Tuesday, December 27, 2011

மலேசியாவில் திருக்குறள் நாள் வாழ்த்து அட்டை

திருக்குறள் உலக சட்டத்திற்கு வேர்; மாந்தர் வாழ்வு நெறிக்கு வழிகாட்டி; தமிழர் வாழ்விற்கு அடிப்படை; உலகத் தமிழரை இணைத்துப் பிணைக்ககூடிய உயர்ந்த மறை. உலகிலேயே ஒரு மாண்புமிகு நூல் இஃது ஒன்றே என்ற தொடக்கத்துடன் மலேசியாவில் திருக்குறள் நாள் வாழ்த்து அட்டை வெளிவந்து உள்ளது.

கடந்த 20.01.1996-ல் மலேசியாவில் நடந்த உலகத் தமிழ் மறை திருக்குறள் வாழ்வியல் மாநாட்டில் ‘சனவரி முதல் நாளை திருக்குறள் நாள்’ என உலகிற்குப் பரிந்துரை செய்யப்பட்டது. இந்தப் பரிந்துரைக்கு மிக முகாமையாகப் பங்காற்றியவர் மலேசியாவின் மூதறிஞர். தமிழ்ப்புணல் மு. மணிவெள்ளையனார் அவர்களே.

திருக்குறளால் இளைய தலைமுறையினர் அடையும் பயன், திருக்குறளின் நன்மை, அதன் முகாமையான குறிக்கோள் என்ன என்பது போன்ற உலக பொது மறை திருக்குறளின் நோக்கம் இந்த வாழ்த்து அட்டையில் நன்கு விளக்கப்பட்டுள்ளது.

இந்த அற்புதமான திருக்குறள் வாழ்த்து அட்டையின் மூலமாக பலருக்கு நன்மை கிடைத்து பயனடைவர் என்பது திண்ணம் என்கிறார் ‘உலக பொது மறை திருக்குறள்’ வாழ்த்து அட்டையை தயாரித்து வெளியீடு செய்த இரவாங்கைச் சேர்ந்த தமிழ் நெஞ்சர் அரசேந்திரன்.

தமிழ்நெஞ்சர் அரசேந்திரன்
மின்னல் பண்பலை வானொலியில் காலையில் திருக்குறள் விளக்க உரை வழங்கும் மலேசியத் தமிழ் நெறிக் கழகத் தலைவர் இரா. திருமாவளன் இந்த வாழ்த்து அட்டை சிறப்பாக அமைவதற்கு நல்ல ஆலோசனை வழங்கியதாக கூறுகிறார் அரசேந்திரன்.
ஒவ்வொருவரும் சில திருக்குறள் வாழ்த்து அட்டைகளை வாங்கி நண்பர்கள், உறவினர்களுக்கு அனுப்பி வைத்தால் திருக்குறளின் காலத்தால் அழியாத பல சிறப்புகள் இன்னும் பலருக்குத் தெரிய வாய்ப்புண்டு. 

ஒரு வாழ்த்து அட்டையின் விலை RM1.50  மட்டுமே.

தொடர்புக்கு :- 
திருமதி மல்லிகா 016-6129554,
இரா. திருமாவளவன் 016-3262479,
அரசேந்திரன் 019-3243253.
நன்றி:- மலேசியாஇன்று

1 comment:

pathma said...

nallam muyadchi. valga valamudan.

Blog Widget by LinkWithin