Thursday, March 19, 2009

முதுபெரும் பாவலர் சா.சி.குறிஞ்சிக்குமரனார் (ஈப்போ)

மலேசியாவில், பேரா மாநிலத் தலைநகராம் ஈப்போ மாநகரில் தனித்தமிழ் குன்றமாய் விளங்கியவர் முதுபெரும் பாவலர் ஐயா.சா.சி.குறிஞ்சிக்குமரனார். அன்னாரைப் பற்றி தமிழக முனைவர் மு.இளங்கோவனார் எழுதிய கட்டுரை இது. எங்கள் மலேசியத் தமிழ் அறிஞரை 'தமிழ் ஓசை' நாளிகை வழியாகத் தமிழகத்திற்கும் தமது வலைப்பதிவின் வழியாகத் தமிழ்க்கூறு நல்லுலகிற்கும் அறிமுகம் செய்துள்ள முனைவர் மு.இளங்கோவனார் அவர்களுக்குக் கரம்குவிந்த நன்றிகளை உரித்தாக்குகின்றேன்.

***********************************


தமிழகத்தில் பலர் மொழிஞாயிறு பாவாணர்தம் தமிழ்ப்பணி அறியாமல் இருக்கும் சூழலில் பாவாணருக்கு மலேசியாவில் மன்றம் வைத்துத் தமிழ்ப்பணி புரிந்தவர் குறிஞ்சிக்குமரனார் ஆவார்.

மலசியாவில் திராவிடர் கழகம், தமிழ்நெறிக் கழகம் உள்ளிட்ட தமிழ்நெறி சார்ந்த அமைப்புகள் வளர்ச்சி பெறப் பாடுபட்டவர்களுள் நம் குறிஞ்சிக்குமரனார் குறிப்பிடத்தக்கவர்; தலையாயவர்.


ஈப்போ பகுதியில் அரசியல் சார்பற்று இனம், மொழி, கலை, பண்பாடு போன்ற துறைகளில் பணியாற்றி தனித்தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபட்டவர் இவர்.

சித்த மருத்துவத்துறையில் வல்லுநராகப் பணிபுரிந்த குறிஞ்சிக்குமரனார் தமிழ் உணர்வு கொண்டு விளங்கியதுடன் மலேசியாவில் தனித்தமிழ் உணர்வுகொண்ட பலர் உருவாகத் தக்க பணிகளைச் செய்தவர்.

பன்னூல் ஆசிரியராக விளங்கியவர்.

பிறமொழி கலவாமல் பேசும், எழுதும் இயல்புடையவர்.

இவர்தம் வாழ்க்கையை இக்கட்டுரை எடுத்துரைக்கிறது. (விரிவாக)

No comments:

Blog Widget by LinkWithin