
விரிவான செய்தியைப் படிக்க இங்குச் சொடுக்கவும்
1. தமிழ் 1,500 ஆண்டுக்கு உட்பட்டதா? பிழையைத் திருத்துமா இந்திய அரசு?
2.தமிழ் அகவைத் திருத்த மாநாடு
- நன்றி: மலேசியாஇன்று

கோலாலம்பூர் அக்.9
செம்மொழி எனும் தகுதிபெற்ற மொழியாக அறிவிக்கபட்டிருக்கும் தமிழ்மொழிக்கு இந்திய நடுவண் அரசு 1,500 ஆண்டுகள் எனும் வரையறையை, நாடு முழுவதுமுள்ள அரசியல் சாரா இந்திய அமைப்புகள் மறுத்துள்ளன.
அத்துடன், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது தமிழ் என்று அந்த வரையறையில் உடனடியாக திருத்தம் செய்ய வேண்டும் என்றும் அந்த இயக்கங்களின் சார்பில் அமைக்கப்பட்ட ‘செம்மொழி அகவை திருத்தக் குழுவின்’ தலைவர் முனைவர் நாகப்பன் ஆறுமுகம் இந்திய நடுவண் அரசைக் கேட்டுக்கொண்டார்.
இதன் தொடர்பாக மாநாடு ஒன்று அக்டோபர் 24ஆம் நாளன்று காலை மணி 9:00 முதல் பகல் 1:00 மணி வரைக்கும், கோலாலம்பூர் ஜாலான் ஈப்போ மூன்றரை மைலில் உள்ள முத்தியாரா காம்பிளக்சு மண்டபத்தில் நடைபெறும். தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் இந்த மாநாட்டிற்குத் திரளாக வருகை தந்து தமிழுக்கு உதவும்படி அவர் கேட்டுகொண்டார்.

(மக்கள் ஓசை நாளிகை (8.10.2010) செய்தி)
இதனை உடனடியாகச் செயல்படுத்த வேண்டி இந்திய நடுவண் அரசிற்கும், தமிழக அரசிற்கும், யுனேசுகோ நிறுவனத்திற்கும் மிக விரைவில் மலேசியாவிலுள்ள இந்தியத் தூதரகத்தில் மகஜர் வழங்கப் போவதாக அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் திரண்டு வந்து இம்மாநாட்டில் கலந்து ஆதரவு வழங்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
இம்மாநாட்டில் நாடு தழுவிய அளவில் செயல்படும் 170 தமிழ் பொது இயக்கங்கள் கலந்துகொள்ளும்.
மேல் விவரங்களுக்கு முனைவர் ஆறு.நாகப்பன் (016-9691090), பாதாசன் (019-2401943), சு.வேலுசுப்பிரமணியம் (013-696-4593) ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம்.

கோலாலம்பூர் செப் 24,
உலகத்தின் மூத்த மொழிகளுள் ஒன்றான தமிழ்மொழிக்கு 1000 அல்லது 1,500 ஆண்டுகளுக்கு உட்பட்ட மொழி எனக் கணக்கிட்டுச் ‘செம்மொழி’ எனும் தகுதியை இந்திய நடுவண்(மத்திய) அரசு வழங்கி இருப்பதும், அதனைத் தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொண்டிருப்பதும் வரலாற்றுப் பிழை என்று தமிழ்ச் ‘செம்மொழி அகவைத் திருத்த ஆய்வுக் குழு’ சுட்டிக்காட்டி இருக்கிறது.
இந்தப் பிழையைச் சுட்டிக்காட்டி, தமிழ்மொழி குறைந்தபட்சம் 3,000 (மூவாயிரம்) ஆண்டுகளுக்கு முற்பட்ட மொழியென்று வரையறுத்து, அந்தப் பிழையைத் திருத்தும்படி கோரும் மகஜர் ஒன்றை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அடுத்த மாதம் மேற்கொள்ளும் மலேசிய வருகையின்போது நேரில் வழங்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்தக் குழுவின் தலைவர் ஆறு.நாகப்பன் கூறினார்.
மலேசிய இந்தியப் பொது அமைப்புகளின் ஒருங்கிணைப்புப் பேரவையின் ஏற்பாட்டில் அதன் தலைவர் இராஜரத்தினம் தலைமையில் இங்கு ஓர் உணவகத்தில் கூட்டம் நடத்தப்பட்டது. அதில், அமைக்கப்பட்ட மேற்கண்ட குழுவின் தலைவராகப் பணியமர்த்தம் செய்யப்பட்ட ஆறு.நாகப்பன் மேற்கண்டவாறு விளக்கினார். அவர் தொடர்ந்து கூறியதாவது:-
சங்கம் வைத்து வளர்த்த தமிழ் என்பது வரலாறு. ஒரு சங்கம் அல்ல; இரண்டு சங்கங்கள் அல்ல. மூன்று சங்கங்களால் வளர்க்கப்பட்டது செம்மொழியாகியத் தமிழ்மொழி. ஒவ்வொரு சங்கமும் 4,000 முதல் 5,000 ஆண்டுகள் இருந்தது என்பதும் வரலாறுதான். இதன் மூலம் கூட்டிக் கழித்துப் பார்த்தால், எப்படியும் 10,000 (பத்தாயிரம்) ஆண்டுகளுக்கு முற்பட்டது தமிழ் என்பது தெரியவரும்.
இந்த ஆண்டு வரையறை மிகையானது என்று கூறுபவர்கள்கூட தமிழுக்கு இன்றுவரை தொடர்ந்து இருந்துவரும் இலக்கண நூலான ‘தொல்காப்பியம்’ கி.மு.3ஆம்நூற்றாண்டில் எழுதப்பட்டது என்பதை ஒப்பவே செய்வார்கள். அப்படியெனில், குறைந்தபட்சம் 2,300 ஆண்டுக்கு முற்பட்ட தமிழை 1,500 ஆண்டுகளுக்கு உட்பட்ட மொழி என்பதற்குள் அடக்கி, செம்மொழியாக அறிவிக்கப்பட்டிருப்பது அபத்தமான வரலாற்றுப் பிழையாகும்.
இதைத் திருத்தி, 3,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மொழியாகத் தமிழை வரையறுத்துச் செம்மொழி எனும் தகுதியை நிலைநிறுத்த வேண்டுமென்று இந்திய நடுவண் அரசிடம் இக்குழு கேட்டுக்கொள்ளும்.
அதற்கேற்ப மகஜர் தயாரிக்கப்பட்டு, அது முதலில் இங்குள்ள இந்தியத் தூதரகத்திடமும், தமிழ்நாடு அரசிடமும், யுனேஸ்கோ எனும் ஐ.நா நிறுவனத்திடமும் வழங்கப்படும். அதேவேளையில், அந்த மகஜர் கோலாலம்பூரில் ஜாலான் துன் சம்பந்தனில் அமைக்கப்பட்டுவரும் ‘லிட்டல் இந்தியா’ நகரைத் திறந்து வைக்க இந்தியப் பிரதமர் வரும்போது அவரிடம் நேரடியாகவே வழங்கப்படுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
அதற்கும் முன்பதாக, அக்டோபர் மாதம் 24ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமையன்று தலைநகரில் தமிழ் செம்மொழி அகவை திருத்தக் ஆய்வுக் குழு சார்பில் மாநாடு ஒன்று நடத்தப்படும். இந்த மாநாட்டுக்குத் தமிழறிஞர் தமிழ்ச் செம்மொழிக் காவலர் மணவை முஸ்தப்பா சிறப்புச் சொற்பொழிவு ஆற்ற அழைப்பதெனவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
அதனைத் தொடர்ந்து, அக்டோபர் 27ஆம் நாளில் நடைபெறும் பிரிக்பீல்ட்ஸ் லிட்டல் இந்தியா திறப்புவிழாவில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தங்களின் கோரிக்கை மகஜர் வழங்கப்படும்.
நன்றி: மலேசிய நண்பன் 24.9.2010
1)முதலில் நீங்கள் செய்ய வேண்டிய அடிப்படையானது என்ன தெரியுமா? உங்கள் அம்மாவை அழகாகத் தமிழில் ‘அம்மா’ என்று கூப்பிடுங்கள். அப்பாவை ‘அப்பா’ என்று அழையுங்கள். மம்மி, டாடி என்பதை விட்டொழியுங்கள். வீட்டுக்கு யார்வந்தாலும் ‘அங்கிள்’ என அழைக்காமல், மாமா என்று தமிழில் சொல்லுங்கள். அங்கிள் என்ற ஒரு ஆங்கிலச் சொல் இன்று மாமா, சித்தப்பா, பெரியப்பா ஆகிய எல்லா உறவுமுறைச் சொற்களையும் விழுங்கிவிட்டது. இவர் மாமா, இவர் சித்தப்பா, இவர் பெரியப்பா என உங்கள் அன்பான குடும்ப உறவுகளை அடையாளம் காட்டுவதற்குத் தமிழைப் பயன்படுத்துங்கள்.
2)தமிழர் குழந்தைகளின் பெயர்கள் இன்று தமிழாக இருப்பதில்லை. நவின காலம் என்ற போதையில் பொருள் புரியாத பெயர்களை வைக்கிறார்கள். அதுகூட தாழ்வில்லை. சிலர் அருவருப்பான பொருள்கொண்ட பெயர்களைச் சூட்டி விடுகிறார்கள். தமிழ் அறிவும் பற்றும் குறைந்து போனதுதான் இதற்குக் காரணம். இப்போது உங்கள் பெயர் ‘கொச்சையானதாக’ இருந்தாலும் அதை மாற்ற முடியாது. ஆனால், உங்களுக்குத் தம்பி பிறந்தால், தங்கை பிறந்தால் நல்ல தமிழ்ப் பெயரை வைக்கச் சொல்லுங்கள்.
3)இங்கே இருக்கும் மாணவர்களில் பலர் தமிழ்ப்பள்ளியில் படித்தவர்களாக இருக்கிறீர்கள். சற்றுமுன் மலாய் பள்ளியிலிருந்து வந்த மாணவர்கள் சிலர் தமிழில் அழகாகப் படைப்புகள் செய்தீர்கள். பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்களைப் போல உங்கள் தம்பி தங்கைகளைத் தமிழ்ப்பள்ளியில் போடச்சொல்லி உங்கள் பெற்றோருக்குச் சொல்லுங்கள். தெரியாத்தனமாக வேறு பள்ளிக்குச் சென்றுவிட்டாலும், தாய்மொழியாம் தமிழைக் கட்டாயம் படியுங்கள்.
4)தமிழ்ப்பள்ளியிலிருந்து வந்த மாணவர்கள் பிஎம்ஆர், எசுபிஎம், எசுதிபிஎம் போன்ற அரசுத் தேர்வுகளில் தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் கண்டிப்பாக ஒரு பாடமாக எடுங்கள். இதன்வழி தமிழைக் கல்விமொழியாக காப்பாற்றிவைக்க நீங்கள் உத முடியும்.
5)உங்கள் வீட்டு நிகழ்ச்சிகளைத் தமிழில் நடத்தச் சொல்லுங்கள். உங்களுக்கு 21ஆவது பிறந்தநாள் செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அது நம்முடைய பண்பாடு இல்லாவிட்டாலும், அதைச் செய்யும் போது பதாகை(Banner) அல்லது சுவரில் ‘Happy 21st Birthday’ என்று ஆங்கிலத்தில் மட்டும் எழுதாமல் தமிழிலும் எழுதக்கூடாதா? ஏன் இப்படி சிந்திக்க மறுக்கிறோம். நம் வீட்டில் தமிழுக்கு இடமில்லை என்றால் பிறகு யார்வந்து தமிழுக்கு இடம் கொடுப்பார்கள்?
6)இறைவழிபாடு செய்வதற்குத் தமிழ் மந்திரங்களையும், அருட்பாடல்களையும் பயன்படுத்துங்கள். தேவார, திருவாசகப் பதிகங்களைப் பாடி வழிபாடு செய்யுங்கள். சொந்த மொழியில் இறைவனோடு பேசலாம். எல்லாம் வல்ல இறைவனுக்கு இந்த மொழிதான் புரியும் மற்ற மொழி புரியாது என்பது அறிவுக்குப் பொருத்தமான கருத்து அல்ல. உங்கள் வழிபாட்டைத் தமிழில் செய்யுங்கள்.
7)நீங்கள் தமிழர். இன்னொரு தமிழரிடம் தமிழில் பேசுங்கள். தமிழருக்குத் தமிழர் பேசும் போது பிறமொழிகள் எதற்கு?
8)ஏதேனும் ஒரு தமிழ் நாளிதழை வாங்கிப் படியுங்கள். நாள்தோறும் வாங்க முடியாவிட்டாலும் ஞாயிற்றுக் கிழமையாவது வாங்கிப் படியுங்கள். குயில், மயில் போன்ற மாணவர் இதழ்களை வாங்கலாம். உங்கள் குரல், செம்பருத்தி, ஆலமரம் போன்ற நல்ல இதழ்கள் வருகின்றன. ஏதாவது ஒன்றை வாங்குங்கள். இதற்காக நீங்கள் கொடுக்கும் பணம் தமிழ் வளர்ச்சிக்குப் பயன்படுவதோடு, உங்கள் உள்ளத்திலும் இல்லத்திலும் தமிழ்மணம் வீசும்.
9)பள்ளியில் அல்லது வெளியில் எந்த ஒரு அறிவிப்பு, அறிக்கை வெளியிட்டாலும் அதனைத் தமிழில் வெளியிடுங்கள். இன்று கணினிக் காலத்தில் வாழ்கிறோம். கணினி, கைப்பேசி வரையில் தமிழ் நன்றாகச் செயல்படுகிறது. தமிழில் தட்டச்சு செய்வதற்கு எந்த சிக்கலும் இப்போது இல்லை. ஆகவே, தமிழர்களுக்காக எழுதப்படும் சுற்றறிக்கை, அறிவிப்பு, கடிதம் எதுவானாலும் அது தமிழாக இருப்பதை உறுதிபடுத்துங்கள்.
10)மாணவர்களே நீங்கள் இப்போதுதான் படித்துக்கொண்டிருக்கிறீர்கள். பெரியவர்கள் ஆனதும் எப்படி கையொப்பம் போடலாம் என்று பழகுவீர்கள் அல்லவா? அந்தக் கையொப்பத்தைத் தமிழில் போடுங்கள். இந்த மொழியில்தான் கையொப்பம் போட வேண்டும் என்று கட்டாயமில்லை. தமிழர்கள் நாம் தமிழில் கையொப்பம் போட யாரும் தடை விதிக்கவும் இல்லை. ஆகவே, இப்போதே தமிழில் கையொப்பம் போடக் கற்றுக்கொள்ளுங்கள்.
11)நாம் பல அரசு, தனியார் அலுவலகம் செல்லுகிறோம். அங்கே பார்த்தால் ஆங்கிலம், மலாய், சீன மொழிகளில் அறிவிப்புகளும், படிவங்களும் இருக்கும். ஆனால், தமிழ் இருக்காது. நமக்கு ஏன் இந்த நிலைமை? வெட்கமாக இல்லையா உங்களுக்கு? இதற்கு என்ன செய்யலாம்? அந்த அலுவலகத்தில் ‘சேவை மறுமொழி படிவம்’ (Borang Maklumbalas) இருக்கும். அதில், இந்த அலுவலகத்தில் தமிழுக்கும் இடம் கொடுக்கவும் என்று எழுதிப் பெட்டியில் போட்டுவிட்டு வாருங்கள். எல்லாரும் இப்படியே செய்வோம். ஓராண்டுக்குச் செய்வோம். மாற்றம் வருமா வராதா? பொருளகம் செல்கிறோம். அங்கும் தமிழுக்கு இடமில்லை. மறுமொழி படிவத்தை எடுத்து “தமிழ் வேண்டும். இல்லாவிட்டால் கணக்கை மூடுவேன்” என்று எழுதிப் போட்டுவிட்டு வாருங்கள். மறுமாதம் சொன்னபடி கணக்கை மூடுங்கள். இப்படியே நாடு முழுவதும் எல்லாத் தமிழரும் செய்வோம். பிறகு பாருங்கள். தமிழுக்குத் தானாக இடம் கிடைக்கிறதா இல்லையா பாருங்கள்.
12)தமிழர்களாகிய நாம் தேவைப்படும் போதெல்லாம் நமது பண்பாட்டு உடைகளை விரும்பி உடுத்த வேண்டும். இன்று மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என எல்லாரும் பண்பாட்டு உடையணிந்து வந்திருப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது. இதேபோல், வீட்டு நிகழ்ச்சிகளிலும், ஆலயம் செல்லும்போதும் பண்பாட்டு உடைகளை உடுத்துவதைப் பழக்கப்படுத்திக்கொள்வோம். நாம் தமிழர் என அடையாளம் காட்டுவதற்கு உடையும் மிக முக்கியம்.
இப்படிச் சிலவற்றை உங்களால் செய்ய முடியும். ஏற்கனவே சொன்னது போல மாணவர்கள் நீங்கள் மனதுவைத்தால் சீர்கெட்டுக் கிடக்கும் தமிழர்களைத் தட்டி எழுப்ப முடியும். நீங்கள் மனது வைத்தால் தமிழ்மொழியையும் பண்பாட்டையும் தூக்கி நிறுத்த முடியும். முடிவெடுங்கள் தம்பிகளே.. முடிவு செய்யுங்கள் தங்கைகளே.. மாற்றங்கள் மாணவர்களாகிய உங்களிடமிருந்து தொடங்கட்டும்.

மனதைத் தொட்ட மரபுக்கவிதை - 3
மலேசிய அரசியல் சூழல் இன்று மாற்றத்திற்கு உள்ளாகி இருக்கிறது. இந்த மாற்றத்தின் காரணமாக அரசியல் பிழைப்போரிடமும் மேல்மட்டத் தலைவர்கள் தொடங்கி குட்டி குட்டி தலைவர்கள் வரையில் தன்னலப் போக்கு வரம்புமீறி போய்க்கொண்டிருக்கிறது. தன்னலத்துக்காக தன் இனத்தையே அழிக்கும் அளவுக்கு இன்று தமிழர்கள் துணிந்துவிட்டார்கள். இது அரசியல் நிலை என்றால், குடும்ப அளவிலும் இன்று இதே நிலைமைதான். ஒற்றுமை, புரிந்துணர்வு, விட்டுக்கொடுத்தல் முதலிய பண்புகள் நலிந்துபோய்விட்டன. தமிழர்கள் தங்களுக்குள்ளேயே பிளவுபட்டதும் அல்லாமல் அடித்துக்கொள்வது பேரவலமாக இருக்கின்றது. அடுத்த அடிகளில் செவ்விசைச் சித்தரும் இதனையே சொல்லுவதைப் பாருங்கள்.
iOS4இல் இயல்பாகச் சேர்க்கப்பட்டுள்ள தமிழ் இயக்கத்திற்கு மேலும் மெருகூட்டும் வகையில் மலேசியக் கணிஞர் முத்து நெடுமாறன் செல்லினம் எனும் தமிழ்ச் செயலியை வடிவமைத்துச் சாதனைப் புரிந்திருக்கிறார். இதன்வழி தமிழ்மொழியை அடுத்த தொழில்நுட்பத்திற்கு மேம்படுத்தியிருப்பதோடு, தமிழை மேலும் ஒரு படி உயர்த்தியிருக்கிறார்.(ஐ-டியூன்சில் தமிழ் பாடல்களின் பெயர்கள்)
திரு.முத்து நெடுமாறன் சொன்னது போல, இந்தப் புதிய வகை ‘ஐபோன் 4’இல் தமிழிலேயே எல்லா வேலைகளையும் செய்ய முடியும் என்பது தமிழுக்குக் கிடைத்த பெரும் பேறு என்றால் மிகையன்று. மேலும், ‘ஐ-டியுன்’ எனப்படும் இசை நிரலியில் பாடல்களின் பெயர்களையும் பாடல் விவரங்களையும் தமிழிலேயே பதிவுசெய்து கொள்ள முடியும்.