Saturday, March 30, 2013

செர்சோனீசு முன்னாள் மாணவர் சங்க ஆண்டுப் பொதுக்கூட்டம்

பேரா மாநிலத்தில் உள்ள கோலக் குராவ், செர்சோனீசு தோட்டத் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கத்தின் முதலாவது ஆண்டுப் பொதுக்கூட்டம் பின்வரும் வகையில் நடைபெற உள்ளது.

நாள் : 30-03-2013 (காரிக்கிழமை)
நேரம் : மாலை மணி 5:00
இடம் : செர்சோனீசு தமிழ்ப்பள்ளிக்  கூட்ட அறை

இந்த ஆண்டுக் கூட்டத்தில் முன்னாள் மாணவர் சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டுமென முன்னாள் மாணவர் சங்கத்தின் தலைவர் என்னும் முறையில் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

கடந்த 2011இல், மூடப்படக்கூடிய நெருக்கடி நிலைக்கு ஆளாகி பின்னர் பள்ளி நிருவாகம், பெ.ஆ.சங்கம், பள்ளி மேலாளர் குழு, முன்னாள் மாணவர் சங்கம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியாலும் சீரிய நடவடிக்கையாலும் மூடப்படும் ஆபாயத்திலிருந்து பள்ளி காப்பாற்றப்பட்டது. பின்னர் 2012 மே திங்கள் 5ஆம் நாள் முன்னாள் மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் 'மீண்டும் பள்ளிக்குப் போகலாம்' எனும் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடந்தது. அந்த நிகழ்ச்சியின் மூலம் திரட்டப்பட்ட நிதி வளத்தைக் கொண்டு பல்வேறு வளர்ச்சிட் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது செர்சோனீசு தோட்டத் தமிழ்ப்பள்ளி வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகின்றது. பள்ளியை மீட்கவும் காக்கவும் முழுமூச்சாகச் செயல்பட்ட முன்னாள் மாணவர் சங்கம் நடத்தும் முதலாவது ஆண்டுப் பொதுக்கூட்டம் இதுவாகும்.

இந்தப் பொதுக்கூட்டத்தில் மேலும் ஒரு சிறப்பு நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. பள்ளி மாணவர்களின் போக்குவரவுக்கு உதவியாக, மு.மா.சங்கம் 'பள்ளிப் பேருந்து' ஒன்றனை வாங்கியுள்ளது. இப்பள்ளிப் பேருந்தின் வெள்ளோட்ட நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறவுள்ளது.

ஆகவே, செர்சோனீசு தோட்டத் தமிழ்ப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் அனைவரும் இதனையே அழைப்பாக ஏற்றுக்கொண்டு ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் கலந்து சிறப்பிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

மேல் விவரங்களுக்கும் தொடர்புக்கும்: தலைவர் சுப.நற்குணன் 012-4643401 / துணைத்தலைவர் இராம.பாலமுரளி 017-5573110.

@சுப.நற்குணன்

No comments:

Blog Widget by LinkWithin