Showing posts with label தமிழ்க் காணொளி. Show all posts
Showing posts with label தமிழ்க் காணொளி. Show all posts

Saturday, June 16, 2012

தமிழின் தனித்தன்மை + தெய்வத்தன்மை

ஓர் இனம் அழியாமல் ‏இருக்க அந்த இனத்தி‎ன் மொழி உயிரோடும் - உயிர்ப்போடும் இருத்தல் வேண்டும். அந்த வகையில், பல நூற்றாண்டுகளாகப் பல்வேறு வகையான தடைகளைக் கடந்து தமிழ் இன்றளவும் உயிரோடு இருப்பதே நமக்குப் பெருமைதரக்கூடிய வரலாறாகும். காலத்தால் தொ‎ன்மையும் தெய்வத்தன்மையும் பெற்று ‏இருப்பதால்தான், நாடோ - அரசோ - ஆட்சியாளரோ இல்லாத நிலையிலும் தமிழும் தமிழினமும் இ‎ன்றும் நிலைத்திருக்கி‎ன்றன.

தமிழின் தனித்தன்மைக்கும் அதனுடைய தொன்மைக்கும் மட்டுமல்லாது தமிழ்மொழியின் தெய்வத்தன்மைக்கும் இந்தப் படக்காட்சி 
ஒரு நற்சான்று.  


தமிழில் பார்க்க - படிக்க.



ஆங்கிலத்தில் பார்க்க - படிக்க.



கற்காலம் தொடங்கி இன்றைய கணினி, இணைய, கைபேசி, கையடக்கக் கருவிக் காலம் வரையில்  உலகில் தமிழ்மொழி அடைந்துள்ள வெற்றிகளை வைத்துப் பார்க்குமிடத்து, உலகம் ஒருநாள் தமிழை நிச்சயமாகத் திரும்பிப்பார்க்கும் என நம்பலாம். தமிழ்மொழியில் புதைந்துள்ள எண்ணிலடங்காச் சிறப்புகளும் உண்மைகளும் மெய்ம்மங்களும் வெளிப்பட்டுத் தோன்றும் காலம் விரைவிலேயே மலரும் என்ற நம்பிக்கை நம்மிடையே பிறக்கிறது. உலக வரலாற்றின் ஒரு சிறுமுனையளவு பகுதி ஆனால், முகாமையான பகுதியைத் தம்முள் கொண்டுள்ள தமிழ்மொழியானது வெல்லும் காலம் வெகுதொலைவில் இல்லை என்ற தன்னம்பிக்கை துளிர்க்கிறது.

@சுப.நற்குணன், திருத்தமிழ்


Monday, August 31, 2009

இந்நாள் சுதந்திரச் சிந்தனைக்காக.. அறிஞர் அண்ணா உரை விருந்தாக..

நமது நேசத்திற்குரிய நன்நாடாம் மலேசியத் திருநாட்டின் 52ஆம் சுதந்திர நாள் விழாவைக் கொண்டாடி மகிழும் மலேசியர்கள் அனைவருக்கும் திருத்தமிழ் வழி எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.




இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நன்நாளில் நமது அனைவருடைய சிந்தனைக்காக ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க உரையினை இங்கே பதிவிடுகின்றேன்.

1965இல் பேரறிஞர் அண்ணா அவர்கள் இங்கு வந்தார். அப்பொழுது, மலேசியத் தமிழ் மக்களுக்காக சொன்ன சிந்தனைகளை இன்றைய தலைமுறைகளும் அறிந்துகொள்வதற்கு இது உதவும். அதோடு, பேரறிஞர் அண்ணாவின் கூற்று இன்றும் நமக்குத் தேவையான சிந்தனை ஊற்றாகவும் இருக்கிறது.

இந்த அறிமுகத்தோடு, இன்றைய விடுதலைக் கொண்டாட்ட நாளில், பேரறிஞர் அண்ணாவின் அன்றைய உரையைக் கேட்போம்; உளமாற சிந்திப்போம். உண்மை மலேசியராய் ஒன்றுபட்டு வாழ்வோம்.



பேரறிஞர் அண்ணா மலேசியாவுக்கு வந்தபோது, அவரை வரவேற்க மலேசியத் தமிழர்கள் கடலலையென திரண்டனர். மெர்டேக்கா அரங்கில் கூடியிருந்த 15,000க்கும் மேற்பட்ட மலேசியத் தமிழர்கள் முன்னிலையில் "உலகமெங்கிலும் தமிழர்கள் இருக்கிறார்கள்; ஆனால் மலேசியாவில்தான் வாழ்கிறார்கள்" என்று அண்ணா பேசிய பேச்சு வரலாற்றுச் சிறப்புமிக்கது.

அண்ணா மலேசியாவுக்கு வந்ததன் நினைவாகப் பேரா மாநிலத்தில் பாரி நதி (Sungai Pari) எனுமிடத்தில் ஒரு பாலத்திற்கு அவருடைய திருப்பெயர் (*Jambatan C.N.Annadurai) சூட்டப்பட்டுள்ளது குறிக்கத்தக்க வரலாறு.
*Jambatan (மலாய்மொழி) = பாலம்

Thursday, August 06, 2009

தமிழா! நீ பேசுவது தமிழா?




தமிழா! நீ பேசுவது தமிழா?
தமிழா! நீ பேசுவது தமிழா?

அன்னையைத் தமிழ்வாயால் 'மம்மி' என்றழைத்தாய்...
அழகுக் குழந்தையை 'பேபி' என்றழைத்தாய்...
என்னடா, தந்தையை 'டாடி' என்றழைத்தாய்...
இன்னுயிர்த் தமிழைக் கொன்று தொலைத்தாய்...

தமிழா! நீபேசுவது தமிழா?

உறவை 'லவ்' என்றாய் உதவாத சேர்க்கை...
'ஒய்ப்' என்றாய் மனைவியை பார் உன்றன் போக்கை...
இரவை 'நைட்' என்றாய் விடியாதுன் வாழ்க்கை
இனிப்பை 'ஸ்வீட்' என்றாய் அறுத்தெறி நாக்கை...

தமிழா!நீ பேசுவது தமிழா?

வண்டிக்காரன் கேட்டான் 'லெப்ட்டா? ரைட்டா?
'வழக்கறிஞன் கேட்டான் என்ன தம்பி 'பைட்டா?
'துண்டுக்காரன் கேட்டான் கூட்டம் 'லேட்டா?'
தொலையாதா தமிழ் இப்படிக் கேட்டா?

தமிழா!நீ பேசுவது தமிழா?

கொண்ட நண்பனை 'பிரண்டு' என்பதா?
கோலத் தமிழ்மொழியை ஆங்கிலம் தின்பதா?
கண்டவனை எல்லாம் 'சார்' என்று சொல்வதா?
கண்முன் உன் தாய்மொழி சாவது நல்லதா?

தமிழா!நீ பேசுவது தமிழா?

பாட்டன் கையில 'வாக்கிங் ஸ்டிக்கா'
பாட்டியின் உதட்டிலே 'லிப்ஸ்டிக்கா?'
வீட்டில பெண்ணின் தலையில் 'ரிப்பனா?'
வெள்ளைக்காரன்தான் நமக்கு அப்பனா?

தமிழா! நீ பேசுவது தமிழா!

Blog Widget by LinkWithin