Saturday, February 07, 2009

மலேசியத் தமிழர்கள் அமைதி மறியல்! சிறிலங்கா - இந்தியாவுக்குக் கண்டனம்!!

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்படும் இனப்படுகொலையைக் கண்டித்தும், அந்த படுகொலைக்குத் துணைபோகும் இந்திய அரசைக் கண்டித்தும் மலேசியத் தலைநகர் கோலாலும்பூரில் 6.2.2009 நாளன்று மாபெரும் கண்டனப் பேரணி நடத்தப்பட்டது.
நண்பகல் மணி 12.30 தொடங்கி மாலை 3.00 மணிவரை நீடித்த இந்த அமைதி மறியலில் ஈராயிரத்திற்கும் மேற்பட்ட மலேசியத் தமிழர்கள் ஒன்றுதிரண்டு கலந்துகொண்டனர். பினாங்கு மாநிலத் துணை முதல்வர் மாண்புமிகு மரு.பி.இராமசாமி அவர்களின் தலைமையில் நடந்த இந்த மாபெரும் கண்டனப் பேரணியில் நடந்தது. நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள் அரசியல், பொது இயக்கத் தலைவர்கள், பொறுப்பாளர்கள், இளைஞர் இயக்கத்தினர் உள்ளிட்ட சிறியோர் முதல் பெரியவர்கள் வரையிலான தமிழர்கள் அணிதிரண்டனர்.

இந்த அமைதிப் பேரணி, கோலாலும்பூரில் அமைந்துள்ள இந்தியத் தூதரகத்தின் முன்னால் நடந்தது. மேலும், ஈழத் தமிழர்களை ஈவு இரக்கமின்றி கொடூரமாகக் கொன்று குவிக்கும் சிறிலங்கா இராணுவத்திற்கு ஆதரவாகச் செயல்படும் இந்திய அரசைக் கண்டித்தும் – இந்தியா தன்னுடைய ஆதரவை நிறுத்தக் கோரியும் – ஈழப்போரை நிறுத்த இந்தியா தகுந்த செயற்பாடுகளை முன்னெடுக்கக் கேட்டும் இந்தியத் தூதர் அசோக் கே.கந்தாவிடம் மனுவும் வழங்கப்பட்டது.



விரிவான செய்தியைப் படிக்க இங்கே சொடுக்கவும்.

  • படங்கள் உதவி:- ம.தமிழ்ச்செல்வன், இரா.பாலமுரளி

3 comments:

பழமைபேசி said...

தகவலுக்கு நன்றிங்க!

Anonymous said...

DEAR OUR BROTHERS AND SISTERS,
THANK YOU,I KNOW WE DON'T NEED TO SAY THANK YOU,BECAUSE YOU ARE OUR BLOODS,STIL WE HAVE TO SAY.... BIG THANK YOU ALL FOR YOUR LOVE AND SUPPORTING.
AMBI

Anonymous said...

Thank you all. Thank you very much.

-- Eela thamilan

Blog Widget by LinkWithin