Monday, December 21, 2009

2010க்கான பட்டப் படிப்புப் பதிவு நடக்கிறது


2010 ஆம் ஆண்டில் மலேசியப் பொதுப் பல்கலைக்கழகங்களில் (IPTA) பயில்வதற்கு இப்போது விண்ணப்பம் செய்யலாம். இணையம் வழியாக நேர்வலை விண்ணப்பம் (Pendaftaran Online) செய்யும் சேவை தற்போது தொடங்கப்பட்டு இருக்கிறது. எனவே, 2009இல் எசுபிஎம்(SPM) தேர்வு எழுதியுள்ள மாணவர்கள் காலம் தாழ்த்தாமல் இப்போதே விண்ணப்பம் செய்யலாம்.

இதனைப் பற்றிய மேல் விவரங்களைத் தொடர்ந்து தருகின்றேன். நமது மாணவர்களுக்கு இது பயனாக இருக்குமென நம்புகிறேன்.

எசுபிஎம் அல்லது அதற்கு ஈடான கல்வித் தகுதியைக் கொண்டிருக்கும் மாணவர்கள் 2010ஆம் ஆண்டு தொடங்கி உள்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் சேர்ந்து படிப்பதற்கு விண்ணப்பிக்கலாம்.

இந்தப் பதிவு நடவடிக்கை இரண்டு கட்டங்களாக (Fasa) நடைபெறும். மாணவர்கள் இவ்விரு கட்டங்களையும் முறையாகப் பின்பற்ற வேண்டும்.

முதலாவது கட்டம் (Fasa I):- விண்ணப்பப் பதிவு

1.2009, 2008, 2007 ஆகிய ஆண்டுகளில் எசுபிஎம் எழுதிய மாணவர்கள் தங்களின் விண்ணப்பங்களை முதலில் பதிவு செய்துகொள்ள வேண்டும். இதனைச் செய்வதற்கு தேசியச் சேமிப்புப் பொருளகத்திலிருந்து (Bank Simpanan Nasional) கடவுச்சொல் (No.Pin) வாங்க வேண்டியதில்லை.

2.பதிவு செய்ய, மாணவர்கள்
http://upu.mohe.gov.my என்னும் உயர்க்கல்வி அமைச்சின் அகப்பக்கத்திற்குச் செல்ல வேண்டும்.

3.மாணவர்கள் தங்களுடைய அடையாள அட்டை எண், கடவுச்சொல் (Kata Laluan) ஆகியவற்றைப் பயன்படுத்தி பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பத்தின் வகையைச் (Kategori Permohonan) சரியாகக் குறிப்பிடவும்.

4.அதில் கேட்கப்படும் விவரங்களைத் தவறு இல்லாமல் நிறைவு செய்ய வேண்டும்.

5.மாணவர்களின் குடும்ப விவரங்கள், கல்வி விவரங்கள், புறப்பாட நடவடிக்கை விவரங்கள் ஆகியவற்றைச் சரியாகக் குறிப்பிட வேண்டும்.

6.இந்த முதற்கட்டப் பதிவைச் செய்வதற்கான இறுதி நாள் 30-12-2009

இரண்டாம் கட்டம் (Fasa II):- விண்ணப்ப உறுதி

1.இந்தப் பதிவு 2-2-2010இல் திறக்கப்படும். இதற்கும் நேர்வலை (Online) வழியாக பதிவு செய்ய வேண்டும். இந்தப் பதிவு செய்வதற்குத் தேசியச் சேமிப்புப் பொருளகத்திலிருந்து (Bank Simpanan Nasional) கடவுச்சொல் (No.Pin) வாங்க வேண்டும். விலை RM10.60.

2.ஏற்கனவே, முதற்கட்டப் பதிவில் பயன்படுத்திய அதே அ.அட்டை எண், கடவுச்சொல் ஆகியவற்றைப் பயன்படுத்தி முறையாகப் பதிவு செய்ய வேண்டும்.

3.கேட்கப்படும் விவரங்களைச் சரியாக நிறைவு செய்து சரிபார்க்கவும். நிறைவு செய்த படிவத்தை அனுப்பிய பிறகு, தவறுகள் இருப்பின் 3 முறை மட்டுமே பிழைத்திருத்தம் செய்ய முடியும்.

4.இதற்குரிய இறுதி நாள்:- B, C, D ஆகிய பிரிவுகளுக்கு 30-3-2010. பிரிவு A மட்டும் எசு.பி.எம் முடிவு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 10 நாட்கள்.

மாணவர்கள் கவனிக்க வேண்டிய விவரங்கள்:-

1.கொடுக்கப்பட்டுள்ள விதிகளைக் கவனமுடன் படித்துப் பார்க்கவும்.

2.உங்கள் தகுதிக்கு ஏற்ற படிப்புக்கும் பல்கலைக்கழகத்திற்கும் விண்ணப்பிக்கவும்.

3.தவறான படிப்புக்கும் பல்கலைக்கழகத்தித்கும் விண்ணப்பித்து விடாமல் பார்த்துக்கொள்ளவும்.

4.முதற்கட்டப் பதிவு, பொருளகக் கடவுச்சொல் வாங்குதல், இரண்டாம் கட்டப் பதிவு ஆகியவற்றைச் செய்வதற்குக் கடைசி நேரம் வரை காத்திராமல் உடனுக்குடன் செயல்படவும்.

5.இதில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் உடனே உயர்க்கல்வி அமைச்சுக்குத் தொடர்பு கொள்ளவும். தொலைப்பேசி:-03-88835802 அகப்பக்கம்:- http://upu.mohe.gov.my/

1 comment:

subra said...

மிகவும் பயனான தகவல் அய்யா,எனக்கு ,நன்றி
வாழ்த்துக்கள் .நா மட்றவர்களுக்கும் முடிந்த அளவு
தெரிவு படுத்தி விடுகிறேன்

Blog Widget by LinkWithin