Sunday, May 15, 2005

மெல்லத் தமிழ் இனி வாழும்

  • மெல்லத் தமிழ் இனி வாழும்...!


    கடந்த 17.9.2004ஆம் நாள‎ன்‎று இந்திய அரசாங்கம் தமிழைச் செம்மொழியாக அறிவிப்புச்செய்த பிறகு, தமிழுக்கு ஆக்கமான பல நற்செய்திகள் தே‎ன்போல நம் காதுகளில் வந்து பாய்ந்த வண்ணமாக உள்ளன. அவற்றுள் சில....

     தமிழை ‏இந்தியாவின் ஆட்சிமொழியாக அறிவிக்கக் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
     தமிழ்த்திரைப்படங்களுக்குத் தமிழில்தா‎ன் பெயர்வைக்க வேண்டும் எனும் போராட்டம் வெற்றிபெற்று வருகிறது.
     தமிழ்நாட்டில் சாலை நெடுகிலும் உள்ள மைல்கற்களில் ஊர்ப்பெயர்கள் தமிழில் எழுதப்படுகி‎ன்றன.
     தமிழ்நாட்டில் உள்ள கடை விளம்பரப் பலகைகளில் தமிழுக்கு முதலிடம் தரவேண்டும் எ‎னும் இயக்கம் நடைபெறுகிறது.
     தமிழ் நாட்டில் உள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளிகளிலும் தமிழ்ப்பாடம் கட்டாயப் பாடமாக்கப்பட்டுள்ளது.
     தமிழி‎ன் தலமை நூலான திருக்குறள் இந்திய நாட்டி‎ன் தேசிய நூலாக அறிவிக்கப்பட வேண்டுமென தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறவேற்றப்பட்டு, மத்திய அரச¢டம் வழங்கப்பட்டுள்ளது.
     இந்தியாவி‎ன் நடுவண் அரசு சார்பில் தமிழில் கணினி மெ‎ன்பொருள் கருவி வெளியிடப்பட்டுள்ளது. இந்திய மொழிகளிலேயே தமிழ¢ல்தா‎ன் இப்படியொரு மென்பொருள் முதலாவதாக வெளியிடப்படுகிறது.

    தமிழுக்கு நல்ல எதிர்காலம் மலர்ந்துகொண்டிருக்கிறது எ‎ன்ற நம்பிக்கை இச்செய்திகள் மூலம் நம் உள்ளத்தில் பிறக்கிறது; மனம் மகிழ்கிறது!

1 comment:

Anonymous said...

!வாழ்க தமிழ்!வளர்க தமிழினம்!

அன்புடன்,
ஆதிரையன்.

Blog Widget by LinkWithin