தமிழ் செம்மொழி அகவை திருத்த ஆய்வுக் குழுவின் கோரிக்கை இன்று (3-11-2010) காலை மணி 11.00 அளவில் இந்தியத் தூதரிடம் வழங்கப்பட்டது. ஆய்வுக் குழுவின் தலைவர் முனைவர் நாகப்பன் ஆறுமுகம், ஆய்வுக் குழுவின் துணைத்தலைவர் கவிஞர் பாதாசன், ஒருங்கிணைப்பாளர் டாக்டர் வி.சுப்பையா ஆகியோர் இந்தியத் தூதரைச் சந்தித்து ஆய்வுக்குழுவின் கோரிக்கையை விளக்கிக் கூறினர்.
மலேசியாவுக்கான இந்தியத் தூதர் விஜய் கோகலே, துணைத்தூதர் பி.என். ரெட்டி, கவுன்சிலர் திருமதி பூஜா ஆகியோர் ஆய்வுக் குழுவினர் முன் வைத்து விளக்கிய கோரிக்கையைச் செவி மடுத்தனர்.
தொடர்ந்து இந்தியத் தூதர் விஜய் கோகலே இந்திய அரசின் சார்பான தமது கருத்துகளைக் கூறினார்.
“தமிழ் மொழியின் வயதை ஆயிரம் ஆண்டு என்று இந்திய நடுவண் அரசு கூறவில்லை. இந்திய செம்மொழிகளின் குறைந்தபட்ச தொன்மை 1000 ஆண்டு என்றுதான் இந்திய அரசு கூறியுள்ளது. தமிழில் உள்ள சங்க இலக்கியங்கள் பற்றியும் அதன் தொன்மை பற்றியும் இந்திய அரசுக்குத் தெரியும். இந்திய செம்மொழிகளின் குறைந்த பட்ச தொன்மை ஆயிரம் ஆண்டு என்று கூறி முதன் முறையாகத் தமிழைச் செம்மொழி என்று இந்திய அரசு அறிவித்துள்ளது. இதைப் பற்றித் தமிழர்கள் பெருமைப்படுவதோடு மன நிறைவும் அடைய வேண்டும்”, என்றார் தூதுவர்.
தமிழ் 2000 ஆண்டுகளுக்கு முந்திய செம்மொழி என்று யுனெஸ்கோ நிறுவனம் அறிவித்திருக்க இந்திய நடுவண் அரசு ஆயிரம் ஆண்டு என்று ஏன் அறிவிக்க வேண்டும் என்று கேட்டதற்கு, “அது இந்திய அரசின் அதிகாரத்திற்கு உட்பட்ட விஷயம். அதைப் பற்றி இந்தியாவுக்கு வெளியில் இருப்பவர்கள் பேசுவது சரியல்ல”, என்றார்.
தமிழை ஆயிரம் ஆண்டுக்கும் உட்பட்ட செம்மொழி என்று அறிவித்த காரணத்தால் அது இந்திய அரசின் கல்வி அமைச்சின் கீழ் வராமல் பண்பாட்டு அமைச்சின் கீழ் வைக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ் அதன் வளர்ச்சிக்குப் போதுமான அரசு மான்யம் பெற முடியமால் போகலாம் என்று குழுவினர் கருத்து தெரிவித்தனர்.
அப்போது, “எந்த மொழிக்கு எவ்வளவு நிதி ஒதுக்குவது என்பதும் நடுவண் அரசின் அதிகாரத்துக்கு உட்பட்ட விஷயம். அதன் அதிகாரத்தில் மற்றவர்கள் தலையிட முடியாது”, என்று தூதுவர் கூறினார். தொடர்ந்து,
“எங்கள் கோரிக்கையை இந்திய நடுவண் அரசுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் அனுப்பி வையுங்கள். அவர்களின் எதிரொலியை அறிந்த பின்பு நாங்கள் தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை பற்றிச் சிந்திப்போம்” என்று குழுவினர் கூறினர்.
”இன்று இந்தச் சந்திப்பு குறித்து தமிழக அரசுக்கு நாங்கள் அறிவித்துவிட்டோம். உங்கள் கோரிக்கையை உரியவர்களிடம் கட்டாயம் சேர்ப்பிப்போம்”, என்று தூதுவர் கூறினார்.
பின்னர் செய்தியாளர் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளித்தபோது மலேசியத் தமிழ் சார்ந்த அமைப்புகளின் பொறுப்பாளர்களையும் தமிழ் அறிஞர்களையும் கொண்ட புதிய அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டு நமது கோரிக்கைகள் மீது இந்திய நடுவண் அரசு, தமிழ்நாடு அரசு ஆகியவற்றின் நிலைப்பாடுகள் ஆராயப்படும் என்றும் அதன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்குச் செல்வோம் என்று தமிழ் செம்மொழி அகவை திருத்த ஆய்வுக் குழுவின் தலைவர் முனைவர் நாகப்பன் கூறினார்.
- நன்றி: மலேசியாஇன்று
தொடர்பான செய்திகள்:-
2 comments:
தங்கள் வலைப்பூவில் நட்பூ (natpu.in) இணைய இதழில் வந்துள்ள
யாருக்கும் வெட்கமில்லை. (http://www.natpu.in/Pakudhikal/Mukappukkatturai/yarrukkum.php)
எழுத்தைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! (http://www.natpu.in/natpu/Pakudhikal/Ilakkiyam/ezlutthupor.php)
செம்மொழிக் குழுவில் முதல்வருக்கு எதிராகச் செயல்படுவோர் எவர்? ஏன்? (http://www.natpu.in/Pakudhikal/Mukappukkatturai/mudhalvarukkuethiranavargal.php)
தமிழைக் காக்க (http://www.natpu.in/natpu/Pakudhikal/Ilakkiyam/tamillaikakka.phpசெம்மொழி மாநாடும் எழுத்துப் பாதுகாப்புப் போரும்
((http://www.natpu.in/natpu/Pakudhikal/Ilakkiyam/illakkuvanar.php)
முதலிய என் படைப்புகளையும் தங்கள் வலைப்பூ நேயர்களுக்கு அளிக்க வேண்டுகின்றேன்.
நன்றி.
தங்கள் அன்புள்ள
இலக்குவனார் திருவள்ளுவன்
பகிர்வுக்கு நன்றி.
அன்புடன்,
ஆரண்ய நிவாஸ்
ஆர்.ராமமூர்த்தி
http://keerthananjali.blogspot.com/
Post a Comment