
அனைத்துலக மொழியறிஞர் பெருமக்கள்
ஆய்ந்தறிந்து ஏற்றுக்கொண்ட அறுபெருஞ் செம்மொழிகளுள்
அத்தனை தகுதிகளும் மொத்தமாய் உடைய ஒரேமொழி தமிழ்!
எனினும், இந்திய நடுவணரசு,
தமிழறிஞர்கள் 100 ஆண்டு போராடிய பின்னர்,
2004ஆம் ஆண்டுதான் தமிழைச் செம்மொழியாக
அதிகாரஞ் சார்ந்து அறிவித்தது!
அந்த வரலாற்றுச் சிறப்பின் பதிவாகவும்,
செந்தமிழின் செம்மைக் கூறுகளைத் தெளிவுற நிறுவியும்,
உலகளாவிய நிலையில் தமிழின் நேற்றைய – இன்றைய – நாளைய
நிலைமைகளைப் பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து விளக்கியும்
துறைசார்ந்த அறிஞர்கள் தீட்டிய எழுத்தூவியங்களின்
தொகுப்பாக வெளிவந்துள்ளது செம்மொழிச் சிறப்புமலர்..!
செம்மொழியாம் தமிழுக்கென இப்படியொரு சிறப்புமலர்
இப்போதுதான் உலகிலேயே முதலாவதாக வெளிவருகிறது!
2.செம்மொழி : நேற்று – இன்று – நாளை
3.செம்மொழி : சிறப்பியல்புகள்
4.செம்மொழி : அக்கரை நாடுகளில்
5.செம்மொழி : தமிழ்க்கல்வி, கலை நிறுவனங்கள்
என்ற ஐந்து பிரிவுகளில்...
தமிழகம், மலேசியா, சிங்கை, இலங்கை சார்ந்த அறிஞர்களும்,
தமிழாய்ந்த மேனாட்டு அறிஞர்களும் வழங்கிய
40 அரிய ஆய்வுக் கட்டுரைகளையும்,
பழந்தமிழ்ப் புலவோர் முதல் பாரதிதாசனார் வரை
நந்தமிழ்ப் புலவர்களின் நறுந்தமிழ்க் கவிதை வரிகளை விளக்கும்
அரிய காட்சிகளாக அழகிய 20 வண்ண ஓவியங்களையும்,
இந்திய நடுவணரசின் செம்மொழி அதிகார ஆவணங்களையும்
இன்ன பிற அருமைசால் செய்திகளையும் தாங்கி,
320 பக்கங்களில் இதழ்விரிக்கும் இந்த மலர்,
உலக நிலையில் செம்மொழி பற்றி வெளிவந்துள்ள
முதல் முழுக் களஞ்சியமாகும்!
இந்த செம்மொழிச் சிறப்புமலரின் வெளியீட்டு விழா
28-05-2008ஆம் நாள், புதன்கிழமை, மாலை மணி 6.00க்கு
கோலாலம்பூர், ம.இ.கா தலைமையகம், நேதாஜி மண்டபத்தில்
உயிர்த் தமிழை உயர்த்திப் பிடிக்க வெளியீடு காண்கிறது!!
உலகத் தமிழரை ஊக்கப்படுத்த வெளியீடு காண்கிறது!!