கோவையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கலந்துகொள்ள மலேசியாவிலிருந்து பெரிய குழுவை அழைத்துச் சென்றவர் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ.இராஜேந்திரன். அம்மாநாட்டில் மலேசியத் தமிழர்களுக்குத் தனி முத்திரையை ஏற்படுத்திக் கொடுத்திருந்தார். மலேசியக் கட்டுரையாளர்களின் ஆய்வுக் கட்டுரைகளைத் தொகுத்து 'மலேசிய அறிமுக மலரை' இவர் பொறுப்பேற்றிருக்கும் ம.த.எழுத்தாளர் சங்கம் வெளியிட்டிருந்தது.
''குடியேறிய நாட்டில் தமிழ் இலக்கியத்தைக் காப்பாற்றுதலும் வளர்த்தலும்" எனும் தலைப்பில் பெ.இராஜேந்திரன் அவர்கள் கட்டுரை படைத்தார். அதன் நிகழ்படம் கீழே தரப்படுகிறது.
பகுதி 1:-
''குடியேறிய நாட்டில் தமிழ் இலக்கியத்தைக் காப்பாற்றுதலும் வளர்த்தலும்" எனும் தலைப்பில் பெ.இராஜேந்திரன் அவர்கள் கட்டுரை படைத்தார். அதன் நிகழ்படம் கீழே தரப்படுகிறது.
பகுதி 1:-
பகுதி 2:-
பகுதி 3:-
ம.த.எழுத்தாளர் சங்கத்தின் துணைத்தலைவரும், சிறுகதை எழுத்தாளருமான பேராசிரியர் ரெ.கார்த்திகேசு அவர்களும் இம்மாநாட்டில் கலந்துகொண்டு கட்டுரை படைத்தார். இவருடைய கட்டுரையின் தலைப்பு "நவினத் தமிழ் ஊடகங்களில் தமிழ் மொழியின் பயன்பாடு மெய்ம்மையும் அறைகூவல்களும்" என்பதாகும். இவருடைய உரையைக் கீழே வரும் நிகழ்படங்களில் காணலாம்.
பகுதி 1:-
பகுதி 1:-
பகுதி 2:-
பகுதி 3:-
குறிப்பு: பேரா.ரெ.கா அவர்களின் உரையின் பகுதி 3 நிகழ்படத்தின் இறுதியில் சீனா நாட்டைச் சேர்ந்த கலையரசி என்று தமிழ்ப்பெயர் சூடிய அம்மையார் அழகு தமிழில் கட்டுரை வாசிப்பதைக் கேட்கலாம்.
பி.கு:-மலேசியத் தமிழர்களின் மாநாட்டுக் கட்டுரைகள் தொடர்ந்து திருத்தமிழில் இடம்பெறும். தவறாமல் பாருங்கள் - கேளுங்கள்.
பி.கு:-மலேசியத் தமிழர்களின் மாநாட்டுக் கட்டுரைகள் தொடர்ந்து திருத்தமிழில் இடம்பெறும். தவறாமல் பாருங்கள் - கேளுங்கள்.
No comments:
Post a Comment