Tuesday, June 30, 2009

பிரான்சில் நடைபெற்ற தமிழ்மொழி பொதுத் தேர்வு 2009

உலகின் பல நாடுகளில் தமிழ்மொழிக் கல்வி பயிலப்பட்டு வருகின்றது என்பது தமிழர்களில் பலரும் அறியாத செய்தியாக உள்ளது. தமிழகம், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் முதலான நாடுகளில் தமிழ்மொழிக் கல்வி அரசின் அதிகாரத்தோடு நடைபெறுகிறது. இந்நிலையில், பிரான்சு போன்ற நாடுகளிலும் தமிழ்மொழிக் கல்விக்குத் தகுந்த வாய்ப்பு இருக்கிறது என்பதை அறியும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது.
(தேர்வெழுதும் பிரான்சு தமிழ் மாணவர்கள்)
தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவையால் அனைத்துலக அளவிலாக நடாத்தப்படுகிற தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 27.06.2009 சனிக்கிழமை 02.00 மணிக்கு பிரான்சில் நடைபெற்றது. பிரான்சில் இயங்கிவரும் 59 தமிழ்ச்சோலைப் பள்ளிகளையும் ஒருங்கிணைக்கும் தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகம் பிரான்சில் நடைபெற்ற தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஒழுங்கமைத்திருந்தது.

இத்தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த 3134 மாணவர்களில் 2979 மாணவர்கள் தேர்வுக்கு அமர்ந்தனர். 163 ஆசிரியர்கள் மேற்பார்வையாளர்களாகவும். தமிழ்ச் சங்க உறுப்பினர்கள் 65 பேர் மண்டப ஒழுங்கமைப்பாளர்களாகவும். தமிழ்ச்சோலை உறுப்பினர்கள் 14 பேர் கண்காணிப்பாளர்களாகவும், 7 தலைமைப்பணியக நிருவாகிகள் மண்டப பொறுப்பாளர்களாகவும் கடமையாற்றினர்.

(தேர்வை வழிநடத்தும் பொறுப்பாசிரியர்கள்)

பாரிசும் அதன் புறநகர்ப் பகுதியையும் சேர்ந்த 2987 மாணவர்கள் LA PLACE என்னும் பகுதியில் அமைந்த Maison des Examens என்னும் ஒரே தேர்வு மண்டபத்தில் தோற்றியிருந்தனர். ஏனைய 147 மாணவர்கள் Mulhouse, Toulouse, Montauban, Strasbourg, Rennes, Nice, Lyon, Tours ஆகிய எட்டு மாநிலங்களில் உள்ள தேர்வு மண்டபங்களில் கூடியிருந்தனர்.

கடந்த வருடத்தை விட இந்த ஆண்டு பெருமளவான மாணவர்கள் தேர்வில் அமர்ந்தமை குறிப்பிடத்தக்கது.

(மண்டபத்திற்கு வெளியில் திரண்டிருக்கும் பெற்றோர்கள்)

மேலும் புலம்பெயர் நாடுகளில் வாழும் பெற்றோர்கள் தமது பிள்ளைகளை மிகவும் சிரத்தையோடு அவர்களுக்கான நல்ல வாழ்க்கைப் பாதையையும் எதிர்காலத்தையும் ஏற்படுத்துவதற்காகப் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள் தமிழ் மக்களின் வாழ்வோடு ஒன்றிணைந்த வளமான கல்வியையும், பண்பாட்டையும் தமிழ்ச்சோலைகள் வழங்கி வருகின்றது.

மேலும் பிரான்சின் கல்வி முறையில் உயர்க்கல்விக்காகத் தமிழ் மொழிக்கல்வியின் தேர்ச்சியும் இணைத்துக்கொள்ளப்படுவதால் உயர் கல்வி கற்கும் மாணவர்கள் பெரும் பயனடைகிறார்கள். தற்போது விடுமுறை விடப்பட்டுள்து.

  • நன்றி: அதிர்வு இணையம்

Monday, June 22, 2009

"நாடுகடந்த தமிழ் ஈழ அரசாங்கம்" என்றால் என்ன? தெரிய வேண்டிய தெளிவுகள்.



அண்மையக் காலத்தில் மிகப் பரவலாகப் பேசப்படும் விடயம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் எனப்படுவதாகும். பரபரப்பாக பேசப்படும் இவ்விடயம் பலருக்கும் தெரியாத ஒன்றாக - பரவலாக அறியப்படாத ஒன்றாக இருக்கின்றது. "நாடு கடந்த அரசாங்கம்" என்றால் என்ன? இதனைப் பற்றிய தெளிவினை வழங்கும் கட்டுரை இது.

இன்று உலகில் பல, நாடு கடந்த அரசாங்கங்கள் (Provisional Transnational Government) செயற்பட்டு வருகின்றன. இந்த நாடு கடந்த அரசின் முதல் வித்தாக பெலாரசியன் தேசிய குடியரசு காணப்படுகின்றது.

நாடு கடந்த அரசாங்கம் என்பது, அரசியலில் ஈடுபடும் அல்லது ஒரு குழுவினர், சொந்த நாட்டில் தவிர்க்கமுடியாத காரணத்தால் வெளியேறி வெளிநாடு ஒன்றில் அதிகாரம் மிக்க தனி அரசாங்கம் ஒன்றை நிறுவுவதாகும்.

காலப் போக்கில் இந்த அரசானது தனது சொந்த நாட்டிற்கு திரும்பிச் சென்று சக்திகளையும் அதிகாரங்களையும் மீளப்பெறும் என்ற நோக்கில் அமைக்கப்படுவது ஆகும்.

இரண்டாம் உலகப்போரில் பல ஜரோப்பிய நாடுகளை இட்லரின் நாசிசப் படைகள் கைப்பற்றியதனால், பல ஜரோப்பிய நாடுகள் பிரித்தானியாவில், இவ்வாறான நாடு கடந்த அரசாங்கம் ஒன்றை நடத்தி வந்திருந்தனர். ஆகையால் அவர்கள் தேசியம் காப்பாற்றப்பட்டது. 1920 ஆண்டில் பெலருசின் என்ற அமைப்பு தனது நாடு பெலரூசால் கைப்பற்றப்பட்ட பின்னர் இன்றுவரை, நாடு கடந்த அரசாங்கமாக இயங்கி வருகிறது.

அத்துடன் திபெத்திய பீட பூமியை சீன அரசானது ஆக்கிரமிப்புச் செய்தபோது அந்நாட்டின் ஆன்மீகத் தலைவர் தலாய்லாமா அவர்கள் இந்தியாவுக்குச் சென்று இன்றுவரை திபெத்தின் அரசை ஒரு நாடு கடந்த அரசாக நடத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது சுமார் 11க்கும் மேற்பட்ட நாடு கடந்த அரசாங்கங்கள் உலகில் இயங்கிவருகின்றன. அதன் விவரம் பின்வரும் அட்டவணையில்:-

நாடு கடந்த அரசாங்கத்தின் செயல்பாடுகள்:-

1.அனைத்துலக அமைப்புகளுடன் இணைந்து செயல்படுதல்

2.தனக்கென ஒரு சட்ட வரைமுறைகளை வரையறுத்துக் கொள்ளுதல்

3.தேசியத்தின் சட்ட முறைமைகளைப் பாதுகாத்தல்

4.ஒரு தேசிய இராணுவத்தை காப்பது அல்லது கட்டி எழுப்புதல்

5.அரசியல் நிலையில் அல்லது அரசதந்திர நிலலயில் நாட்டின் தேசியத்தை ஒன்றுபடுத்துதல்

6.தேசிய அடையாள அட்டை வழங்குதல்

7.ஆளும் மற்றும் எதிர்க் கட்சிகளை உருவாக்குதல்

8.தேர்தல்களை நடத்துதல்

முதலான செயற்பாடுகளை நாடுகடந்த அரசாங்கத்தால் செயல்படுத்த முடியும்.

நாடு கடந்த அரசாங்கத்தினை உருவாக்கத் தேவையானவை:-

நாடு கடந்த தமிழீழ அரசை உருவாக்க, ஏதாவது ஒரு வெளிநாட்டின் அனுமதி அல்லது முழு அங்கிகாரம் தேவைப்படுகிறது. அந்த நாட்டிலேயே நாடு கடந்த அரசாங்கத்தை நடத்த முடியும்.

நாடு கடந்த அரசாங்கத்தால் என்ன பயன்:-

1.பல வெளிநாடுகளில் தமது அரசின் அதிகாரப்படியான தூதுவர்களை நியமிக்க முடியும்.

2.வெளிநாட்டு அரசாங்கங்களுடன், ஒரு நாட்டு அரசாங்கம் போல தகுதியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடமுடியும்.

3.குறிப்பிட்ட நாட்டுடன் தனது பிணக்குகள் குறித்து பேச்சுவார்தை நடத்தி தீர்வுகான ஏதுவாக இருக்கும்.

4.பல்வேறு நாடுகளில் தஞ்சமடைந்துள்ள எமது சமுதாயத்தினை சமூக, பொருளாதார, பண்பாட்டு அடிப்படையில் பலப்படுத்துவதற்கும், எமது தாய்மண்ணில் சுதந்திரத் தமிழீழ அரசுரிமையைப் பெறுவதற்கும், உலகச் சவால்களை அனைத்துலக நிலையில் அணுகுவதற்கும் இந்த நாடு கடந்த அரசாங்கமானது பெரிதும் உதவியாக இருக்கும்.

இவ்வாறு பல திறமைகள் இந்த நாடு கடந்த அரசாங்கத்திற்கு உண்டு.


நாடு கடந்த அரசாங்கத்திற்கு பாதகம் வருமா?

ஆம். நாடு கடந்த அரசாங்கமானது செவ்வனே செயல்பட ஒரு நாட்டின் தஞ்சம் அல்லது அங்கிகாரம் தேவை. தஞ்சம் தரும் வெளி நாடு தனது ஆதரவை விலக்கிக் கொள்ளும் பட்சத்தில் இதன் அதிகாரம் இழக்கப்படக்கூடிய சந்தர்ப்பமும் உள்ளது.

ஆகவே, மிகவும் பொறுமையுடனும், ஆழ்ந்த அறிவு மற்றும் அரசியல் மதிநுட்பம் கொண்டு கையாளப்படவேண்டிய விடயம் இது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை அமைத்த பின்னரும் வெளிநாடுகள் தாம் விரும்பும் பட்சத்திலேயே இதனை அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். அதாவது ஏற்பதும் நிராகரிப்பதும் ஒவ்வொரு வெளிநாட்டின் தனிப்பட்ட விருப்பமாகும்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உடனடியாகச் செய்ய வேண்டியன?

ஈழத்தில் ஒரு இன அழிப்பு நடவடிக்கை நடந்து முடிந்துள்ள போதும் அதற்காக உலக நாடுகள் வருத்தம் தெரிவித்தது தவிர வேறொரு தீர்வையும் பேசவில்லை. ஆகவே, உலக நாடுகள் ஈழச் சிக்கலை இனங்கண்டு, தலையிட்டு, தமிழீழத்தை அங்கீகரித்தால் அன்றி அங்கு அமைதி என்பதையே காணமுடியாது. ஆனால் உலக நாடுகள் தாமாகவே வந்து இதில் தலையிடக்கூடிய நிலை உள்ளதாகத் தெரியவில்லை.

எனவே இப்போதைய உலகத்தைச் செயற்பட வைக்க வேண்டும் என்றால் முதலில் ஈழ மக்கள் இப்போதைய நாடு கடந்த தமிழீழ அரசு ஒன்று உருவாகுவதற்கும் தனித்துவம், கௌரவம், ஆசைகள், வாழ்வு என்பவற்றைப் பாதுகாப்பது பற்றித் தெளிவு கொள்ள வேண்டும்.

உண்மை நிலவரம் என்னவென்றால் இலங்கையின் தனித்துவத்தை(இறையாண்மை) ஏற்றுக் கொள்ளும்படி கொழும்பு பல முரட்டு வழிகளைப் பின்பற்றும், இந்தியாவும் சில வேறு நாடுகளும் அதற்கு ஆதரவளிக்கும், ஆனால் நாம் நாடுகடந்த தமிழீழ ஆட்சி முறையால் இவற்றை உடைத்தெறிய வேண்டும்.

அனைத்துலக அளவில் தடைசெய்யப்பட்ட இயக்கமாக புலிகள் இயக்கம் இருந்த போதும் அதன் உலகளாவிய உட்கட்டமைப்பு மிகவும் வலுவான ஒன்று. புலம் பெயர் நாடுகளில் உள்ள தமிழ் மக்களை ஒற்றுமையாகவும் எழுச்சியுணர்வு உள்ளவர்களாகவும் கட்டிக்காத்து வந்தது புலிகள் இயக்கமே ஆகும். வெளிநாடுகளில் நிறுவப்பட்ட நிருவாக, நிதி அமைப்புகள் யாவும் முழுமையான - முறையான இயக்கத்திலேயே இப்போதும் உள்ளன.

எனவே, தற்போது உள்நாட்டில் உள்ள தமிழ் அரசியல்வாதிகள் அனைவரும் வேறுபாடின்றி மக்களுக்காகச் செயற்படவேண்டும். நாடுகடந்த தமிழீழ அரசுக்கு தஞ்சம் கொடுக்க ஒரு உலக நாடு தேவை என்பதை விட மிக அவசியமாக இப்போது தேவைப்படுவது உலகம் முழுதும் வாழும் 1 மில்லியனுக்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்களின் ஆற்றல் மிகுந்த ஆதரவே யாகும்.

Friday, June 19, 2009

"தேசியத் தலைவருக்கு வீரவணக்கம்" புலிகளே அறிவித்ததாக ஓர் அறிவிப்பு


தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுக்கும், அவருடன் வீரச்சாவடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் மற்றும் தளபதிகளுக்கும் தாம் வீரவணக்கத்தைச் செலுத்துவதாக அறிவித்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை, தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கும் போராட்டத்தின் அடுத்தபடி நிலையாக - தற்போது உருவாக்கப்படவுள்ள 'நாடு கடந்த தமிழீழ அரசு’ அமைவதற்கு தமிழ் பேசும் மக்கள் எல்லோரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையின் வெளியகப் பணிப் பிரிவின் பொறுப்பாளர் கதிர்காமத்தம்பி அறிவழகன் இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

(படத்தின் மீது சொடுக்கி முழுச் செய்தியைப் படிக்கவும்)

Friday, June 12, 2009

உலக மொழிகளில் தமிழுக்கு 15ஆவது இடம்


உலகில் இன்று பேசப்படும் மொழிகளில் பழமைவாய்ந்த தமிழ்மொழி 15ஆவது இடத்திற்குத் தரப்படுத்தப்பட்டுள்ளதாக மனிதவுரிமைகளுக்கான தமிழ் நிலையம் தெரிவித்துள்ளது.

உலகில் இன்று 6 ஆயிரத்து 800 மொழிகள் புழக்கத்தில் உள்ளன.



அதில், 2 ஆயிரத்து 261 மொழிகள் எழுத்துருவை பெற்றுள்ளன. ஏனைய மொழிகள் பேச்சு வழக்கில் மாத்திரமே உள்ளன.

1996ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அனைத்துலக மொழியுரிமை பிரகடனத்தின் படி ஒரு மொழியின் வரலாற்றுத்தன்மை, அதன் எல்லை, அங்கீகரிப்பு, போற்றவையை அடிப்படையாகக் கொண்டு மொழிகள் தரப்படுத்தப்படுகின்றன.

ஆசியாவில் மாத்திரம் 2 ஆயிரத்து 200 மொழிகள் பேசப்படுகின்றன.

ஆபிரிக்காவில் 2 ஆயிரம் மொழிகளும், பசுபிக் நாடுகளில் ஆயிரத்து 300 மொழிகளும், ஐரோப்பாவில் 230 மொழிகளும் பேசப்படுகின்றன.

இந்தநிலையில், உலகில் வாழும் மொழிகள் என்ற அடிப்படையில் நோக்குமிடத்து தமிழ் மொழி 15 க்கும், 17 க்கும் இடைப்பட்ட இடத்தினைப் பெற்றுள்ளது.

மலேசியா, சிங்கப்பூர், தென்னாபிரிக்கா, மொரீசியசு, தென்னிந்தியா, இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதி, மற்றும் 1862 ம் ஆண்டு பிரித்தானிய காலணித்துவத்தைக் கொண்ட இலங்கையின் மலைநாட்டுப்பகுதி என்பவற்றில் தமிழ்மொழி புழக்கத்தில் உள்ளது.

தமிழ் மொழிக்கு வரலாற்று சான்றுகள் உள்ளன. போர்த்துக்கல், நெதர்லாந்து ஐக்கிய இராச்சியம் போன்ற இடங்களில், இதற்கான சான்றுகள் உள்ளன.

இவற்றை 1981ஆம் ஆண்டு யாழ்ப்பாண நூலகத்தை எரித்ததை போன்று நாசமாக்க முடியாது என மனித உரிமைகளுக்கான தமிழ் நிலையம் குறிப்பிட்டுள்ளது.

சுமார், ஆறு பத்தாண்டுகளாக அனைத்துலகச் சமூகத்தினால் பாதிப்புக்குள்ளான தமிழ் மொழி பாதுகாக்கப்பட்டு வந்துள்ளதாகவும் தமிழ் நிலையம் குறிப்பிட்டுள்ளது.


-ஆதாரம்:தமிழ்வின்

Thursday, June 11, 2009

உயிருக்குப் போராடும் 300,000 தமிழர்களுக்கு உதவ ஓடி வாருங்கள்


பாதுகாப்பு வளையம் என்ற தடுப்பு முகாம்களில் 300,000 தமிழர்களை சிங்கள அரசாங்கம் அடைத்து வைத்திருக்கிறது.

ஐநாவின் பொதுச் செயலாளர் பான் மூன்-கின்னை அதிர்ச்சிக்குள்ளாக்கிய படுமோசமான சூழ்நிலையில் உண்ண உணவின்றி, குடிநீர் இன்றி, மருத்துவ வசதி இன்றி பரிதவிக்கும் 300,000 தமிழ் மக்களின் உயிர் உங்கள் கையில்!

மலேசியர்களே, ஓடி வாருங்கள்!! உயிர்களைக் காப்பாற்றுங்கள்!!!
பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள், அரிசி, சீனி, மருந்துகள் ஆகியவற்றோடு நிதி உதவியும் அளிக்க ஓடி வாருங்கள்: நாளையல்ல, இன்றே வாருங்கள்.

நிவாரண சேகரிப்பு மையம்:
விவேவகனந்தா ஆசிரமம், ஜாலான் துன் சம்பந்தன், பிரிக்பீல்ட்டு, கோலாலம்பூர்.

நேரம்: தினமும் காலை மணி 10.00 லிருந்து இரவு மணி 8.00 வரை.

மேல் விவரங்களுக்கு:
இளந்தமிழ் 012-314 3910; மாலா 017-287 4872; தனா 017-376 7140.

300,000 தமிழர்கள் அனாதைகளைப்போல் கையேந்தி நிற்கிறார்கள்.
அவர்கள் அனாதையானவர்கள் அல்லர். நாம் இருக்கிறோம்!

நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொருநாளும் ஆகக் குறைந்தது ஒரு கிலோ சீனி வழங்க முடியும்.

வாருங்கள். விரைந்து வாருங்கள். ஒவ்வொரு நிமிடமும் ஓர் உயிர் துடிக்கிறது!


********************************

An Appeal To All Malaysians
300,000 Sri Lankan Tamils have been detained in detention centres called “Safety Zones” by the Sinhalese Government of Sri Lanka.

The conditions obtained in the detention centre to which the UN Secretatry General Ban Moon-kin was taken for a visit had shocked him thoroughly. Imagine the conditions in other detetion centres. There is no food, no drinking water, no medical facilities for the 300,000 Tamils held in the detention centres.

These starving, uncared for 300,000 Tamil civilians need our help now and that immediately. Please come forward and help them.

Canned food, rice, sugar, medicines, toliletries and cash donations are most welcome. Receipt will be issued for cash donations.

Operation Centre:
Vivikananda Asrama, Jalan Tun Sambanthan, Brickfields, Kuala Lumpur.
Time: Daily from 10.00 am to 8.00pm.
For Further information, please call:
Elan 012-314 3910; Mala 017-287 4872; Thana 017-376 7140.

300,000 Tamils in Sri Lankan detention centres need your help TODAY.
Please come forward TODAY!

Good news: 44 Malaysian doctors are ready to leave for Sri Lanka.

செய்தி:-மலேசியாஇன்று.காம்

Sunday, June 07, 2009

வீழ்ந்த வீரர்களும்.. வென்ற கோழைகளும்..


முள்ளிவாய்க்கால்....
தமிழர் பிணங்கள் பல வீழ்ந்து....
மலைகள் பல சாய்ந்து.....

இரத்தத்தில்
நிலமெல்லாம் குளமாகி......
தசைகளிலே மண்ணெல்லாம் சேறாகி.....

இறுதிவரை
வீரம் சொல்லிய மண்.....
வேங்கைகை பல சாய்ந்த மண்....

வல்லரசின்
வீரர்களைச் சேர்த்து....

வாங்கி வந்த
குண்டுகளைப் போட்டு....

பறந்து வந்து
எரிமலையை போட்டு....

பாய்ந்து வரும்
பீரங்கியால் தாக்கி...

எத்தனை படுகொலையை
இலகுவாய் செய்துவிட்டு......
வெற்றியாம் வெற்றி....!
அவர்கள் வீரராம் வீரர்....!

கோழையின் வெற்றி
உன் கொல்லைப்புறம் மட்டும் தான்....
வந்தவர்கள் போய்விட்டால்
உன் வாழ்க்கை மட்டம் தான்....

நம் வீரர் பலர் வீழ்ந்தாலும்
விடாத பயம் உனக்கேன்....?
நீ நூற்றுவிட்ட விடுதலை தீ
நாட்களானால் பற்றுமென்றா....?

பதறாதே கோழைகளே
பதில் அதற்கு உன்னிடம் தான்....!
என் நாளும் பக்கத்தில் வரமாட்டார்.....
உலக சன சமூகந்தான்....!

ஓர் இனத்தின் விடுதலையை
ஏளனமாய் பார்க்காதே...
வரலாறுகள் படித்துப் பார்
பின்னர் உன்கண்ணும் தூங்காதே....!

நீ வீரர்களை வீழ்த்திவிட்டாய்
நம் வீரம் விழவில்லை.....!
விடுதலை கிடைக்கும் வரை
நாம் தூங்கப் போவதில்லை....!


ஆக்கம்:-இளங்கவி

Wednesday, June 03, 2009

இயற்கை எய்திய தமிழறிஞர் இரா.திருமுருகனாருக்கு ஆழ்ந்த இரங்கல்

தமிழறிஞர் - முதுபெரும்புலவர் - இலக்கணச்சுடர் - இசைவாணர்


முனைவர் இரா திருமுருகனார் அவர்கள்
இன்று 03.06.2009 அறிவன் (புதன்) கிழமை அதிகாலை 1.00 மணியளவில் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

இவண்:-
தி. யமுனா (மனைவி)
தி.அறவாழி (மகன்)
அ.இரேணுகா அறவாழி (மருமகள்)
அ.செம்மல் (பெயரன்)
அ.தென்றல் கார்த்திக் (பெயர்த்தி)
தொடர்புக்கு:
+ 91 936 266 4390 செல்பேசி
+ 91 413 2201191 தொலைபேசி
******************************
மலேசியத் தமிழ் அன்பர்கள் - தமிழ்ப் பற்றாளர்கள் சார்பில், அன்னாரின் ஆதன் இறைமைத் திருவடியில் அமைதி பெற இறைஞ்சுவதோடு அன்னாரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தாளாத துயரத்துடன் திருத்தமிழ் வலைப்பதிவின் வழியாக தெரிவித்துக் கொள்கிறேன்
******************************
பி.கு:- திருமுருகனார் வாழ்க்கைக்குறிப்பு அறிய இங்கே சொடுக்குக.

Monday, June 01, 2009

"நல்லவராக; அற்புத மனிதராக இருந்ததுதான் பிரபாகரன் செய்த மாபெரும் தவறு" ‍-சீமான்

பிரபாகர‌ன் செ‌‌த்து‌வி‌ட்டார‌ா‌ம். மா‌வீரனு‌க்கு ஏதடா மரண‌ம். வா‌ர்‌‌த்தை‌யி‌ல் வே‌ண்டுமானா‌ல் அவ‌ர் மரண‌ம் அட‌ை‌ந்‌‌திரு‌க்கலா‌ம். வா‌ழ்‌க்கை‌யி‌ல் அவ‌ர் ஒருபோது‌ம் மரண‌ம் அடையமா‌ட்டா‌ர். பிரபாகர‌ன் செ‌ய்த ஒரே தவறு, ந‌ல்லவனாக, ‌அ‌ற்புத ம‌னிதனாக இரு‌ந்ததுதா‌ன் எ‌ன்று இய‌க்குந‌‌‌ர் ‌‌சீமா‌ன் கூ‌றினா‌ர்.


ஒரு த‌மிழ‌ன் த‌மிழனாக இரு‌ந்தத‌ற்காக ‌கிடை‌த்த ப‌ரிசு இது. ஈழ‌த் த‌‌மிழ‌ர்க‌ள் இல‌ங்கை‌யி‌ல் ‌மிர‌ட்ட‌ப்படு‌‌கிறா‌ர்க‌ள். அவ‌ர்களு‌க்கு ஆதரவாக இரு‌ப்பவ‌ர்க‌ள் இ‌ங்கு ‌மிர‌ட்ட‌ப்படு‌‌கிறா‌ர்க‌ள்.

எ‌ன்னை‌‌த் தொட‌ர்‌ந்து 4 முறை ‌சிறை‌யி‌ல் அடை‌த்தா‌ர்க‌ள். நா‌ன் எ‌ன்ன தவறு செ‌ய்தே‌ன். எ‌ன் இன‌ம் அ‌ழி‌க்க‌ப்படுவதை‌க் க‌‌ண்டு ந‌ல்ல அ‌‌ப்பனு‌க்கு‌ப் ‌பிற‌ந்த எ‌ன்னா‌ல் பொறு‌க்க முடிய‌வி‌ல்லை. நா‌ன் ‌சிறை‌யி‌ல் அடை‌க்க‌ப்ப‌ட்டதா‌ல் எ‌ன் தொ‌‌‌ழி‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டது. எ‌ன்னுடைய காரை எ‌‌ரி‌த்தா‌ர்க‌ள். உ‌யி‌ர் எ‌ன்பது உ‌திரு‌ம் ம‌யிரை‌ப் போ‌ன்றது. ஒரு இல‌ட்ச‌ம் து‌ப்பா‌க்‌கிகளை‌க் கட‌ந்து செ‌ன்று ‌பிரபாகரனை ச‌ந்‌தி‌த்தவ‌ன் நா‌ன். இத‌ற்கெ‌ல்லா‌ம் பய‌ப்பட மா‌ட்டே‌ன். பே‌சினா அடி‌ப்போ‌ம் இதுதா‌ன் ஜனநாயகமா?

தா.பா‌ண்டிய‌ன் காரை எ‌‌‌ரி‌த்தா‌ர்க‌ள். யாரை கைது செ‌ய்‌தீ‌ர்க‌ள். த‌மிழ‌ன் மன‌‌தி‌ல் இடி‌விழு‌ந்து ந‌ி‌ற்‌கிறா‌ன். த‌மி‌‌ழ்‌ச்சா‌தி உறை‌ந்து போ‌ய் ‌கிட‌க்‌கிறது. இ‌ந்‌தியா நட‌த்த‌ வே‌ண்டிய போரை நா‌ங்க‌ள் நட‌‌த்‌தியு‌ள்ளோ‌ம் எ‌ன்று ராஜப‌க்சே கொ‌க்க‌ரி‌க்‌கிறா‌ன். 25,000 ஈழ‌த் த‌‌மிழ‌ர்களை உ‌யிரோடு புதை‌த்து‌ள்ளன‌ர் ‌சி‌ங்கள‌வர்க‌ள்.

தி‌ருகோணமலையை அமெ‌ரி‌க்காவு‌க்கு ‌வி‌ட்டு‌க் கொடு‌த்‌திரு‌ந்தா‌ல் இ‌வ்வளவு பெ‌ரிய இழ‌ப்பை ச‌ந்‌தி‌த்து இரு‌க்க மா‌ட்டா‌ர். சி‌ங்கள‌வர்க‌ள் செ‌ய்த அ‌ட்டூ‌‌ழிய‌த்தை‌ப் போல நாமு‌ம் செ‌ய்‌திரு‌க்க வே‌ண்டு‌ம். ஆனா‌ல் ‌பிரபாகர‌ன் செ‌ய்ய‌வி‌ல்லை. க‌ற்ப‌ழி‌ப்புகளை நட‌த்‌தினா‌ர்க‌ள். ப‌ச்‌சிள‌ங் குழ‌ந்தைகளை கொ‌ன்று ‌‌கு‌வி‌த்தா‌ர்க‌ள். பிரபாகர‌ன் உ‌த்தர‌வி‌ட்டிரு‌ந்தா‌ல், கொழு‌ம்பு நகரு‌க்கு‌ள் புகு‌ந்து 5 ல‌ட்ச‌‌‌த்‌திற‌்கு‌ம் மே‌ற்ப‌ட்ட ம‌க்களை கொ‌ன்று கு‌வி‌த்‌திரு‌க்க முடியு‌ம். அதை அவ‌ர் ‌விரு‌ம்ப‌வி‌ல்லை.

மரு‌த்துவமனை, ப‌ள்‌ளி‌க்கூட‌ம், பொதும‌க்க‌ள் வாழு‌ம் பகு‌‌திக‌ளி‌ல் கு‌ண்டுபோட வே‌ண்டா‌ம் எ‌ன்று கூ‌றி‌வி‌ட்டா‌ர். இ‌ன்றை‌க்கு, பிரபாகர‌னி‌ன் 75 வயது ‌த‌ந்தையு‌ம், 72 வயது தாயாரு‌ம் ‌சி‌ங்கள இராணுவ‌த்‌தி‌ன் ‌பிடி‌‌யி‌ல் இரு‌க்‌கிறா‌‌ர்க‌ள். விசாரணை எ‌ன்‌‌கிற பெய‌ரி‌ல் அழை‌த்து‌ச் செ‌ன்‌றிரு‌க்‌கிறா‌ர்க‌ள். அ‌வ‌ர்களை எ‌ப்படியெ‌ல்லா‌ம் ‌சி‌த்ரவதை செ‌ய்‌கிறா‌ர்களோ? தெ‌ரிய‌வி‌ல்லை.

சி‌ங்கள இராணுவ‌‌ம் செ‌ய்த அ‌த்து‌மீற‌ல்களு‌க்கு‌ம் ம‌னித உ‌ரிமை ‌மீற‌ல்களு‌க்கு‌ம் ஆதார‌ம் இரு‌ப்பதாக இ‌ன்றை‌க்கு அமெ‌ரி‌க்கா சொ‌ல்‌கிறது. இ‌‌ந்த அமெ‌ரி‌க்கா அ‌ன்றை‌க்கு ஏ‌ன் சொ‌ல்ல‌வி‌ல்லை? ஐ.நா. பொது‌ச் செயல‌ர் பா‌ன் ‌கீ மூ‌ன் எ‌ல்லா‌ம் முடி‌ந்த ‌பிறகு இ‌ன்று இல‌ங்கை‌க்கு செ‌ன்று பா‌ர்வை‌யிடு‌கிறா‌‌ர். உலக‌த் த‌மி‌ழ் இனமே வே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்‌திரு‌ந்தபோது அ‌ன்றை‌க்கு அவ‌ர் செ‌ன்‌றிரு‌க்கலாமே? அ‌ன்று செ‌ல்ல‌‌வி‌ல்லை.

சீனா செ‌ங்கொடி தூ‌க்‌கி ‌நி‌ற்‌கிறது. அ‌ந்த‌க் கொடியை தூ‌க்க அத‌ற்கு எ‌ன்ன தகு‌தி இரு‌க்‌கிறது. இ‌‌ங்‌கிலா‌ந்து, இ‌ஸ்ரே‌ல் போ‌ன்ற நாடுக‌ள் எ‌ல்லா‌ம் ஈழ‌த் த‌மிழ‌ர்களு‌க்கு ஆதரவாக வ‌ந்து ‌நி‌ற்‌கி‌ன்றன. ஆனா‌ல் இ‌ந்‌தியா எ‌‌திராக உ‌ள்ளது. இதை‌ச் சொ‌ன்னா‌ல் இறையா‌ண்மை ‌மீறலா?

நடேச‌ன், பு‌‌‌லி‌த்தேவ‌ன் உ‌ள்‌ளி‌ட்ட 350 பே‌ர் வெ‌ள்ளை‌க்கொடி தா‌ங்‌கி ‌சி‌ங்கள இராணுவ‌த்தை நோ‌க்‌கி வ‌ந்தா‌ர்க‌ள். அவ‌ர்களை வ‌‌ஞ்சகமாக கொ‌ன்று கொடு‌ஞ்செய‌ல் பு‌ரி‌ந்ததை உல‌கி‌ல் யாராவது க‌ண்டி‌த்து‌ள்ளா‌ர்களா?

இதுவரை நட‌ந்தது மு‌ன்னோ‌ட்ட‌ம்தா‌ன். இ‌னி தா‌ண்டா போ‌ர் நட‌க்க‌ப் போ‌கிறது. 5ஆ‌ம் க‌ட்ட‌‌ப் போ‌ரி‌ல் ‌பிரபாகர‌ன் கடைப்பிடி‌த்த மரபுகளை நா‌ங்க‌ள் கடைப்‌பிடி‌க்க‌ப் போ‌வ‌தி‌ல்லை. ஒரு ‌சி‌ங்கள‌வன் கூட ‌‌நி‌‌ம்ம‌தியாக உற‌ங்க முடியாத அள‌வி‌ற்கு தா‌க்குவோ‌ம். கொழு‌ம்பு நகரு‌க்கு‌ள் புகு‌ந்து தா‌க்குத‌ல் நட‌த்துவோ‌ம். மானமு‌ள்ள கடை‌சி ஒரு த‌மிழ‌ன் இரு‌க்கு‌ம்வரை ‌சி‌ங்கள‌வர்களு‌க்கு எ‌திரான போரா‌ட்ட‌ம் தொடரு‌ம்.

ந‌‌ள்‌ளிர‌வி‌ல் ஒரு பெ‌ண் நகை அ‌ணி‌ந்து பாதுகா‌ப்பாக நட‌ந்து செ‌ல்லு‌ம் போதுதா‌ன் சுத‌ந்‌திர‌ம் ‌கிடை‌த்து ‌வி‌ட்டதாக அ‌ர்‌த்த‌ம் எ‌‌ன்று கா‌ந்‌தி கூ‌றினா‌ர். இ‌ந்த கா‌ந்‌தி‌யி‌ன் கனவை ‌பிரபாகர‌ன் ‌நனவா‌க்‌கினா‌ர். அ‌‌ற்புதமான த‌மி‌‌ழ்‌‌த் தேச‌த்தை அ‌ங்கு ‌‌நி‌ர்மா‌ணி‌த்தா‌ர். நீ‌தி‌த்துறை, காவ‌ல்துறை உ‌ள்‌ளி‌ட்ட அனை‌த்து துறைகளையு‌ம் க‌ட்டமை‌த்தா‌ர். அ‌ங்கு ‌திருட‌ன் இ‌ல்லை, எ‌ந்த கு‌ற்றமு‌ம் நடைபெற‌வி‌ல்லை. அ‌ப்படி‌ப்ப‌ட்ட தேச‌த்தை ‌சிதை‌த்து ‌வி‌ட்டா‌ர்க‌ள்.

இத‌ற்கு காரணமாக இரு‌ந்த இ‌ந்‌திய அரசை க‌ண்டி‌ப்பது தவறா? இ‌ந்‌தியா எ‌ன்றா‌ல் ஒரு தேச‌ம். வா‌‌சுபா‌ய் உ‌ள்‌ளி‌ட்ட வேறு பலரு‌ம் ‌பிரதமராக இரு‌ந்து‌ள்ளா‌ர்க‌ள். தேச‌த்தை நா‌ன் குறை கூற‌வி‌‌ல்லை. கா‌ங்‌கிர‌ஸ் அரசையு‌ம் அத‌ன் தலைமையையு‌ம்தா‌ன் கு‌ற்ற‌ம்சா‌ட்டுகிறே‌ன்.

இ‌ங்கு‌ள்ள த‌மிழ‌ர்க‌ள் பல‌ர் நட‌‌ந்து கொ‌ண்டதை ‌நினை‌க்கு‌ம்போது அவமானமாக இரு‌க்‌கிறது. பணமா? போரா‌ட்டமா? எ‌ன்ற கே‌ள்‌வி எழு‌ந்த போது, பண‌த்த‌ி‌ன் ப‌க்க‌ம் சே‌ர்‌ந்து ‌வி‌ட்டானே எ‌ன் த‌மிழ‌ன் எ‌ன்று ‌நினை‌த்து வெ‌ட்க‌ப்படு‌கிறே‌‌ன். எ‌ன் ‌வீ‌ட்டு‌க் கூரை ‌தீ‌ப்‌‌பிடி‌த்து எ‌ரியு‌ம்போதுதா‌ன், த‌ண்‌‌ணீ‌ர் எடு‌த்து வருவே‌ன் எ‌ன்ற எ‌ண்ண‌த்த‌ி‌ல் பல த‌‌மிழ‌ர்க‌ள் இ‌ங்கு உ‌ள்ளன‌ர்.

இ‌ந்த‌நிலை ந‌ல்லதா? உன‌க்கு பா‌தி‌ப்பு வரு‌ம் போது உதவுவத‌ற்கு அரு‌கி‌ல் யாரு‌ம் இரு‌க்க மா‌ட்டா‌ர்‌க‌ள். இ‌னிமேலாவது த‌மிழ‌ர்க‌ள் வெகு‌ண்டு எழ வே‌ண்டு‌ம். இ‌ல்லை‌வி‌ட்டா‌ல், த‌மி‌‌ழ் இன‌த்தை கா‌ப்பா‌ற்ற வே‌ண்டு‌ம்.

இ‌ன்றை‌க்கு உலக அமை‌தி‌க்கான நோப‌ல் ப‌ரிசு‌க்கு உக‌ந்த நப‌ர் மா‌வீர‌ன் ‌பிரபாகர‌ன்தா‌ன்.

இ‌ந்‌‌தியாவு‌ம் ‌‌சீனாவு‌ம் பா‌‌கி‌ஸ்தானு‌ம் எ‌ந்த கால‌த்‌திலாவது ஒ‌ன்றாக சே‌ர்‌‌ந்தது‌ண்டா? எ‌ந்த‌ப் ‌பிர‌ச்சினையை எடு‌த்து‌க்கொ‌ண்டாலு‌ம் ‌சீனாவு‌ம், இ‌ந்‌தியாவு‌ம் அ‌ல்லது இ‌ந்‌தியாவு‌ம், பா‌க‌ி‌ஸ்தானு‌ம் ‌எ‌திரு‌ம் பு‌திருமாக‌த்தா‌ன் இரு‌ப்பா‌ர்க‌ள். அவ‌ர்க‌ள் மூ‌ன்று பேரையு‌ம் ஒ‌ன்றாக சே‌ர்‌‌த்து வை‌த்த பெருமை ‌பிரபாகரனை‌த்தா‌ன் சேரு‌ம். பிரபாகர‌னை எ‌தி‌ர்‌ப்பத‌ற்கு‌த்தா‌ன் இவ‌ர்க‌ள் மூ‌ன்று பேரு‌ம் ஒ‌ன்றாக சே‌ர்‌‌ந்து‌ள்ளா‌ர்க‌ள்.

இல‌‌‌ங்கை‌க்கு எ‌திராக ஐ.நா.சபை‌யி‌ல் இ‌ங்‌கிலா‌ந்து, சு‌வி‌ட்ச‌ர்லா‌ந்து உ‌ள்‌ளி‌ட்ட நாடு‌‌க‌ள் கொ‌ண்டு வ‌ந்த ‌தீ‌ர்மான‌ம் இ‌ன்றை‌க்கு தோ‌ற்கடி‌‌க்க‌ப்ப‌‌ட்டு‌ள்ளது. இல‌ங்கை‌க்கு ஆதரவாக ‌நி‌‌ன்று இ‌ந்த ‌தீ‌ர்மான‌த்தை இ‌ந்‌தியா தோ‌ற்கடி‌த்‌திரு‌க்‌கிறது.

தீ‌ர்மான‌ம் வெ‌ற்‌றி பெ‌ற்‌றிரு‌ந்தா‌ல் முத‌ல் கு‌ற்றவா‌ளியாக இ‌ந்‌தியா ‌நி‌ன்‌றிரு‌க்கு‌ம். அத‌ன் அரு‌கி‌ல் ‌சீனாவு‌ம், பா‌கி‌சுதானு‌ம் ‌நி‌‌ற்கு‌ம். அ‌ந்த‌ப் ப‌ழி‌க்கு பய‌ந்துதா‌ன் ‌தீ‌ர்மான‌த்தை இ‌ந்‌‌‌தியா தோ‌ற்கடி‌த்து‌ள்ளது.

எ‌ங்க‌ள் ஆ‌ழ்மன‌தி‌ல் வேதனை‌த் ‌தீ எ‌ரி‌ந்து கொ‌ண்டிரு‌க்‌கிறது. அது எ‌ப்படி வெடி‌த்து வெ‌ளி‌க்‌கிள‌ம்ப‌ப் போ‌கிறது? எ‌ன்பதை‌‌ப் பா‌ர்‌க்க‌த்தா‌ன் போ‌கி‌றீ‌ர்க‌ள். மான‌மி‌க்க ‌வீர‌ம் பொரு‌ந்‌திய த‌மிழ‌ர்‌ கூ‌ட்ட‌ம் இ‌ன்னு‌ம் இரு‌ப்பதை மற‌ந்து‌விட வே‌ண்டா‌ம்" எ‌‌ன்று இய‌க்குன‌ர் ‌சீமா‌ன் பே‌சினா‌ர்.

Blog Widget by LinkWithin