Wednesday, April 15, 2009

பினாங்கு பட்டிமன்றத்தில் நமது வலைப்பதிவர்கள்

பினாங்கு மாநிலத் தமிழர் திருநாள் 2009 ஏற்பாட்டில் பட்டிமன்றம் நடைபெறவுள்ளது. "மலேசியத் தமிழர் மேம்பாட்டில் நிறைவடைகிறோம்! நிறைவடையவில்லை!" இதுதான் பட்டிமன்றத் தலைப்பு.


இந்தப் பட்டிமன்றம் பின்வரும் வகையில் நடைபெறும்:-

நாள்:- 19-04-2009 (ஞாயிறு)
நேரம்:- இரவு மணி 7.30
இடம்:- பினாங்கு, கொம்தார் மாநாட்டு அறை, 5ஆவது மாடி, அரங்கம் 'எப்'
(Auditorium 'F', Level 5, KOMTAR) Penang

வடமலேசியாவில் பட்டிமன்றம் என்றாலே பலருக்கும் நினைவுக்கு வருகின்றவர் நற்றமிழ் நெஞ்சர் தமிழ்த்திரு க.முருகையனார். அன்னார் நடுவராகப் பணியாற்றும் இந்தப் பட்டிமன்றத்தில் நமது வலைப்பதிவர்கள் சுப.நற்குணன், கோவி.மதிவரன், கி.விக்கினேசு ஆகிய மூவர் பேசவிருக்கின்றனர்.

"நிறைவடைகிறோம்" என்ற அணியில் பேசவிருப்போர்:-
சுப.நற்குணன் (திருத்தமிழ்), திருமதி பிரேமா அமிர்தலிங்கம், கி.விக்கினேசு (தமிழோடு நேசம்)

"நிறைவடையவில்லை" என்று பேசவுள்ள அணியின் உறுப்பினர்கள்:-
கோவி.மதிவரன் (தமிழ் ஆலயம்), திருமதி சோதி மணியம், பா.சோ.இராசேந்திரன்

பினாங்கு வணிகர் டத்தோ ஆர்.அருணாசலம் JP முன்னிலை வகிக்க, தமிழ் நெஞ்சர் மாருதி மகாலிங்கம் தலைமையில் நடைபெறவுள்ள இந்தப் பட்டிமன்றத்தைக் கண்டு பயன்பெறவும் மனம் மகிழவும் தமிழ் மக்கள் அனைவரையும் வருக வருகவென ஏற்பாட்டாளர்கள் அழைகின்றனர். நுழைவு இலவயம்.

2 comments:

Suresh said...

நல்ல பதிவு

i liked ur blog and have become ur follower.

You can also visit my blog and if you like it u can be my follower :-)

Hope u like it

Anonymous said...

நண்பரே உங்கள் தளத்தை உணர்வுகளில் இணைத்திருக்கிறோம்.

Blog Widget by LinkWithin