Friday, April 03, 2009

தமிழ் வலைப்பதிவர் பயிற்சி பட்டறை

கோலாலும்பூர், மலாயாப் பல்கலைக்கழகத்தில்
தமிழ் வலைப்பதிவர் பயிற்சி பட்டறை

மலேசிய வலைப்பதிவு உலகம் நாளுக்கு நாள் விரிந்துகொண்டே போகிறது. மலேசியத் தமிழரிடையே குறிப்பாக இளையோரிடத்தில் வலைப்பதிவு மீதான விழிப்புணர்வு பெருகி வருகின்றது. இந்த வளர்ச்சியைக் கருத்திகொண்டு, ஆங்காங்கே வலைப்பதிவர் சந்திப்புகள் ஏற்பாடாகி நடந்து வருகின்றன.

அந்தவகையில், இதுவரை இரண்டு சந்திப்புகள் நடைபெற்றுள்ளன. இதன் தொடர்பில், தற்போது மூன்றாவது நிகழ்ச்சியாக 'தமிழ் வலைப்பதிவர் பயிற்சி பட்டறை' நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ் இளைஞர் மணிமன்றம் - பெட்டாலிங் செயா கிளை, உத்தமம் மலேசியா நிறுவனம், தமிழா மென்பொருள் நிறுவனம் ஆகிய அமைப்புகளின் கூட்டு ஏற்பாட்டிலும் நாட்டின் முன்னணி இணையத் தமிழ்ச்செய்தி ஊடகம் 'மலேசியா இன்று' ஆதரவுடனும் இந்த அருமை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

அதன் விவரங்கள் பின்வருமாறு:-

நாள்:-18 - 04 - 2009 (சனிக்கிழமை)
நேரம்:-1.30 பிற்பகல் 5.30 மாலை
இடம்:-கணினி அறிவியல் & தகவல் தொழிநுட்ப புலம் மலாயாப் பல்கலைக்கழகம் (Faculty of Computer Science & Information Technology, University Malaya)

கட்டணம்:- ம.ரி 35 மட்டும் (சிற்றுண்டி, கோப்பு, தமிழா மென்பொருள் ஆகியன வழங்கப்படும்)

மேல்விளக்கம் பெறுவதற்கும் பதிவு செய்வதற்கும் தொடர்புகொள்ள வேண்டிய அன்பர்கள்:-

குமரன்:- 0133615575, விக்கினேசு:- 0125578257, பவனேசு:- 0149314067

மலேசியத் தமிழ் வலைப்பதிவுகளைத் தமிழர்களின் முதல்தேர்வு ஊடகமாக உருவாக்கும் முயற்சிகளை முன்னெடுப்பதற்கு இதுபோன்ற வலைப்பதிவு சந்திப்புகள் மிகவும் பயன்படும் - பயன்படுத்தப்பட வேண்டும்.

ஆகவே, மலேசியத் தமிழ் வலைப்பதிவர்கள், வலைப்பதிவு வாசகர்கள், தமிழ் இணைய ஆர்வலர்கள், தமிழ்க் கணினி பயனாளர்கள், வலைப்பதிவு தொடங்க விரும்புபவர்கள் என அனைவரும் இந்த நிகழ்ச்சியில் தவறாமல் கலந்து பயன்பெற அன்போடு அழைக்கிறோம்.

இப்படிக்கு,
ஏற்பாட்டுக் குழுவினர்.

பி.கு:- சந்திப்பு 1, சந்திப்பு 2 செய்திகள்

3 comments:

Esywara said...

i rily wanna come for these kind of workshop....
but i am studying in Sabah now..
way too far...
would there be any kind of workshops like this after 13/5...

முனைவர் மு.இளங்கோவன் said...

மலேசிய வலைப்பதிவுப் பயிலரங்கம் சிறப்புடன் நடைபெற நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.

அன்புள்ள

மு.இளங்கோவன்
புதுச்சேரி,இந்தியா

கிருஷ்ணா said...

பயிற்சிப் பட்டறை மிகச் சிறப்பாக நடந்தேறியது. அதிகமான ஆர்வலர்கள் கலந்து சிறப்பித்தனர்! வந்திருந்த அனைவரும் ஆளுக்கொரு வலைப்பதிவை உருவாக்கினர்..

Blog Widget by LinkWithin