Monday, November 23, 2009

தமிழ்த்தாய் பெற்றெடுத்த உலகத்தின் அம்மாக்கள்



ருமுதுகுரவர் என்பது தாய் தந்தை இருவரையும் குறிக்கும் தமிழ்ச் சொல்லாட்சி. உலக மொழிகளை மூன்று முகமையான குடும்பங்களில் வகைப்படுத்துகிறார்கள். இந்த மூன்று மொழிக்குடும்பங்களிலும் இருமுதுகுரவரின் பெயர்கள் தமிழாகவே இருக்கின்றன அல்லது தமிழின் திரிபாக இருகின்றன. இதிலிருந்து, பழமையான உலகமொழிகளுக்குத் தமிழ் சொற்கொடை வழங்கியிருக்கிறது என்பது தெரியவருகிறது. அதுமட்டுமல்லாம், தமிழ் பல பழமையான மொழிகளுக்குத் தாயாக இருந்திருப்பதும் தெரியவருகிறது.

‘உலக அப்பாக்களுக்குத் தமிழே தாய்’ என்ற கடந்த பதிவில் ‘அப்பா’ எனும் தமிழ்ச்சொல் உலகமொழிகளில் எவ்வாறு வழங்கிவருகிறது என்று கண்டோம். அதுபோலவே, இந்த முறை அதோபோல ‘அம்மா’ எனும் தமிழ்சொலின் பரவலைக் காண்போம் வாருங்கள்.

தமிழில் அம்மாவை குறிக்கும் சொற்கள் அம்மை, அம்மன் ஆகியன. தமிழர் வழிபடும் பெண்தெய்வத்திற்கும் இப்பெயரை இட்டுள்ளனர். இச்சொற்கள் பிறமொழிகளில் ஆளப்படுகின்றன.

தமிழ்:- அம்மை(தாய்), அம்மன் (காளி, பெண்தெய்வம்)

மலையாளம்:- அம்ம, உம்ம // கன்னடம்:- அம்ம, தெஅம்ம, கோஅம்மன்(தெய்வம்), குஅம்மெ, துஅம்ம // கோலாமி:- அம்ம, நாஅம்ம // பிராகுவீ:- அம்மா // துளு:- அம்மெ(தந்தை).

குசராத்தி:- மா // இந்தி:- மாம் // வங்காளம்:- மா.

திபேத்தியம்:- ம, மொ // மலாய்:- அமா, எமா // சீனம்:- மா.

சமாயிதம்(Samoiede):- அம்ம // செனசெய்(Jenesei):- அம்ம // அம் // எசுத்திரியன்(Estrian):- எம்ம // பின்னியம்(Finnish):- எமா // அங்கேரியம்:- எமெ // சிந்தி:- அமா.

எபிரேயம்:- ஏம் // அரபி:- உம் // சீரியம்(Syriac):- ஆமோ.

ஐசிலாந்தியம்:- அம்ம(பாட்டி) // பழஞ்செருமானியம்:- அம்ம // செருமானியம்:- அம்மெ(செவிலி) // ஆசுக்கன்(Oscan):- அம்ம // ஆங்கிலம்:- மம்ம, மம் // பிரெஞ்சு:- மமன் // இசுபானியம்(Spanish):- மம // கிரேக்கம்:- மம்ம, மம்மெ // சமற்கிருதம்:- அம்மா, அம்பா.

அம்மை என்பது அவ்வை என தமிழில் மருவியொலிக்கும். தாய், பாட்டி என்பன இவற்றின் பொருள்கள்.

தமிழ்:- அம்மை = அவ்வை

கன்னடம்:- அவ்வ, அவ்வெ(தாய், பாட்டி, கிளவி) // தெலுங்கு:- அவ்வ // துளு:- அப்பெ(ஆயா) // குடகு:- அவ்வெ // கோலாமி:- அவ் // துடவம்:- அவ் // பர்சி:- அவ்வ(பாட்டி) // கோண்டி:- அவ்வல்.

இலத்தின்:- அவுஸ்(பாட்டன்), ஆவிய(பாட்டி), அவ்-உங்குளுஸ்(அம்மான்)

அம்மாவைக் குறிக்கும் மற்றொரு தமிழ்ச்சொல் அன்னை என்பது அறிந்ததே. இதன் பரவலை இனி பார்ப்போம்.

தமிழ்:- அம்மை, அன்னை

இந்தி:- அன்னி(செவிலி)

துருக்கி:- அன்ன, அன // ஒசித்தியம்(Ostiak):- அனெ, மா, அனை // அங்கேரியம்:- அன்ய, பின்அன்ய.

அபிசினியம்:- இன்னத் // ஓசித்தியம்(Ostiak:- இன(பெண், மனைவி).

அத்தி, ஆத்தி, ஆத்தை என்பனவும் அம்மாவைக் குறிக்கும் தமிழ்சொற்களே. பழந்தமிழில் இவற்றைக் காணலாம். இன்றும் மக்கள் வழக்கில் இவை உள்ளன. எதையாவது வியந்து சொல்லும்போது பெண்கள் ‘அடியாத்தி’ என்று சொல்லுவதைக் கவனிக்கவும்.

தமிழ்:- அத்தி, ஆத்தி, ஆத்தை

மலையாளம்:- ஆத்தோள் // சிங்களம்:- அத்தா(அம்மாய்) // பின்னியம்(Finnish):- ஐத்தி

கோதியம்(Gothic):- ஐத்தின் // சமற்கிருதம்:- அத்தா(தாய், அக்கை, பெரியதாய்), அத்தி(அக்கை).


அம்மாவை அத்தி, அச்சி, ஆச்சி என அழைக்கும் வழக்கமும் தமிழரிடம் உண்டு. பாட்டியை ஆச்சி என இன்றும் அழைக்கின்றனர்.

தமிழ்:- அத்தி, அச்சி, ஆச்சி.

மலையாளம்:- அச்சி, ஆச்சி(தாய், செவிலி) // கன்னடம்:- அச்சி(தாய்), அஜ்ஜி(பாட்டி) // துளு:- அஜ்ஜி(பாட்டி) // குருக்கு:- அஜ்ஜீ(பாட்டி) // மலாய்:- மாச்சி

தமிழ்:- அக்கை, (தாய், தமக்கை), அக்காள்(தமக்கை), அக்கை = அக்கன்.

கன்னடம்:- அக்க // தெலுங்கு:- அக்க // துளு:- அக்க, அக்கெ // கோத்தம்:- அக்ன // துடவம்:- ஓக்ன் // குடகு:- அக்கெ.

மராத்தி:- அக்கா // இலத்தின்:- அக்கா(தாய்) // சம்ற்கிருதம்:- அக்கா(தாய்), மங்கோலியம்:- அக்கு(அண்ணன்) // துங்குசியம்:- அக்கி(அண்ணன்)

தமிழ்:- ஆய் // மராத்தி:- ஐய // பிராகுவீ:- ஐய // போர்த்துக்கீசியம்:- ஐய(செவிலி) // ஆங்கிலம்:- ஆயா(செவ்லி) // மலாய்:- ஆயா(அப்பா)

இத்தனையும் பார்த்தோம். இனி, தாய் என்பதைக் காண்போம்.

தமிழ்:- தாய் // மலையாளம்:- தாய் // கன்னடம்:- தாய் // தெலுங்கு:- தாயி.

தமிழ்:- தள்ளை // மலையாளம்:- தள்ள // தெலுங்கு:- தல்லி // பர்சி:- தல்.



இப்படியாக, உலக மொழிகள் பலவற்றிலும் தமிழ்ச் சொற்கள் இருக்கின்றன என்பதை இன்றை சொல்லாராய்ச்சித் துறை (Etimology) ஏற்றுக்கொண்டிருக்கிறது. மேலை நாடுகளில் வெளியிடப்பெறும் வெப்சுதர்(Webster) முதலான சொல்லாராய்ச்சி அகரமுதலிகள் உலகமொழிகளில் காணப்படும் தமிழின் தடங்களையும் மூலங்களையும் மறைக்காமல் – மறுக்காமல் பறைசாற்றிக் கொண்டுதா இருக்கின்றன. ஆனால் பாவம், தமிழன்தான் தன் மொழியின் பெருமையை அறியாமல் இருக்கின்றான்.
அதனால், எங்கும் - எதிலும் - எப்போதும் தன்னைத் தாழ்வாகவே எண்ணுகின்றான். தன்மொழி உணர்வே தமிழனுக்கு தன்னம்பிக்கையும் தன் இனமான உணர்வையும் கொடுக்கும். அதுவொன்றே, தமிழனைத் தலைநிமிர்ந்து வாழவைக்கும்.
  • மூலம்:- மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர், தமிழ் வரலாறு

10 comments:

Unknown said...

// ஆனால் பாவம், தமிழன்தான் தன் மொழியின் பெருமையை அறியாமல் இருக்கின்றான். //

இதே தான் எம் பிரச்சினை..
தமிழ் கதைப்பதை நாமே தாழ்வாகக் கருதின் எவ்வாறு எமது மொழியின் பெருமை மற்றவர்களுக்கு புரியும்?

எல்லாமே நாங்கள் 'நாகரிக மோகம்' என்று கருதுவதால் வந்துசேர்பவை....

சுப.நற்குணன்,மலேசியா. said...

>திருத்தமிழ் அன்பர் கனககோபி,

//தமிழ் கதைப்பதை நாமே தாழ்வாகக் கருதின் எவ்வாறு எமது மொழியின் பெருமை மற்றவர்களுக்கு புரியும்?//

உங்கள் கருத்தை 100% வழிமொழிகிறேன்.

"பழம்பெருமை பேசியே தமிழன் கெட்டான்" என்று நம்மின மேதாவிகள் சிலர் பிதற்றுவார்கள். அது அவர்களின் புல்லறிவிற்கு நல்ல சான்று.

தமிழனின் உண்மையான பழம் பெருமைகளைப் பேசாமல் - அறியாமல் - உணராமல்தான் தமிழன் கெட்டான்.. இன்னும் கெடுகின்றான் என்பதே சரி..!

சீ.பிரபாகரன் said...

சிறந்த பதிவு,

தமிழன் தன்னை தமிழன் என்றே உணராமல் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கிறான்.

தன்னை யார் என்றே உணராத சமூகம் அடிமைச்சமூகமாகத்தான் இருக்க முடியும்.

தமிழ்நாட்டில் தமிழன் தி.மு.க. போன்ற கட்சிகளால் மலடாக்கப்பட்டுள்ளான். தி.மு.க.-வின் அழிவில் தான் தமிழினத்தின் விடுதலை அடங்கியுள்ளது. இதை உலகத் தமிழர்கள் அனைவரும் உணர்ந்து செயல்படவேண்டும்.

மனோவியம் said...

நல்ல கருத்தான பதிவு ஐயா...

சுப.நற்குணன்,மலேசியா. said...

>திருத்தமிழ் அன்பர் சீ.பிரபாகரன்,

முதன்முறையாகத் திருத்தமிழில் உங்களைச் சந்திக்கிறேன். வருகைக்கு நன்றி.

//தி.மு.க.-வின் அழிவில் தான் தமிழினத்தின் விடுதலை அடங்கியுள்ளது. இதை உலகத் தமிழர்கள் அனைவரும் உணர்ந்து செயல்படவேண்டும்.//

ஆரிய மாயை என்று அண்ணா சொன்னது போதாது. அது இன்று திராவிட மாயையாக.. இந்திய மாயையாக.. இந்து மாயையாக.. பூதாகரமாக வளர்ந்துவிட்டிருக்கிறது.

இவை மூன்று மாயைகளும் தமிழனின் மூளையில் உடைக்க முடியாத விளங்குகளாக பூட்டிக்கொண்டிருக்கிறது.

இவற்றை உடைத்தெறிவது என்பது இந்த ஊழியில் கண்டிப்பாக முடியாது..!

அனேகமாக, தமிழினத்திற்கு இதுவே இறுதி நூற்றாண்டாக அமையலாம்.

சுப.நற்குணன்,மலேசியா. said...

>திருத்தமிழ் அன்பர் மனோகரன் கிருஷ்ணன்,

மீண்டும் மறுமொழி இட்டமைக்கு நன்றி. உங்களிடமிருந்தும் நல்ல படைப்புகள் உருவாகுவதற்கு நிறைய செய்திகளை வைத்திருக்கிறீர்கள்.

உங்கள் பதிவில் எழுதலாமே.. நண்பரே..!

யூர்கன் க்ருகியர் said...

நன்று . நன்றி !

நீலகண்டன் said...

படிக்க வேண்டிய கட்டுரை : http://kalaiy.blogspot.com/2009/11/blog-post_25.html

சுப.நற்குணன்,மலேசியா. said...

>திருத்தமிழ் அன்பர் யூர்கன் க்ருகியர்,

மீண்டும் வந்ததற்கு மறுபடியும் நன்றி நண்பரே.

சுப.நற்குணன்,மலேசியா. said...

>திருத்தமிழ் அன்பர் நீலகண்டன்,

தகவலுக்கு மிக்க நன்றி. அந்தப் பதிவில் பல நல்ல செய்திகள் உள்ளன.

இதற்கு முன்னர், குமரிக்கண்டம் பற்றி நீங்கள் எழுதிய மறுமொழிகள் அதற்கு நான் சொன்ன பதிலுரைகள் சில எப்படியோ.. யாராலோ.. பின்கதவு வழியாக நீக்கப்பட்டுள்ளன.

அதனைப் பற்றி பதிவிட்டுள்ளேன். பார்க்கவும்.

http://thirutamil.blogspot.com/2009/11/2010.html

Blog Widget by LinkWithin