புதுவையின் புகழ்பெற்ற கல்லூரியான பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியரும், தேவநேயப் பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார், பாவேந்தர் பாரதிதாசனார் வழிசார்ந்த தமிழ் அறிஞரும், நூலாசிரியரும், வலைப்பதிவருமாகிய முனைவர் மு.இளங்கோவன் ஐயா அவர்கள் குறுகிய கால பயணம் மேற்கொண்டு தற்போது மலேசியா வந்திருக்கிறார்.
முதற்கண், மலேசியத் திருநாட்டிற்கு வருகை மேற்கொண்டு வந்திருக்கும் முனைவர் ஐயா அவர்களை

“வருக.. வருக..!
தங்கள் வரவு நல்வரவாகுக..!
தங்கள் வரவினால் மலேசியாவில் தமிழ்நலம் ஓங்குக..!
தங்கள் வரவு நல்வரவாகுக..!
தங்கள் வரவினால் மலேசியாவில் தமிழ்நலம் ஓங்குக..!
என்று வரவேற்பதில் பேருவகை அடைகிறேன்.
18.5.2010 முதல் 25.5.2010 வரையில் முனைவர் ஐயா இங்கு இருப்பார்கள். இந்தக் காலக்கட்டத்தில், மலேசியாவில் பல ஊர்களுக்குச் சுற்றுச்செலவு மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
அவருடைய தமிழ்ப் பயணத்தில் இன்று நானும் (சுப.நற்குணன்), தமிழ் ஆலயம் வலைப்பதிவர் அருமை நண்பர் கோவி.சந்திரனும் இணைந்துகொள்ள இருக்கிறோம். எங்களின் ஏற்பாட்டில் முனைவர் ஐயா கலந்துகொள்ளவுள்ள நிகழ்ச்சிகள் விவரம் பின்வருமாறு.
1.20.5.2010 இரவு – பினாங்கு பயணம். உங்கள் குரல் இதழாசிரியர் கவிஞர் ஐயா.செ.சீனி நைனா முகம்மது, வண்ணக்கவிஞர் கரு.திருவரசு ஆகியோருடன் சந்திப்பு.
2.21.5.2010 காலை மணி 7.30 – தமிழ்ப்பள்ளிச் சூழலைச் சுற்றிப்பார்த்தல். ஆசிரியர்கள், மாணவர்களுடன் சந்திப்பு.
3.காலை மணி 10.00 இரண்டாவதாக மற்றொரு தமிழ்ப்பள்ளியைச் சுற்றிப்பார்த்தல். ஆசிரியர், மாணவர்களுடன் சந்திப்பு.
4.காலை மணி 11.00 – தமிழ்நெறிக் கழகத் தோற்றுநர் பாவலர் அ.பு.திருமாலனார் அவர்களின் நினைவு இல்லத்தில் அஞ்சலி செலுத்துதல். (பாவலரைப் பற்றி தம்முடைய ‘அயலகத் தமிழறிஞர்கள்’ எனும் நூலில் முனைவர் ஐயா எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது)
5.பிற்பகல் மணி 12.30 – தமிழ் அன்பர்களுடன் மதிய விருந்தோம்பல்
6.பிற்பகல் மணி 1.30 – பாரிட் புந்தார், தமிழியல் நடுவத்தில் “தமிழ் வளர்ச்சிப் பணியில் அயலகத் தமிழர்கள்” எனும் தலைப்பில் சொற்பொழிவு. தமிழியல் ஆய்வுக் களம், தமிழ் வாழ்வியல் இயக்கம் ஆகிய அமைப்புகள் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளன. தமிழ்த்திரு.இர.திருச்செல்வம் அவர்கள் இந்நிகழ்ச்சிக்குத் தலைமயேற்பார்.
7.இரவு மணி 7.30 – கிள்ளானில் நாட்டுப்புற இலக்கியம் தொடர்பாக உரையாற்றுவார்.
முனைவர் ஐயா அவர்களின் சுற்றுச்செலவு விவரங்களை அறிய கீழே உள்ள சுட்டிகளைச் சொடுக்கவும்.
18.5.2010 முதல் 25.5.2010 வரையில் முனைவர் ஐயா இங்கு இருப்பார்கள். இந்தக் காலக்கட்டத்தில், மலேசியாவில் பல ஊர்களுக்குச் சுற்றுச்செலவு மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
அவருடைய தமிழ்ப் பயணத்தில் இன்று நானும் (சுப.நற்குணன்), தமிழ் ஆலயம் வலைப்பதிவர் அருமை நண்பர் கோவி.சந்திரனும் இணைந்துகொள்ள இருக்கிறோம். எங்களின் ஏற்பாட்டில் முனைவர் ஐயா கலந்துகொள்ளவுள்ள நிகழ்ச்சிகள் விவரம் பின்வருமாறு.
1.20.5.2010 இரவு – பினாங்கு பயணம். உங்கள் குரல் இதழாசிரியர் கவிஞர் ஐயா.செ.சீனி நைனா முகம்மது, வண்ணக்கவிஞர் கரு.திருவரசு ஆகியோருடன் சந்திப்பு.
2.21.5.2010 காலை மணி 7.30 – தமிழ்ப்பள்ளிச் சூழலைச் சுற்றிப்பார்த்தல். ஆசிரியர்கள், மாணவர்களுடன் சந்திப்பு.
3.காலை மணி 10.00 இரண்டாவதாக மற்றொரு தமிழ்ப்பள்ளியைச் சுற்றிப்பார்த்தல். ஆசிரியர், மாணவர்களுடன் சந்திப்பு.
4.காலை மணி 11.00 – தமிழ்நெறிக் கழகத் தோற்றுநர் பாவலர் அ.பு.திருமாலனார் அவர்களின் நினைவு இல்லத்தில் அஞ்சலி செலுத்துதல். (பாவலரைப் பற்றி தம்முடைய ‘அயலகத் தமிழறிஞர்கள்’ எனும் நூலில் முனைவர் ஐயா எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது)
5.பிற்பகல் மணி 12.30 – தமிழ் அன்பர்களுடன் மதிய விருந்தோம்பல்
6.பிற்பகல் மணி 1.30 – பாரிட் புந்தார், தமிழியல் நடுவத்தில் “தமிழ் வளர்ச்சிப் பணியில் அயலகத் தமிழர்கள்” எனும் தலைப்பில் சொற்பொழிவு. தமிழியல் ஆய்வுக் களம், தமிழ் வாழ்வியல் இயக்கம் ஆகிய அமைப்புகள் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளன. தமிழ்த்திரு.இர.திருச்செல்வம் அவர்கள் இந்நிகழ்ச்சிக்குத் தலைமயேற்பார்.
7.இரவு மணி 7.30 – கிள்ளானில் நாட்டுப்புற இலக்கியம் தொடர்பாக உரையாற்றுவார்.
முனைவர் ஐயா அவர்களின் சுற்றுச்செலவு விவரங்களை அறிய கீழே உள்ள சுட்டிகளைச் சொடுக்கவும்.
No comments:
Post a Comment