Wednesday, December 15, 2010

மலேசியத் தமிழ் வலைப்பதிவர் கலந்துரையாடல்


மலேசிய உத்தமம் அமைப்பின் ஏற்பாட்டில், தமிழ் வலைப்பதிவர் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாள்: 19-12-2010 (ஞாயிறு)
நேரம்: மாலை மணி 2:00 - 4:00
இடம்: தாமரை உணவகம், ஜாலான் காசிங் பெட்டாலிங் ஜெயாவில் (Lotus Restaurant, Jalan Gasing P.J)
உத்தமம் அமைப்பின் நிருவாகக் குழு உறுப்பினரும், மலேசிய நிகராளியும் ஆகிய சி.ம.இளந்தமிழ் இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வழிநடத்துவார்.

தமிழ் இணைய முன்னோடிகளில் ஒருவரான திரு.பாலா பிள்ளை (Tamilnet- Australia)அவர்கள் சிறப்பு வருகையளிக்கவுள்ளார்.
இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சியின் உள்ளடக்கம் பின்வருமாறு:

1.வலைப்பதிவர் அறிமுகம்
2.மலேசியத் தமிழ் வலைப்பதிவு வாழ்வும் வளர்ச்சியும்
3.மலேசியாவில் தமிழ் வலைபதிவர்களை அதிகரிப்பதற்கான வழிவகைகள்
4.மலேசியத் தமிழ் வலைப்பதிவுகளை மாற்று ஊடகமாக வளர்த்தெடுத்தல்
5.மலேசியத் தமிழ் வலைப்பதிவுலகச் சிக்கல்களும் தீர்வுகளும்
6.மலேசியத் தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு / பட்டறை
குறுகிய காலத்தில் இந்த ஏற்பாட்டினைச் செய்திருப்பதால், இதனையே அழைப்பாக ஏற்று மலேசியத் தமிழ் வலைப்பதிவர்கள் வருகை தருமாறு அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.

இதற்கு முன்னதாக, இவ்வகையிலான சந்திப்பு நடைபெற்று இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இப்போது மீண்டுமொரு முறை ‘மலேசியத் தமிழ் வலைப்பதிவர் கலந்துரையாடல்’ நடைபெற உள்ளது.

ஆகவே, இதனை நல்வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு மலேசியத் தமிழ் வலைப்பதிவர்கள் அனைவரும் கலந்துகொள்ளவும்.
வலைப்பதிவர் நண்பர்கள் தயவுசெய்து தங்கள் வருகையை உறுதிபடுத்தும் வகையில் அழைத்து தெரிவிக்கவும் அல்லது குறுஞ்செய்தி விடுக்கவும்.

மேல் விவரங்களுக்கும் தொடர்புக்கும்:
சி.ம.இளந்தமிழ் - உத்தமம் (012-3143910) சுப.நற்குணன் - திருத்தமிழ் (012-5130262) மின்னஞ்சல்: thirutamilblog@gmail.com

1 comment:

மு.வேலன் said...

நல்ல பயனான இந்த கலந்துரையாடலை ஏற்பாடு செய்த திருத்தமிழ் சுப.நற்குணன் அவர்களுக்கும் சி.ம.இளந்தமிழ் அவர்களுக்கும் நன்றிகள்.

Blog Widget by LinkWithin