Tuesday, January 26, 2010

தமிழைக் காக்க தைப்பூசத்தில் உண்ணாநோன்பு



எசு.பி.எம். தேர்வில் தமிழ், இலக்கியப் பாடங்கள் மற்ற பாடங்களுக்கு இணையாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கையை முன் வைத்து தமிழ், தமிழ் இலக்கிய மீட்புக் குழுவினர் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்கின்றனர்.


எதிர்வரும் தைப்பூச நாளன்று நாடெங்கிலும் கொண்டாடப்பட இருக்கும் தைப்பூச விழாக்களின்போது போராட்டவாதிகள் உண்ணாவிரதம் மேற்கொள்ளவிருக்கின்றனர்.


அண்மையில் தமிழ், தமிழ் இலக்கியம் குறித்துக் கல்வி அமைச்சரோடு நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கப்படுகிறது.


“இந்தப் போராட்டம் நாடெங்கிலும் தைப்பூச நாளன்று ஒரே நேரத்தில் நடைபெறும் என்று போராட்டக் குழுவின் தலைவர் ஆ.திருவேங்கடம் தெரிவித்தார். பத்துமலை தைப்பூச விழாவில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. (விரிவாக)
  • நன்றி:விடுதலைமலேசியாஇன்று

1 comment:

Unknown said...

உண்ணாநோன்பு நல்லது. அன்னதானம் வழங்குபவர்களும் தமிழுக்காக எதாவது செய்வார்கள் என்று நம்புவோம்!

Blog Widget by LinkWithin