந்து எந்தச் செய்தியைச் சொன்னாலும் சொல்லட்டும்.. எந்தப் படத்தைக் காட்டினாலும் காட்டட்டும்.. என்ன ஆதாரத்தை கொடுத்தாலும் கொடுக்கட்டும்..!!
தலைவரின் நிழலில் வளர்ந்த நமது உடன்பிறப்புகள் – நமது உறவுகள் – நமது போராளிகள் – நமது இரத்தத்தின் இரத்தங்கள் மிக விரைவிலே இரண்டில் ஒன்றைச் சொல்லுவார்கள்.. நமது மரண வலிகளுக்கு முடிவொன்று கூறுவார்கள்..!
தமிழ் உறவுகளே.. அன்பு உடன் பிறப்புகளே..
அதுவரை காத்திருப்போம்!
நம்பிக்கையோடு பொறுத்திருப்போம்!
தலைவர் பிரபாகரன் மரணம் உறுதிசெய்யப்படவில்லை: மகிந்தா வாய் திறக்கவில்லை
- தமிழில் அவர் 5 நிமிடங்கள் பேசினார். அப்போது அவர், ‘’இலங்கையில் நடந்த போர் தமிழர்களுடனான போர் அல்ல; விடுதலைப்புலிகளுடனான போர்" என்றார்.
- ஆனால், "விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை’’ இது தொடர்பாக இராசபக்சே எதுவும் தெரிவிக்கவில்லை.
பாராளுமன்ற உரையில் பிரபாகரனைப்பற்றி எதுவுமே பேசவில்லை. பிரபாகரன் என்ற பெயரையே அவர் உச்சரிக்கவில்லை. (மேலும் செய்திகள்)
இலங்கை பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட 18 பேர் பட்டியல். "தலைவர் பெயர் இல்லை"
தலைவர் பிரபாகரன் வேறு இடத்தில் உள்ளார்: சானல் 4 செய்தி
புலிகளின் தலைமை அழிக்கப்பட்டது உண்மையா? குளோபல் செய்தி ஆய்வு
Monday, May 18, 2009
தலைவர் பிரபாகரன் பற்றிய அதிர்ச்சித் தகவல் இன்னும் உறுதிபடுத்தப்படவில்லை
தமிழில் அவர் 5 நிமிடங்கள் பேசினார். அப்போது அவர், ‘’இலங்கையில் நடந்த போர் தமிழர்களுடனான போர் அல்ல; விடுதலைப்புலிகளுடனான போர்" என்றார்.
இப்போர் முடிவுக்கு வந்துவிட்டது.
ஆனால், "விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை’’ இது தொடர்பாக இராசபக்சே எதுவும் தெரிவிக்கவில்லை.
- தமிழினத் தலைவர் வே.பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்பதற்கு இலங்கை பாதுகாப்பு அமைச்சகமே சாட்சியாக இருக்கிறது….
ஆம்…! படையினர் அடையாளம் கண்டுள்ளதாக 18 பேர் பட்டியல், இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
- இன்று(18.05.2009) மாலை சனல் 4 தொலைக்காட்சிக்கு புலிகளின் சர்வதேசப் பேச்சாளர் எஸ்.பத்மநாதன் செவ்வி ஒன்றை வழங்கியுள்ளார். அதில் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வேறு இடத்தில் இருப்பதாகவும் சற்று முன்னர் அங்கு தான் செய்மதி தொலைபேசி மூலம் தொடர்புகொண்டதாகவும் தெரிவித்துள்ளார். உலக ஊடகங்கள் தலைவர் பற்றி வேறு விதமாக அறிவித்துவரும் வேளையில் இச்செய்தி உலகையே உலுக்கியுள்ளது. (மேலும் படிக்க)
- இதுவரை அரசாங்கப் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய இராசபக்சாவோ இராணுவத் தளபதி சரத் பொன்சோகாவோ அல்லது இலங்கையின் முப்படைகளின் தளபதியான மகிந்த இராசபக்சாவோ பிரபாகரன் கொல்லப்பட்டதனை அதிகாரப்படியாக அறிவிக்கவில்லை. (மேலும் படிக்க)
- விடுதலைப் புலிகளின் முக்கியத் தலைவர்கள் இன்று காலை போர்ப்பகுதியில் இருந்து தப்பிச்செல்லும் பொழுது இலங்கை ராணுவத்தினால் சுட்டுக் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது. பிரபாகரன் கொல்லப்பட்டது உறுதிபடுத்தப்படவில்லை என இலங்கை பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.(மேலும் படிக்க)
- தமிழ் மக்களே தமிழர்களுக்குச் சாதகமில்லாத பல தகவல்கள் இலங்கை இராணுவத்தால் வெளியிடப்படுகிறது. சற்றுப் பொறுமை காத்திடுங்கள். இலங்கை இராணுவம் கூறிவருவதை ஆதாராபூர்வமாக நிரூபிக்க முடியாது. தற்போது அவர்களால் வெளியிடப்படும் படங்கள் கூட இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. (மேலும் படிக்க)
*************************
- NDTV செய்தி நிறுவனம்! வேலுபிள்ளை பிரபாகரனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவித்திருகின்றது, இந்த செய்தியை இலங்கை அரசாங்கம் வெளியிட்டுருப்பதாகவும், DNA( மரபணு ) சோதனைக்கு பிறகு தான் உறுதியாக சொல்ல முடியும் என்றும் இலங்கை அரசாங்கம் கூறியிருபதாகவும், NDTV செய்தி நிறுவனம் செய்தி குறிப்பில் தெரிவித்திருக்கின்றது! (மேலும் படிக்க)
****************************
- விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டமைக்கான எந்த சாட்சியங்களும் கிடைக்கவில்லை என இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார இன்றைய ஊடக மகாநாட்டில் தெரிவித்திருக்கிறார்.வெள்ளை முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் கொல்லப்பட்ட விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களிடையில் பிரபாகரன் இருப்பதற்கான தகவல்கள் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். (மேலும் படிக்க)
Thursday, May 14, 2009
ஈழத்தமிழருக்காக CNN வாக்கெடுப்பில் ஓட்டுப் போடுங்கள்
ஒரு நாட்டின் பிரச்சனையில் மற்ற நாடுகள் தலையிடுவது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியது இல்லை என்றாலும், அங்கே நடப்பது போரில்லை அது இனப்படுகொலை என்பது பெரும்பாலானவர்கள் அறிந்தது. நேற்று முன்தினம் கூட 2000 பொது மக்கள் இலங்கை அரசு அறிவித்த பாதுகாப்பு வளையத்திற்குள் இருந்த போது கொல்லப்பட்டு இருக்கிறார்கள் இதில் பலர் பெண்களும் குழந்தைகளும் ஆவார்கள்.
இதற்கு ஐ நா உட்பட பல நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. பத்திரிக்கை சுதந்திரம் முழுவதுமாக முடக்கப்பட்டுள்ளது, எனவே மனிதாபிமான அடிப்படையில் சிந்தியுங்கள்.
இந்த வாக்கெடுப்பு எந்த அளவிற்கு பயனுள்ளதாக இருக்கும் என்று எனக்கு தெரியவில்லை, ஆனால் இதில் நாம் ஈழ தமிழர்களுக்கு ஆதரவாக வாக்களிப்பதால் எந்த வித நஷ்டத்தையும் அடைந்து விடப்போவதில்லை. இன்னும் எவ்வளோ நேரம் அல்லது நாட்கள் இந்த வாக்கெடுப்பு நடைபெறும் என்று தெரியவில்லை, எனவே முடிந்த வரை விரைவாக ஒட்டு போட்டு விடவும்.
உங்கள் வாக்கை CNN தளத்தில் இங்கே சென்று பதியுமாறு கேட்டுக் கொள்கிறேன். உங்களுக்கு அதிகபட்சம் 1 நிமிடத்திற்கு மேல் ஆகாது. இந்த செய்தியை உங்கள் நண்பர்களுக்கும் கொண்டு சேருங்கள்.
ஈழ தமிழர்களுக்கு உங்களால் ஆன இந்த சிறு உதவியை செய்யுங்கள்.
Tuesday, May 12, 2009
தமிழ்நாட்டுத் தமிழருக்கு மலேசிய நாட்டிலிருந்து இரா.திருமாவளவன் உருக்கமான கடிதம்
பி.கு: ஐயா இரா.திருமாவளவன் அவர்கள், மலேசியத் திருநாட்டில் தமிழ் - தமிழர் - தமிழ்நெறி விழுமியங்களைக் கட்டிக் காத்து, அதன்வழி தமிழ்த்தேசிய குமுகாயத்தைக் கட்டியெழுப்பும் பாரிய முயற்சியில் ஈடுபட்டு, கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக மொழியால் இனத்தால் சமயத்தால் நாம் தமிழர்; நம் மறை திருக்குறள் என்ற செம்மாந்தக் கொள்கையை வலியுறுத்தி பல்லாற்றானும் பாடாற்றி வருகின்ற தமிழினமானத் தலைவர்.
பிறந்த இனத்தின் உரிமையில் தமிழக உடன்பிறப்புகளிடம் ஒரு வேண்டுகோள்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgnR2bQq5nm3-Hxf_1rtztflKLjOxGK1nlORmTOGFfQ6qdpr1IFajKKhssvgqaPSecG9RszQLwZwfvWOY9OYjnPeQ7LgDJ7dhhd-AGswnAvw8KOZyQ5nCpxxAfcGgFAB1P8Qit2Rw/s320/p9.jpg)
Monday, May 11, 2009
நிலவே எம்மைக் காப்பாற்று: ஈழக் கவிதை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgL7ysMMgHdHOEEc-zUKzG_1YevbLXaU95L1gHLizQZNvhFbOrd-9Ei18rz-IHO9BcO9LIiBJDkxXylmnxutaBJPHkvKCfrZt_7Cq_CHJ3I4b9xB7mbWTwyZEeU0gGUh1tAJ5YErA/s200/eelam+1.jpg)