Thursday, February 04, 2010

தமிழைச் சீரழிக்கும் எழுத்துச் சீர்திருத்தம்


தமிழ் எழுத்துச் சீர்மை என்ற பெயரில் தமிழ் எழுத்துகளை மாற்றி அமைப்பதற்கான முயற்சி மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்படுவதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. எதிர்வரும் சூன் திங்களில் தமிழகத்தில் நடைபெறவுள்ள செம்மொழி மாநாட்டில் அதற்கான அதிகாரப்படியான அறிவிப்பு செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.




இப்புதிய எழுத்துச் சீர்மையால் பல்வேறு நன்மைகள் விளையும் எனவும், தமிழுக்கு ஆக்கங்கள் ஏற்படும் எனவும் போலியான பரப்புரைகளும் புனைந்துரைகளும் தமிழக ஏடுகளில் - தமிழகத் தொலைக்காட்சிகளில் - இணைய ஊடகத்தில் பரப்படுகின்றன.

இதற்கிடையில், இந்த எழுத்துச் சீர்மை தேவையற்றது - இதனால் தமிழுக்கு யாதொரு பயனும் இல்லை - இது தமிழுக்கு மாபெரும் ஊறு விளைவிக்கும் என்ற எதிர்ப்புக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கிவிட்டன - சீரழிவிலிருந்து தமிழைக் காக்கும் குரல்கள் உலகம் முழுவதும் கேட்கத் தொடங்கிவிட்டன.


இதன் தொடர்பில், தமிழகத்தின் அறிஞரும் - மறைமலையடிகள், பாவாணர், பெருஞ்சித்திரனார், வ.சுப.மாணிக்கம் வழியில் தமிழ் பயின்றவரும் - பாரதிதாசன் பரம்பரை என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவரும் - முன்னணி வலைப்பதிவரும் ஆகிய முனைவர் ஐயா.மு.இளங்கோவனார் தம்முடைய கருத்தை வெளியிட்டு இருக்கிறார். அதில் ஒருபகுதி பின்வருமாறு:-

//சில அறிஞர்கள் இ,ஈ,உ,ஊ எழுத்துகளில் மாற்றம் வேண்டும் எனவும் அவ்வாறு மாற்றினால் 4 x 18 = 72 எழுத்துகளில் சீர்மை காணப்படும் எனவும் வாதிடுகின்றனர். ஆனால், இதைச் சீர்மை என ஏற்றுக்கொள்ள முடியாது.

இது முற்றாக மாற்றம் ஆகும். இந்த இடத்தில் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். நாம் எழுதும் சொற்களில் இவ்வகை எழுத்துகள்தான் (அதாவது கி,கீ,மு,மூ) அதிகம் புழங்குகின்றன. இவ்வாறு வரும் 72 எழுத்துகளைப் புதிய குறியீடுகளால் எழுதத் தொடங்கினால் கற்றவர்களால் தமிழைப் படிப்பதே இயலாததாகிவிடும். புதியவர்கள் எப்படித் தமிழ் கற்பார்கள்?

ஆகவே, சீர்மைக்கும் மாற்றத்திற்கும் அறிஞர்கள் வேறுபாடு உணர வேண்டும்.

இவ்வாறு முப்பதாண்டுக் காலம் எழுத்துத்திருத்தம் வலியுறுத்திவரும் அறிஞர்கள் எதிர்வரும் செம்மொழி மாநாட்டில் தங்கள் விருப்பத்தை நடைமுறைப்படுத்தி வெற்றி பெறவேண்டும் என்று நினைக்கின்றனர்.

இவர்களை உலகெங்கும் பரவி வாழும் தமிழறிஞர்களில் பெரும் பிரிவினர் இணையம் வழியாகக் கண்டிக்கத் தொடங்கியுள்ளனர். // விரிவாகப் படிக்க இங்கு சொடுக்கவும்.

எழுத்துச் சீர்மை குறித்து திருத்தமிழ் வலைப்பதில் வந்த செய்திகள் இவை:-

No comments:

Blog Widget by LinkWithin