Tuesday, May 26, 2009

மாவீரர் நாளில்.. மீண்டும் பிரபாகரன்:- விகடன் நம்பிக்கை

பிரபாகரன் கொல்லப்பட்டதாகத் தொடர்ந்து செய்தி பரப்பும் ஊடகங்கள் எட்டாம் நாள் பால் ஊற்றவும் தயாராகிவிட்டன.

ஆனால், புலிகள் அமைப்பின் பிரதிநிதிகளாக உலகம் முழுக்க விரவியிருக்கும் முக்கியஸ்தர்கள், “அண்ணன் மிக பத்திரமா இருக்கார். அவருக்குப் பாதுகாப்பாக முக்கியத் தளபதிகளும் போராளிகளும் இருக்கிறார்கள். விரைவிலேயே அண்ணனின் வீர உரையை உலகம் கேட்கும்!” என உறுதியாகச் சொல்கிறார்கள்.

மூவாயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகள்… இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள்… பிரபாகரனின் சம காலத் தளபதிகள்… என நினைக்கவே நெஞ்சு பதறவைக்கும் ஈழத்து இழப்புகளையும், ஈழத்தின் கடைசி நிமிடங்களையும் வேதனையோடு நம்மிடம் பகிர்ந்துகொண்டார்கள் அந்தப் பிரதிநிதிகள்.

அடுத்து என்ன நடக்கும் என்று அவருக்குத் தெரியும்!

“முப்பது வருடப் போராட்ட காலத்தில் ‘அடுத்து என்ன நடக்கும்?’ என்பதை யூகிப்பதில் தலைவர் ரொம்பவே கெட்டிக்காரர். கடைசிக் கட்ட நெருக்கடிகள் குறித்து, அவருக்குப் பல மாதங்களுக்கு முன்பே தெரியும். அதனால்தான், கடைசிவரை பதிலடித் தாக்குதல் நடத்தாமல், ஆயுதங்களைப் பதுக்குவதிலேயே குறியாக இருந்தார். இரண்டு முறை மட்டுமே தாக்குதல் நடத்திய புலிகளின் டாங்கிப் படைகள், அதன்பிறகு எங்கு போயின என்பது யாருக்கும் தெரியாது..! (மேலும் படிக்க)


1 comment:

Anonymous said...

பிரபாகரனே!
என் தலைவனே
என்னை ஈன்று எடுக்கா தாயே! தளபதியே!

உன் போராட்டம் ஆரம்பமாகிற போது- பிறக்கவில்லை நான்
பிறந்திருந்தால் உன்னுடன் போர்க்களம் புகுந்திருப்பேன்

என் கட்ட விரல் வாயில் இருக்கும் போது- உணரவில்லை நான்
என் இனத்திற்காக ஒரு எரிமலை எழுந்திருக்கிறது என்று !
அறியா வயதில் உன் முதல் மரண நாடகத்தை கேட்டேன்
அப்போதும் நான் நம்பவில்லை
என் இனத்தின் ஆலமரம் சாய்ந்ததென்று

இரண்டாம் முறையாக உன் மரணத்தைக் கேட்க
என் செவிகளே மறுத்துவிட்டன

உணர்ந்தேன்..... உணர்ந்தேன்
நீயே என் தொப்புல் கொடி உறவு என்று...

உணர்ந்தேன்....... உணர்ந்தேன்
இந்தியா என் நாடல்ல... ஈழம் தவிர வேறு ஏதுடா பிறந்த நாடு...
நெஞ்சம் பொறுக்கவில்லை..
அங்கே என் உறவு மடிகின்ற செய்தி கேட்டு...

என் உடன் பிறவா புலிகளே..
என்னை அழைத்துச் செல்லுங்கள் உங்களுடன்..
நானும் போராடுகிறேன் உங்களுடன்...
கவிதைக்காக இல்லை மேலேயுள்ள வரிகள்...

சிங்கள ராணுவமே காத்திரு...
புலிகளை அழித்து விட்டோம் என்ற ஆணவம் வேண்டாம்....
ஒரு பெரிய தவறைச் செய்துவிட்டாய் சிங்களனே...
என் தலவனைக் கொன்றுவிட்டோம் என்ற நாடகத்தை நடத்தி....
அமைதியாய் இருந்த உலக தமிழர்களை..
என் தலைவனிடம் பயிற்சி பெறாத புலிகளாக மாற்றி விட்டாயடா....

காத்திரு சிங்களனே...
இனி உனக்கு சாவு மணி காத்திருக்கிறது 5-ஆம் ஈழப் போரில்...
வருவார் என் தலைவன்..
நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு...
ஓய மாட்டார் என் தலைவர்...
தமிழர்காக ஈழம் பெறும் வரை..
மரணமே அவரைக் கண்டால் நடுங்குமடா...

Blog Widget by LinkWithin