Showing posts with label தமிழர் சிந்தனைக்கு. Show all posts
Showing posts with label தமிழர் சிந்தனைக்கு. Show all posts

Tuesday, October 11, 2016

மலேசியாவில் வேண்டும் தமிழ் மரபுத் திங்கள்


மலேசியாவில் தமிழ்மொழி உணர்வையும் ஈடுபாட்டையும் அதிகப்படுத்தும் நோக்கத்தில் 'தமிழ் மரபுத் திங்கள்' கொண்டாட்டத்தை அறிமுகப்படுத்த  வேண்டும் எனச் சமூக நட்பு ஊடகங்களில் செய்திகள் மிகப் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன. தலைவர்களும் தமிழ் சார்ந்த பொது இயக்கங்களும் இதனை அரசாங்கத்திடம் முன்மொழிய வேண்டும் என நட்பூடகங்களில் வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகின்றது.

கனடா நாட்டில் அடுத்த ஆண்டு தொடங்கி சனவரி மாதம் 'தமிழ் மரபுத் திங்கள்' கொண்டாடப்பட அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


கனடாவின் நாடாளுமன்றத்தில் அதன் உறுப்பினர் திரு.கேரி ஆனந்தசங்கரி இந்தத் தீர்மானம் குறித்து அறிவித்தார். உலகம் முழுக்க வாழும் தமிழர்களை இந்த அறிவிப்பு மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது.

கனடாவிற்கு முன்பாகவே  கடந்த 10 ஆண்டுகளாகச் சிங்கப்பூரில் ஒவ்வோர் ஆண்டும் ஏப்பிரல் மாதம் தமிழ்மொழி மாதமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த மாதத்தில் தமிழ் சார்ந்த நிகழ்ச்சிகள், கருத்தரங்கம், கலந்துரையாடல், இசை நிகழ்ச்சி, மாநாடு போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதன்வழி தமிழ்மொழி உணர்வையும் எழுச்சியையும் சிங்கப்பூரில் ஏற்படுத்த முடிகிறது.

சிங்கப்பூரில் மோகன் ராசு
இதேபோல் மலேசியாவிலும் தமிழ் மரபுத் திங்கள் ஒரு மாத காலத்திற்குக் கொண்டாடப்பட வேண்டும் என்பது மலேசியத் தமிழர்களின் ஆவலாக உருவெடுத்துள்ளது.

இதனை அரசாங்கமே முன்னின்று நடத்துவதற்குரிய வாய்ப்புகள் உண்டா என ஆராய்ந்து செயல்படுத்த முயற்சிகள் எடுக்கலாம். இல்லையேல், தமிழ் சார்ந்த பொது இயக்கங்களும் அமைப்புகளும் பொதுக்குழு ஒன்றனை அமைத்து தன்னார்வ அடிப்படையில் செயல்படக்கூடிய சாத்தியக் கூறுகளை ஆராயலாம்.

இதுபற்றி முகநூலில் பகிரப்பட்ட சில பகிர்வுகளை இங்கே தருகின்றேன்..

மன்னர் மன்னன் - மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர்:-
முரசு மென்பொருள் நிறுவனர்; கணிமை வல்லுநர் முத்து நெடுமாறன்
மலேசியத் தமிழ் அறவாரிய உறுப்பினர், ஆசிரியர் சரவணன்
சிங்கப்பூரைச் சேர்ந்த நித்திஷ்
புதுக்கவிஞர், ஆசிரியர் ந.பச்சைபாலன், ஆசிரியர் இரமணி உள்பட முகநூல் அன்பர்கள்
மலேசியாவில் 200 ஆண்டுத் தமிழ்க்கல்விக் கொண்டாட்டம் நடைபெறும் இந்தத் தருணத்தில் அதன் நினைவாக இனி வரும் ஆண்டுகளில் தமிழ் மரபுத் திங்களைக் கொண்டாடலாம். அதற்குரிய முன்னெடுப்புகளை நம் தலைவர்களும் தமிழ் சார்ந்த பொது இயக்கங்களும் ஆவன செய்யலாம். மலேசியத் திருநாட்டில் தமிழைத் தொடர்ந்து நிலைபெபெறச் செய்யவும் இளையோர் மனங்களில் தமிழை வேறூன்றச் செய்யவும் இது ஏதுவாக அமையும். சிந்திப்போமே.!

@சுப.நற்குணன்

Thursday, November 07, 2013

ஆங்கில எழுத்துருவில் தமிழ்? எதிர்வினை #1

“ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதி 
தமிழின் தொப்புள் கொடியை அறுக்காதீர்”


ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன? என்னும் சிந்தனையை எழுத்தாளர் செயமோகன் ‘தி இந்து’ பத்திரிகை வழியாக முன்வைத்துள்ளார்.

செயமோகன் என்றாலே விவரம் அறிந்த தமிழர்களுக்கு வயிற்றில் புளியைக் கரைக்கும். அதிலும், இவர் போன்றோர்க்குப் பாரிய விளம்பரம் கொடுத்து தூபம் போட்டுத் துதிபாடும் இந்து பத்திரிகையும் சேர்ந்துகொண்டால்  குமட்டலுக்குச் சொல்லவா வேண்டும்?

செயமோகன் சொன்ன கருத்து தற்காலச் சூழலுக்குப் பொருந்தாது; நடைமுறைக்குச் சாத்தியமாகாது; செயல்பாட்டுக்கு ஒவ்வாதது; செயற்படுத்துவதற்கு நாதியற்றது; தமிழுக்கு முற்றிலும் எதிரானது; வளமிக்க இலக்கண இலக்கியங்களோடு திகழும் உயர்தனிச் செம்மொழியாம் தமிழுக்குத் தேவையற்றது என்று எடுத்த எடுப்பிலேயே மறுசுழற்சிக் கூடைக்குள் வீசி எறிந்துவிட்டு நம் வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கலாம். அந்த அளவுக்கு தகுதரமற்ற ஒரு கருத்தை முன்வைத்திருக்கிறார் செயமோகன்.

இதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்று சிற்றறிவிற்கு எட்டிவை இவைதாம்:

1)    வழக்கமான அவருடைய கவனஈர்ப்பு உத்தி.
2)    அரிப்பு ஏற்பட்டால் தமிழை எடுத்து சொறிந்து கொள்ளும் போக்கு.
3)  தமிழையும் தமிழனையும் அவ்வப்போது சீண்டிப் பார்த்து சுகம் காணும் வக்கிர மனநிலை.

எது எப்படி இருந்தாலும் கருத்துக்குக் கருத்து என்கின்ற விவாத நடைமுறையை மதித்து இந்த எதிர்வினையைப் பதிவு செய்கிறேன்.

ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன? இதற்கு வலுசேர்க்க அவர் முன்வைத்துள்ள வாதங்களில் சில இதோ:

1)இளைய தலைமுறை தமிழில் வாசிப்பதில்லை.
2)தாய்மொழிக் கல்வி இரண்டாம் மொழியாகக் கற்கப்படும் சூழல் உருவாகி வருவதால் தமிழ்மொழியில் கவனம் காட்டுவதில்லை.
3)இரண்டாம் மொழியாகக் கற்றுக்கொண்ட தமிழ் மாணவர் கைகளுக்கும் கருத்துக்கும் பழக்கமற்றதாக ஆகிவிடுகிறது.
4)இணையம், முகநூல் (ஊச்ஞிஞுஞணிணிடு) போன்றவற்றுக்காகக் கணினியில் தட்டச்சு செய்பவர்கள் அனைவருமே ஆங்கில எழுத்துகளிலேயே தட்டச்சு செய்துகொண்டிருக்கிறார்கள்.
5)ஆரம்பப் பள்ளி முதலே ஆங்கில எழுத்துகளில் தமிழைக் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்.
6)மலாய் போன்ற பல மொழிகள் இன்று ஆங்கில எழுத்துருக்களிலேயே எழுதப்படுகின்றன. அந்த மக்கள் ஆங்கிலம் கற்பது எளிதாகிறது .
7)வருங்காலத்துக்காக நம் எழுத்துருக்களை மாற்றிக்கொண்டால் அதில் பிழையில்லை என்றே படுகிறது.

(எழுத்தாளர் செயமோகன் எழுதிய முழுக் கட்டுரையை இங்கு வாசிக்கவும்.)

இந்தக் கட்டுரை வெளிவந்து, மக்கள் அதுகுறித்து சிந்திக்கவும் எதிர்வினையாடவும் தொடங்குவதற்குள், தமிழர்கள் தம்முடைய சிந்தனையை எவ்வாறு எதிர்கொள்வார்கள் என்று செயமோகன் இன்னொரு கட்டுரையில் முந்திக்கொண்டு சொல்லியிருக்கிறார்.

1)இத்தகைய ஒரு கருத்து உடனடியாக ‘தமிழை அழிக்கச் சதி’ என்ற கூச்சல் மூலமே எதிர்கொள்ளப்படும்.
2)‘உலகிலேயே சிறந்த’ மொழியாகிய தமிழை ‘அன்னியசக்திகள்’ அழிக்கமுயல்கிறார்கள் என்ற ஒரு பாவனையிலேயே நம் மொழிவெறியர்கள் காலம்தள்ளுகிறார்கள்.
3)மொழியை ‘எதிரிகளிடமிருந்து’ பாதுகாக்க முடிந்தவரை எல்லா இடத்திலும் கடுமையாக வசைபாடி கொந்தளிப்பார்கள்.
4)தனக்கு ஒவ்வாத அல்லது புரியாத எந்த ஒரு தரப்பைக் கேள்விப்பட்டாலும் உடனடியாகப் பொங்கி கொந்தளித்துக் கொப்பளிக்கும் கூட்டம்.
5)பழங்குடிக் கும்பலுணர்ச்சியை மட்டுமே வெளிப்படுத்தக்கூடியவர்கள்.

(அக்கட்டுரையின் மூலத்தை இங்கு வாசிக்கவும்)

செயமோகன் முன்வைத்திருக்கும் சிந்தனை பல்வேறு எதிர்வினைகளுடன் தற்பொழுது களமாடிக் கொண்டிருக்கிறது. இதுகுறித்து என் எதிர்வினைகளை முன்வைக்கவே இதனை எழுத வேண்டியதாயிற்று.

முதலில், தம் சிந்தனைக்கு வலுசேர்க்க செயமோகன் வைத்துள்ள வாதங்கள் மீதான எதிர்வாதங்களை முன்வைக்கின்றேன்.

1)    இளைய தலைமுறை தமிழில் வாசிப்பதில்லை என்பதை தமிழின் குறைபாடாகக் காட்டியிருப்பது பெரும் புரட்டாகும். கடந்த கால் நூற்றாண்டுக் காலத்தில் தமிழ்வழிக் கல்வியில் ஏற்பட்ட வீழ்ச்சியின் விளைவாக இன்றைய இளைய தலைமுறை தமிழை வாசிக்கவும் தமிழோடு வாழவும் தயங்குகின்றனர். இது தலைமுறை குறைபாடே அன்றி தமிழின் குறைபாடு அல்ல. எந்த ஒரு மொழியும் பயிலப்படாமல் போவதற்கு அந்த மொழி மட்டுமே காரணமாகிவிடாது. அந்த மொழிக்குரிய ஆளுமை, பொருளியல் மதிப்பு, பண்பாட்டுத் தேவை, வாழ்க்கைக்குப் பயன் ஆகியவையே முதன்மைக் காரணிகளாகும். இவற்றை ஒரு மொழியால் தானே உருவாக்கிக்கொள்ள முடியாது. அம்மொழி சார்ந்த அரசோ அல்லது மக்களால் மட்டுமே இவற்றைத் திட்டமிட்டுக் கட்டமைக்க முடியும்.

2)    தாய்மொழிக் கல்விக்கு முதன்மைக் கொடுப்பதோடு, தமிழ்வழிக் கல்விக்குப் பிற மாநிலங்களைப் போல் தமிழ்நாட்டில் கட்டாயச் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். தமிழ்வழிக் கல்வி கற்றவர்களுக்கே அரசுப் பணிகளில் முதலிடம் கொடுக்கப்பட சட்டம் இயற்ற வேண்டும். பிற மாநிலங்களில் குடியேறிய தமிழர்கள் அவ்வந்த மாநில ஆட்சி மொழிகளை மதித்துக் கட்டுப்பட்டு வாழ்வதைப் போல, தமிழ்நாட்டில் குடியேறிய பிறமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டின் ஆட்சிமொழியாகிய தமிழை மதித்து ஏற்று, கற்று, கட்டுப்பட்டு வாழும் நிலை உருவாக்கப்பட வேண்டும்.

3)    இரண்டாம் மொழியாகக் கற்கப்படும் சூழலில் மாணவர்களின் கைகளுக்கும் கருத்துக்கும் பழக்கமற்றதாகிப் போய்விடும் என்பது கல்வி உளத்தியல் அடிப்படையில் சரியான கருத்தன்று. தாய்மொழிக் கல்வியை மிக எளிதாகக் கற்றுக்கொள்ளும் ஆற்றல் குழந்தைகளிடம் இயல்பாகவே அமைந்திருக்கிறது. மேலும், குழந்தைகள் தாய்மொழி வழியாகவே சிந்திப்பதால் சொந்த மொழியில் எழுதுவதும் பேசுவதும் மிக எளிதாக அமையும்.

4)    இணையம், முகநூலில் எழுதுபவர்கள் ஆங்கில எழுத்துருக்களில் தட்டச்சு செய்கின்றனர் எனும் கருத்தை பத்து, இருபது ஆண்டுகளுக்கு முன் சொல்லியிருந்தால் நம்பியிருக்கலாம். இன்றோ கணினியில் தமிழ் உள்ளீடு வந்துவிட்டது. கைபேசி, திறன்பேசி, திறன்கருவிகள், தட்டைக் கணினிகள் என எல்லாக் கையடக்கக் கருவிகளிலும் தமிழ் எந்தச் சிக்கலுமின்றிச் செயல்படுகிறது. தமிழ் 99, அஞ்சல் ஆகிய இரண்டு விசை முறைகளும் யுனிகோடு எழுத்துரு முறையும் தமிழை எழுத மிகவும் உதவியாக இருக்கின்றன. ஆயினும், இணையம், முகநூலில் தமிழில் எழுதாமல் போனதற்கு மாந்தத் தவறுகளே (Human Error) காரணமாக இருக்க முடியுமே தவிர, தமிழ்மொழியைக் குறைபடுத்திக் காட்டுவது மிக நுட்பமான திருகுதாளமாகும்.

5)    ஆரம்பப் பள்ளிகளில் ஆங்கில எழுத்துகளைக் கற்றுக்கொடுத்தால் குழந்தைகளுக்குச் சிக்கல் வராது என்பதெல்லாம் ஆய்வு செய்யப்படாமால் தெரிவிக்கும் பொத்தாம் பொதுவான கூற்று. சான்றாக, மலேசியாவில் ‘அம்மா’ எனப் படிக்கத் தொடங்கும் குழந்தை ஆங்கில எழுத்துருவில் ‘amma’ என்றும் அதே ஆங்கில எழுத்துருவைக் கொண்டு மலாயில் ‘emak’ என்றும் ஆங்கிலத்தில் ‘mom’, 'mummy', ‘mother’ என்றும் படிக்க வேண்டியிருக்கும். இப்படி ஒரே அம்மாவை, ஒரே சொல்லை, ஒரே எழுத்துருவில் வெவ்வேறாகப் படிப்பதும் ஒலிப்பதும் எழுதுவதும் புரிந்துகொள்வதும் குழந்தைகளுக்கு மிக எளிமையானது என்று சொல்லிவிட முடியுமா?

6)    மலாய் போன்ற மொழிகள் ஆங்கில எழுத்துருவில் எழுதப்படுவதால் ஆங்கிலம் கற்க எளிதாகிறது என்ற பொய்யைச் சொல்லி மலேசியாவுக்கு வெளியே இருப்பவர்களை வேண்டுமானால் செயமோகன் நம்பவைக்கலாம். ஆனால், மலேசியத் தெருவில் வந்து  மலாயை விற்று தமிழர்களை ஏமாற்ற முடியாது அவரால். மலேசியாவில் தமிழ்வழிக் கல்வி பயிலும் தமிழ் மாணவர்களே இன்று வரையில் ஆங்கிலத்தில் மேன்மைபெற்று விளங்குகின்றனர் என்று அவருக்குப் புள்ளி விவரங்களோடு அறிவிக்க முடியும். அறிவியலும், கணிதமும் ஆங்கிலத்தில் படிக்கவேண்டும் என்னும் கல்விக் கொள்கை சில ஆண்டுகளுக்கு முன் மலேசியாவில் அமுலாக்கப்பட்டது. 10 ஆன்டுகளுக்குப் பிறகு 2010ஆம் ஆண்டில் அக்கொள்கை தோல்வியுற்றதாக அறிவிக்கப்பட்டுக் கைவிடப்பட்டது. காரணம், தமிழ்ச் சீன மாணவர்களைக் காட்டிலும் மலாய்வழியில் பயிலும் மலாய்க் குழந்தைகளுக்கு ஆங்கிலத்தில் பயில்வது மிகக் கடினமாக உள்ளது என்பதால்தான். ஆங்கிலத்தில் ‘bus’, ‘postman’, ‘computer’ என்று படித்துவிட்டு பிறகு அதையே மலாயில் ‘bas’ ‘posmen’ ‘komputer’ என்று குழம்பி குழம்பி, மலேசியாவில் மலாய் மாணவர்கள் படித்துக் கொண்டிருப்பதை அறியாமல், செயமோகன் மலாய்மொழியை எடுத்துக் காட்டி தமிழக, அயலக மக்களை மயக்க முற்பட்டிருக்கிறார்.

7)    வருங்காலத்தில் தமிழ் எழுத்துருக்கள் மாறவே மாறாது அல்லது மாறவே கூடாது என்ற வரட்டு நம்பிக்கை தேவையில்லை. காலச் சூழலுக்கு ஏற்ப மாற்றம் வரலாம். அப்படித்தான் கல்வெட்டுக் காலம் பின்னர் ஓலைச்சுவடிக் காலத்தில் எழுத்துருக்கள் மாறி வந்துள்ளன. வீரமாமுனிவரும் ஏகாரம் ஓகாரம் ஆகிய எழுத்துகளைத் திருத்தி அமைத்தார். அதன்பின்னர் பெரியார் எழுத்துச் சீர்திருத்தம் பெரும் எதிர்ப்புக்குப் பின்னர் ஏற்கப்பட்டது. காரணம், பெரியார் கொணர்ந்த எழுத்துச் சீர்திருத்தத்தில் பாதிப்புகளை விட பயன்கள் மிகுதியாக இருந்ததால் மக்கள் அதனை ஏற்க முன்வந்தனர். தமிழகத்திற்கு வெளியே குறிப்பாக, மலேசியாவிலும் அதற்குப் பெரும் எதிர்ப்புகள் இருந்தபோதிலும் அச்சுத்தொழில், தட்டச்சு, கணினி ஆகியவற்றுக்கு அந்தச் சீர்திருத்தம் இசைவாக இருந்ததால் இங்கும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன்பிறகு, வா.செ.குழந்தைசாமி உகர, ஊகார எழுத்துச் சீர்மையை முன்வைத்து மூக்குடைபட்டதை விரித்துச் சொல்லத் தேவையில்லை. வா.செ.குழந்தைசாமியின் எழுத்துச் சீர்மை தமிழ் எழுத்துருக்களில் பெரும் அழிம்புகளைச் செய்துவிடும் என்பதால் அது கடுமையான கண்டனத்திற்குப் பிறகு முடங்கிப்போனது.

ஆனால், தற்பொழுது செயமோகன் தமிழையே அடையாளமில்லாமல் அழித்துப்போடும் சீர்திருத்தை முன்மொழிந்திருக்கிறார்; தமிழின் ஒட்டுமொத்த வரலாற்றையே மறைத்துவிடும் மிக ஆபத்தான வரிவடிவ மாற்றத்தை முன்வைத்திருக்கிறார்; தமிழ்மொழியின் தொப்புள்கொடி உறவையே துண்டிக்கப்போகும் கொலை பாதகத்திற்கு நிகரான கொடுஞ்சிந்தனையை நாசுக்காக; நயவஞ்சமாகச் சொல்லியிருக்கிறார்.

தமிழுக்கு நன்மை விளையும், தமிழை எல்லாரும் படிப்பார்கள், வருங்காலத்தில் தமிழ் வாழும் என்றெல்லாம் இனிப்புகளைப் பூசி கொடும் நஞ்சை தங்கத்தட்டில் வைத்து தமிழர்கள் முன்னால் பந்தி வைத்திருக்கிறார்.

ஆங்கிலவழி படித்தவர்கள் இன்று பெருகிவிட்டனர், தமிழையும் அதன் தூய்மையையும் உண்மையாக நேசிப்பவர்கள் குறைந்துவிட்டனர். இந்திய நாட்டில் இந்தியையும் ஆங்கிலத்தையும் கற்கும் மக்கள் பெருகிவிட்டனர். தமிழ்வழிக் கல்வியை தெரிவுசெய்பவர்களும் ஆதரிப்பவர்களும் குறைந்துவிட்டனர். தமிழ்நாட்டில் பிறமொழிக்காரர்கள் ஆதிக்கம் பெருகிவிட்டது. தமிழர்களின் பலம் காயடிக்கப்பட்டு நசுக்கப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவிட்டது. இதையெல்லாம் நன்றாக புரிந்துகொண்டு அந்தச் சிறு சந்தில் நுழைந்துகொண்டு தமிழுக்கு எதிராகச் சிந்துபாடுவதைச் செயமோகன் நிறுத்திகொள்வது நல்லது.

தமிழ் வரலாற்றில் பெயர் பொறிப்பதற்குச் செயமோகன் இத்துணை மெனக்கெட்டு, தமிழைப் பலிகொடுக்கும் தீயச்செயலில் இறங்கக்கூடாது. தமிழில் எழுதி எழுதிப் பெயரும் புகழும் கிடைத்தது போதாது என்று தனக்கு வரலாற்றில் அழியாப் புகழைத் தேடிக்கொள்ள தாம் அண்டிப்பிழைத்த தமிழுக்கே இரண்டகம் செய்ய அவருடைய மனம் துணியக்கூடாது.

தமிழை ஒரு தொடர்பு ஊடகமாகவும் கருவியாகவும் மட்டுமே பாவித்து பிழைத்துக்கொண்டிருக்கும் செயமோகன் இப்படியெல்லாம் சிந்திக்கக்கூடாது என நம்மில் எவரும் தடைபோட முடியாது. அது அவருடைய மண்டை; அவருடைய மூளை; அவருடைய உரிமை. ஆனால், அதனைக் கொண்டுவந்து தமிழன் மண்டைக்குள் கொட்டி குழப்பம் செய்வதற்கும்; தமிழன் மூளையைச் சலவை செய்வதற்கும் அவருக்கு எந்த உரிமையும் கிடையாது.

தமிழைத் தாயாகவும் மூச்சாகவும்; தமிழை இனத்தின் உயிராகவும் உரிமையாகவும்; தமிழைப் பண்பாட்டுத் தளமாகவும்; தமிழை வரலாற்றுச் சுவடாகவும்; தமிழை வாழ்வியல் நெறியாகவும்; தமிழை இலக்கியத்தின் வேராகவும்; தமிழை இலக்கணத்தின் ஆவணமாகவும்; தமிழை மரபுப் பெட்டகமாகவும்; தமிழை அறிவாகவும்; தமிழை ஆலயமாகவும்; தமிழைக் காவியமாகவும்; தமிழைக் கலையாகவும்;  தமிழை ஞால முதன்மொழியாகவும்; தமிழை ஆரியத்திற்கு மூலமாகவும்; தமிழை உலகமொழிகளின் தாயாகவும் எண்ணி எண்ணி மதித்துப் போற்றும் தமிழர்கள் இன்னும் நிறைய இருக்கிறார்கள்.

உலகத் தமிழர்களில் பெரும்பாலோர் தமிழை இன்னும் தமிழாக அறியாமலே இருக்கின்றனர். தமிழைப் பற்றி முழுமையாகத் தமிழர்கள் அறிந்துகொள்வதற்கு முன்னாலேயே, ஆங்கில எழுத்துருவுக்குத் தமிழை மாற்றி, தாயைப் பார்க்கமலேயே, தந்தையைப் பார்க்காமலே, உடன்பிறந்தாரைப் பார்க்காமலே, உறவுகளைப் பார்க்காமலே குழந்தையைக் கருவிலேயே களைத்து அழிப்பதைப் போல தமிழர்களுக்கும் தமிழுக்கும் உள்ள தொப்புள்கொடி உறவை அறுத்தெறியாதீர் என செயமோகனுக்கு வேண்டுகை விடுகின்றேன்.

இது குறித்து எதிர்வினைகள்... தொடரும்...

@சுப.நற்குணன், திருத்தமிழ்


Monday, September 30, 2013

தமிழ்க் கோட்டம்: தமிழுக்கும் தமிழருக்கும் ஒரு மணிமண்டபம்

மலேசியாவில் தமிழுக்கும் தமிழருக்கும் சொந்தமான தனிக் கட்டடம் இல்லாத குறையைத் தீர்க்கும் வகையில் ‘தமிழ்க் கோட்டம்’ எனும் பெயரில் ஒரு கட்டடம் அமையவுள்ளது. தமிழுக்கும் தமிழருக்கும் மலேசியாவில் முதன் முதலாக  இந்த மணிமண்டபம் உருவாகிறது.


கடந்த 1990ஆம் ஆண்டு தொடங்கி இன்றுவரையிலும் இடைவிடாமல் துடிப்புடன் செயல்படும் தமிழ் வாழ்வியல் இயக்கம் இந்தக் கட்டடத்தை வாங்கும் பெரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. தமிழுக்கும் தமிழருக்கும் மலேசியாவில் ஒரு மணிமண்டபமாக இந்தக் கட்டடம் அமையவுள்ளது. ஆகவேதான் இந்தக் கட்டடம் ‘தமிழ்க் கோட்டம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

எட்டு இலட்சம் வெள்ளி மதிப்புள்ள 3 மாடிகளைக் கொண்ட இக்கட்டடம் மலேசியாவில் வாழும் தமிழர்களுக்கும் தமிழ்மொழிக்கும் சொந்தமான ஒரு கட்டடமாக உருவாகி தமிழ்ப்பணியாற்றும் என இயக்கத் தலைவர் க.முருகையன் தெரிவித்தார்.

மலேசியாவில் தமிழையும் தமிழ் இனத்தையும் முன்படுத்தி பல்வேறு இயக்கங்கள் செயல்படுகின்றன. பல இயக்கங்கள் சொந்தக் கட்டடம் இல்லாமல் பிற இனத்தவரின் கட்டடத்தையும் மண்டபத்தையும் பயன்படுத்த வேண்டிய நிலையிலே இருக்கின்றன. இந்த நிலைமையை மாற்றி தமிழுக்கும் தமிழருக்கும் தனிக் கட்டடம் ஒன்றினை அமைத்து ‘தமிழரால் முடியும்’ என்னும் உண்மையை எடுத்துக்காட்ட இந்தத் ‘தமிழ்க் கோட்டம்’ வானுயர எழுந்து நிற்கப் போகின்றது.


‘தமிழ்க் கோட்டம்’ கட்டத்தில் இயக்க அலுவலகம், தமிழிய நூலகம், மேடை அரங்கம், தமிழ்த் திருமண மண்டபம், வழிபாட்டுத் தலம் போன்றவை அமைக்கப்பட உள்ளன. 

தமிழியச் சிந்தனைகளைப் பரப்புதல், தமிழ்நெறிக் கருத்துகளை விதைத்தல், திருக்குறள் நெறியை வளர்த்தெடுத்தல், தமிழ்ச் சமய ஆன்மநெறியை பேணுதல், தமிழ்க்கல்வியை ஊக்குவித்தல், தமிழ் இளையோர்களுக்கு வழிகாட்டுதல் முதலான அரிய தமிழ்ப்பணிகளை முன்னெடுத்து நடத்துவதற்கு இந்தத் ‘தமிழ்க் கோட்டம்’ பேருதவியாக இருக்கும் என்றால் மிகையன்று. 

எனவே, மலேசியத் தமிழர்கள், தமிழ்ப் பற்றாளர்கள், ஆர்வலர்கள், செல்வந்தர்கள் அனைவரும் இந்தத் தூய்மையான முயற்சிக்கு நன்கொடையளித்து உதவ வேண்டும் என இவ்வியக்கத்தின் ஏடலர் தமிழ் ஆய்வியல் அறிஞர்  இர.திருச்செல்வம் கேட்டுக்கொண்டார்.

மலேசியாவில் தமிழ்மொழி நிலைத்திருக்கவும் தமிழ் மக்களின் வாழ்வியலை நெறிபடுத்தவும் ஒரு நடுவம் அமைய வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இதனை நன்கு உணர்ந்துகொண்டு ‘தமிழ்க் கோட்டம்’ கட்டடம் அமைய எல்லாரும் துணைநின்று உதவ வேண்டும் என தமிழ் வாழ்வியல் இயக்கப் பொறுப்பாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர். 

மேல்விளக்கங்களுக்கும் தொடர்புக்கும்:-
தலைவர்:- க.முருகையன் 012-4287965
செயலாளர்:- சுப.நற்குணன் 012-4643401
பொருளாளர்:- ம.தமிழ்ச்செல்வன் 013-4392016

மின்னஞ்சல் : tamilkottam@gmail.com

@சுப.நற்குணன், திருத்தமிழ்

Wednesday, June 05, 2013

அன்புள்ள மலேசியத் தமிழ்க் கல்வியாளர்களுக்கு..

[மனம் திறந்த மடல்]
 
இன்று 5-6-2013ஆம் நாள் கோலாலம்பூர், பெர்ல் இண்டர்நேசனல் விடுதியில் நடைபெறும் '10ஆம் உலகத் தமிழாசிரியர் மாநாட்டு' அரங்கத்திலிருந்து மலேசியத் தமிழாசிரியர்கள் தமிழ்க் கல்வியாளர்கள் சிந்தனைக்காக இதனை இங்குப் பதிவிடுகிறேன்.

இந்த மாநாட்டில் மலேசியா உள்பட இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், கனடா, மொரிசியசு, அசுத்திரேலியா, அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா முதலான நாடுகளின் பேராளர்கள் 'நாட்டுப் படைப்பு' அரங்கத்தில் பேசினார்கள். அந்தந்தப் பேராளர்களின் உரையின் நடுவில் என் மனத்தில் துளிர்த்த சிந்தனைகள் இவை.

அயல்நாடுகளிலும் தமிழர்கள் புலம்பெயர்ந்து குடியேறிய நாடுகளிலும் தமிழ்மொழி, தமிழ்க்கல்வி, தமிழ்ப்பண்பாடு எப்படி இருக்கின்றன தெரியுமா? எப்படி வளர்க்கப்படுகின்றன தெரியுமா? எவ்வாறு அவை காக்கப்படுகின்றன தெரியுமா?

தாய்மொழியாகிய தமிழுக்காகவும் தமிழ் சார்ந்த வாழ்வாதாரத்திற்காகவும் அரசாங்கத்தின் ஆதரவும் இல்லாமல் - ஆதாரம் இல்லாமல் பலவித இன்னல்களில் வாடுகிறார்கள்!

பல்வேறு இடர்களுக்கு நடுவில் அவர்கள் தமிழை மீட்கப் பாடுபடுகிறார்கள்!
பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையில் அவர்கள் தமிழைக் காக்கப் போராடுகிறார்கள்!

தமிழ்க்கல்வியை அறிமுகப்படுத்தவும் தமிழைக் கற்பிக்கவும் வழிதேடி வழிதேடி உருக்குலைந்து போகிறார்கள்.

அவர்கள் நாட்டு அரசாங்கப் பள்ளிகளில் பள்ளி நேரத்திலேயே தமிழ் படிக்க வாய்ப்பு இல்லாமல் வருந்திக் கொண்டிருக்கிறார்கள்.

வார இறுதியில் தமிழ் வகுப்புகள் நடத்தினாலும் மாணவர்களின் வருகை - ஆர்வம் - கற்கும் திறன் ஆகியவை கவலைக்கிடமாக இருப்பதாகப் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழைக் கற்பிக்க முறையான பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லாமல் - ஆசிரியர் பயிற்சி அளிக்கும் பயிற்சிக் கழகம் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தன்னார்வத்தின் அடிப்படையில் மருத்துவர், வழக்கறிஞர், பொறியியலாளர், தகவல் தொழிநுட்பர், இல்லத்தரசிகள் போன்றோர் எந்தவொரு ஊதியமும் இல்லாமல்  தமிழைக் கற்பிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.

தமிழ்க்கல்விக்கான முறையான கலைத்திட்டம் இல்லாமல் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழைக் கற்கவும் கற்பிக்கவும் பாடநூல்கள் - பயிற்சிநூல்கள் இல்லாமல் அல்லாடிக்கொண்டிருக்கிறார்கள்.

அவர்களின் அடுத்த தலைமுறை தாய்மொழி அறியாத இனமாகி விடுமோ என அஞ்சுகிறார்கள்.

அவர்களின் குழந்தைகள் தமிழ்ப் பண்பாடு தெரியாதவர்களாக ஆகி விடுவார்களோ எனப் பயப்படுகிறார்கள்.

அவர்களின் எதிர்கால சரவடிகள் தமிழிய வரலாற்றையும் வாழ்வியலையும் அறியாமல் இனமல்லா இனமாக ஆகிவிடுமோ என உண்மையிலேயே கலங்குகிறார்கள்! கண்ணீர் வடிக்கிறார்கள்!

இப்படியெல்லாம், பல்வேறு அல்லல்களுக்கும் அவலங்களுக்கும் இடையில் பெரும்பாடு பட்டு தமிழை வாழவைக்க.. வளர்த்தெடுக்க அரும்பாடு படுகிறார்கள்..! புலம்பெயர் நாடுகளின் அரசாங்கத்தின் போதுமான உதவிகள் இல்லாமல் தங்கள் தாய்மொழிக்காகவும் மொழி சார்ந்த வாழ்வியலுக்காகவும்  உயிரைப் பிழியும் பெரும்பாடு படுகிறார்கள்..!

அவர்களுடைய பாடுகளைப் பார்க்கும் பொழுது நமக்கும் இதயம் வலிக்கிறது..! அவர்களுடைய இடர்களைக் காணும் பொழுது நமக்கும் கண்ணீர் வருகிறது..! அவர்களின் ஈக (தியாக) உள்ளத்தைப் பார்க்கும் பொழுது நமக்கும் உள்ளம் நெகிழ்கின்றது..! அவர்களின் தமிழ் உணர்வைப் பார்க்கும் பொழுது நம் உடலும் சிலிர்க்கின்றது..!

தமிழ்மொழி, தமிழ்க்கல்வி, தமிழ்ப்பண்பாடு, தமிழ் விழுமியங்களை மீட்டெடுக்கவும் காத்து வளர்க்கவும்.. அவர்களின் குழந்தைகளைத் தமிழ் இனமான உணர்வுள்ளவர்களாக - தமிழ்க் குழந்தைகளாக வளர்த்தெடுக்க மிக மிகக் கடுமையாக மெனக்கெட்டு உழைக்கிறார்கள்.

ஆனால், இங்கே மலேசியாவில்  நிலைமை எப்படி இருக்கின்றது..?

 அவர்களோடு ஒப்பிடும் பொழுது நமக்கு இடர்கள், இன்னல்கள், நெருக்கடிகள், போராட்டங்கள், சிக்கல்கள் எல்லாமே குறைவு. அவர்களோடு ஒப்பிடும் பொழுது நமக்கு வாய்ப்பு, ஏந்து (வசதி), சலுகை, உதவி, ஆதரவு ஆகிய அனைத்தும் மிக மிக அதிகம்.
அரசாங்க உதவியுடன் தொடக்கப் பள்ளியில் படித்து..
அரசாங்க உதவியுடன் இடைநிலைப் பள்ளியில் படித்து..
அரசாங்க உதவியுடன் கலைத்திட்டங்களில் நடைபயின்று..
அரசாங்க உதவியுடன் தேர்வுகளில் அமைர்ந்து தேர்வு பெற்று..
அரசாங்க உதவியுடன் ஆசிரியர்க் கல்லூரியில் பட்டயம்  பயின்று..
அரசாங்க உதவியுடன் ஆசிரியர் பயிற்சிக் கழகத்தில் பட்டம் பெற்று..
அரசாங்க உதவியுடன் பல்கலைக்கழகத்தில் இளங்கலை, முதுகலை பெற்று..
அரசாங்க உதவியுடன் ஆசிரியர் பணியில் சேர்ந்து..
அரசாங்க உதவியுடன் கற்றல் கற்பித்தலை நடத்தி..
அரசாங்க உதவியுடன் பணியிடைப் பயிற்சிகளில் கலந்துகொண்டு..
அரசாங்க உதவிடன் உதியம், படிச்செலவு, ஓய்வூதியம் அனைத்தும் பெற்று..

இன்னும் இப்படி பற்பல பற்பல உதவிகளும் ஏந்துகளும் எல்லா ஆதரவுகளையும் அரசாங்கத்தின் உதவியுடன் பெற்றுக்கொண்டு மலேசியாவில் நாம் ஆசிரியர்களாக இருக்கின்றோம்; விரிவுரைஞர்களாக இருக்கின்றோம்; பேராசிரியர்களாக இருக்கின்றோம்; முனைவர்களாக இருக்கின்றோம்.

நம்மில் எத்தனை பேர் தமிழுக்காகவும் - தமிழ் மாணவர்களுக்காகவும் - தமிழ்ப் பள்ளிகளுக்காகவும் - தமிழ்க் கல்விக்காகவும் - தமிழ் இனத்திற்காவும் - தமிழ்ப் பண்பாட்டுக்காகவும் - தமிழ் விழுமியங்களுக்காகவும் - தமிழ் வாழ்வியலுக்காகவும்..

உண்மையாக சிந்திக்கின்றோம்..?
உளமாற எண்ணிப் பார்க்கின்றோம்?
நேர்மையாக உழைக்கின்றோம்..?
தமிழ் உணர்வோடு செயல்படுகின்றோம்..?
தமிழ்ப் பற்றோடு பாடாற்றுகின்றோம்..?

நமது மாணவர்களும் இளையத் தலைமுறையினரும் எதிர்காலத்தில் தமிழிய உணர்வோடும் தமிழிய அறிவோடும் வாழ நம்மில் எத்தனை கல்வியாளர்கள் தெளிந்த அறிவோடும் தூய்மை உணர்வோடும் பணிசெய்கின்றோம்? பாடாற்றுகின்றோம்?

பல்லினம் வாழும் மலேசியச் சூழலைக் கருத்தில் கொண்டும்  படுவேகமாக வளர்ந்துவரும் உலகமயமாதல் சூழலைக் கவனத்தில் கொண்டும் நம்மில் எத்தனை கல்வியாளர்கள் அடுத்த தலைமுறை தமிழோடு வாழவும் தமிழராக வாழவும் திட்டமிட்டுச் செயல்படுகின்றோம்? தொலைநோக்கோடு திட்டமிடுகின்றோம்?

உணர்ச்சிவயப்படாமல் அறிவுவயமாகச் சிந்திக்க வேண்டிய வினாக்கள் இவை...!


இத்தகைய ஆசிரியர்கள், கல்வியாளர்கள் யாருமே இல்லை எனச் சொல்வது மிகப் பெரிய பொய். கண்டிப்பாகச் சில நூறு ஆசிரியர்கள் இருக்கிறார்கள். சில பத்து விரிவுரைஞர், பேராசிரியர், முனைவர் ஆகிய கல்வியாளர்கள் இருக்கிறார்கள் என்பது உண்மை! உண்மை! அவர்கள் அனைவரும் வணக்கத்திற்கு உரியவர்கள்; போற்றுதலுக்கு உரியவர்கள் எனில் மிகையன்று.

ஆனால், சில நூறு ஆசிரியர்களும். சில பத்து விரிவுரைஞர், பேராசிரியர், முனைவர் ஆகிய கல்வியாளர் மட்டும் போதுமா?

மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகளில் 8000 ஆசிரியர்கள் இருக்கின்றார்கள். இடைநிலைப்பள்ளிகளில் 3000 தமிழாசிரியர்கள் இருக்கின்றார்கள். 100 விரிவுரைஞர்கள், பேராசிரியர்கள் இருக்கிறார்கள். 50 முனைவர்கள் இருக்கிறார்கள். ஆக, ஏறக்குறைய 11,000 தமிழ்க் கல்வியாளர்கள் இருக்கிறார்கள்.

இவர்கள் அனைவரும் மனதுவைத்தால்.. இவர்கள் அனைவரும் மனமாற்றம் பெற்றால்.. இவர்கள் அனைவரும் உணர்வுபெற்று எழுந்தால்.. இவர்கள் அனைவரும் தமிழிய உள்ளத்தோடும் உணர்வோடும் உழைத்தால்..

எதிர்காலத்தில் உலகத் தமிழர்களுக்கே வழிகாட்டும் வெற்றித் தமிழர்களாக மலேசியத் தமிழ் மாணவர்கள் திகழ முடியும்!

வருங்காலத்தில் உலகத் தமிழினத்திற்கே தலைமையேற்கும் தகைமைசான்ற தமிழினம் மலேசியாவில் உருவாக முடியும்!

மலேசியத் தமிழ் ஆசிரியர்களே.. கல்வியாளர்களே வாருங்கள்..

தமிழால் ஒன்றுபடுவோம்!
தமிழராக ஒன்றுபடுவோம்! 
தமிழுக்காக ஒன்றுபடுவோம்!
@சுப.நற்குணன், திருத்தமிழ்

Friday, April 27, 2012

தமிழ்ப் புத்தாண்டு காப்புக்குழு நிறுவப்பட்டது



கேளிக்கை, கொண்டாட்டங்களில் ஈடுபட்டு, காதல், வீரம், பெருமை பேசிக் கலைவதை வாடிக்கையாக்கிய தமிழன், தான் செய்த சாதனையை ஆவணப்படுத்துவதை கைக்கொள்ளாததால்தான் வந்தேறிகளுக்கு நல்ல வாய்ப்பாகப் போய் வசைபாட வசதியாகப் போய்விட்டது. மண்ணின் மைந்தர்களான நம் மரபார்ந்த பல விடயங்களுக்கு நாமே பின் ஆவணங்களைத் தேடியலைய வேண்டிய சோக நிலை ஏற்பட்டிருக்கிறது.

சுமார் 300 ஆண்டுகளுக்குமுன் பார்ப்பனன் உள்ளே நுழைந்தவுடனே தமிழில் உள்ள நூல்கள் அனைத்தையும் அப்படியே படியெடுத்து அவன் மரபார்ந்த நூலாக ஆக்கித் தமிழ்நூல்களை மறைத்தான்.

ஒப்பிலக்கணம் கண்ட கால்டுவெல் தமிழகத்துக்கு வந்து ஆய்வை மேற்கொண்ட போது தற்போது உலகப் புகழ்வாய்ந்த வான்புகழ் கொண்ட திருவள்ளுவரின் நூலைப் பரிந்துரைக்க ஆள் இல்லை. அதன் பிறகு பல ஆண்டுகள் கழித்து தந்தை பெரியார் வந்து பார்ப்பனன் வேடம் கலைத்தார். திருக்குறள் மாநாடு நடத்தினார்.  

அதேபோல் ‘சங்க’த் தமிழ் என்றதற்கு ‘சங்கம்’ என்பதே தமிழ் இல்லை என்று எதிரிகள் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்கள். பின் அதற்கு நாம் பல சான்றுகளைக் காட்டவேண்டியதாகிவிட்டது.

இசையை, பரதக் கலையை, நாடகக் கலையை, ஔடத முறையை தமதென்று கூறி வாதிட்டார்கள். அதையும் போராடிக் காக்கவேண்டியதாகிவிட்டது.

தற்போது அவர்களே இன்னொரு குண்டைத் தூக்கிப்போட்டிருக்கிறார்கள். அதாவது பச்சையப்பன் கல்லூரியில் தமிழறிஞர் மறைமலையடிகள் தலைமையில் நடைபெற்ற கூட்டம் பொய்யானது என்றும், அந்தக் கூட்டம் நடைபெற்றபோது மறைமலையடிகள் தமிழ்நாட்டிலேயே இல்லை என்றும் ஊடகம் வாயிலாக தெரிவித்து தமிழர் மரபை திசை திருப்பப் பார்க்கிறார்கள்.

(பச்சையப்பன் கல்லூரியில் மறைமலையடிகள் தலைமையில் நடந்த கூட்டத்தின் கையெழுத்து ஆவணத்தை கி.வ.ஜகந்தான் ஒரு ஊடகத்தில் கொடுத்து அது பிரசுரிக்கப் படாமல் காணடிக்கப்பட்டுவிட்ட சோகம் நிகழ்ந்திருக்கிறது. அதுதான் இவர்களுக்கு வாய்ப்பாகப் போய்விட்டது. ஆனால் அவரே பல கூட்டங்களில் பேசிய குறிப்புகள், வாய்வழியாகச் சொல்லிய நபர்கள் நம்மிடையே இருக்கிறார்கள்.)

அதன் வலிமை வாய்ந்த குரலாகத் தற்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா முந்தைய அரசு சட்டசபையில் சட்டமாக்கி நடைமுறைப்படுத்திய, தமிழக மக்கள் அனைவரும் ஏற்றுக்கொண்ட தை மாதத்தில் தமிழ்ப்புத்தாண்டு கொண்டாடுவது, கடைப்பிடிப்பது என்ற கொள்கையை அதே சட்டசபையில் எந்த போராட்டமோ, தமிழக எந்த அமைப்போ, மக்களோ போராடாத, கூக்குரலிடாதபோது தானே வலியவந்து தை முந்தைய அரசு பிறப்பித்த ஆணையை ரத்து செய்திருப்பது செய்த தவறையே திரும்பச் செய்யவைப்பது போலாகும் என்பதைக் கண்டித்து சென்னை பிரஸ் கிளப்பில் 26-04-2012ஆம் நாள் காலை 11 மணியளவில் தமிழறிஞர்கள் ஒன்றுகூடி தமிழ்ப் புத்தாண்டு காப்பு மாநாடு கூடிய விரைவில் நடத்துவது பற்றியும், அதன் ஒருங்கிணைப்பாளர்கள், நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பது பற்றியும், தமிழ் ஆண்டுத் தொடக்கத்தை தற்போதைய தமிழக அரசு சித்திரையை முதலாக வைத்துத் தொடங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் பத்திரிகையாளர் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.  

இந்தச் சந்திப்பில் இறைக்குருவனார் தலைமையில் கி.த.பச்சையப்பன், முனைவர் அரணமுறுவல், இலக்குவனார் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். குறிப்பிட்ட அளவில் கலந்துகொண்ட தமிழ் ஆர்வலர்கள், தமிழ் அமைப்பு நிர்வாகிகள் தங்கள் கருத்துகளை எடுத்துவைத்தார்கள். இக்கூட்டத்தில் இன்னும் பத்து நாளில் தமிழ் ஆண்டுக் காப்புக் குழுவுக்கு நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதென்றும், இன்னும் மூன்று மாதத்தில் தமிழ் ஆண்டுக் காப்பு மாநாடு நடத்துவதென்றும் தீர்மானிக்கப்பட்டது. இந்த அமைப்பில் தமிழகத்திலுள்ள உணர்வுள்ள தமிழ் அமைப்புகள் அனைவரும் தாங்களாகவே வந்து கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பேசிய தமிழாய்வறிஞர் இறைக்குருவனார், தற்போதைய அதிமுக அரசு சித்திரை மாதத்தைத் தமிழ் ஆண்டு தொடக்கமாக பலர் முன்பு வாழ்த்துச் சொன்னார்கள். அதனால் சித்திரை முதல் நாள் தமிழ் ஆண்டுத் தொடக்கம் என்கிறார். இதே அதிமுக அரசில் முன்பு எம்.ஜி.ஆர். தலைமையில் ஒரு மாநாட்டில் இனி தமிழ் ஆண்டு தை நாளில்தான் கொண்டாடப்படவேண்டும் என்று தீர்மானம் போட்டு நடத்தப்பட்டது. ஆனால் அவரைத் தலைவராக ஏற்றுக்கொண்ட ஜெயலலிதா அவர் கருத்தை ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை என்று வினா எழுப்பியதோடு, ஏன் தை மாதத்தில் தமிழ்ஆண்டுப் பிறப்பு கொண்டாடப்பட வேண்டும் என்பதற்கு தமிழர் மரபார்ந்த பல செய்திகளைத் தக்கச் சான்றோடு விளக்கிக் கூறி அரங்கை அதிரச்செய்தார்.

பின்பு பேசிய முனைவர் அரணமுறுவல், தை தமிழ் ஆண்டு தொடக்கமாக மாற்றியதற்கு தமிழக மக்களோ, தமிழ் அமைப்புகளோ போராடபோது அவர்களாகவே இந்த மாற்றத்தை அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது, இந்த அறிவிப்பை மாற்றவில்லை யானால் தமிழறிஞர்கள் ஒன்றுகூடி தொடர் அறப்போராட்டங்களை நடத்துவோம் எனத் தெரிவித்தார்.

அடுத்து பேசிய கி.த. பச்சையப்பன், தமிழகத்தை தமிழர் ஆளாததுதான் இந்த நிலைக்குக் காரணம். தமிழரென்றால் தமிழ் உணர்வு இருக்கும் என்றார்.

இறுதியாகப் பேசிய இலக்குவனார் தமிழ் ஆண்டு காப்புக்குழு நிகழ்வுகளைப் பற்றிக் குறிப்பிட்டார்.

கொஞ்சம் தாமதம் (நேரம் அல்ல காலம்) ஆனாலும் நல்ல தொடக்கம் சரியான நேரத்தில் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது என்ற எண்ணத்தோடு தமிழ் ஆண்டு காப்பு மாநாட்டுத் தொடக்கம் இங்கிருந்து ஆரம்பமாகிவிட்டது.

தமிழ் நாட்டில் தமிழ் அமைப்புகளுக்குப் பஞ்சமில்லை. தமிழனின் பண்பாட்டுக்கே பங்கம் நிகழும்போது நிச்சயமாக உருண்டோடும் நெல்லியாக இல்லாமல் அதிமானுக்கு அவ்வைப்பிராட்டி ஊட்டிய நெல்லிக்கனியாக ஒட்டுமொத்த இந்த மாநாட்டில் தமிழக அமைப்புகளும், தமிழக மக்களும் இணைவார்கள் என்ற நம்பிக்கை அங்கு குழுமியிருந்த அனைவர் கண்களிலும் தெரிந்தது.



Tuesday, February 21, 2012

பிப்பிரவரி 21 - அனைத்துலகத் தாய்மொழி நாள்


பிப்பிரவரி 21-ஆம் நாள் அனைத்துலகத் தாய்மொழி நாள் என யுனெசுகோ நிறுவனம் அறிவித்துள்ளது. 2000ஆம் ஆண்டுத் தொடங்க இந்த நாள் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது.  உலகில் உள்ள ஒவ்வொரு மொழியும் அந்த மொழிக்குரியவர்களும் தங்களின் தனித்தன்மையையும் தனி அடையாளத்தையும் பேணிக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்தத் 'தாய்மொழி நாள்' உருவாக்கப்பட்டது.

அனைத்துலகத் தாய்மொழி நாளாகப் 'பிப்பிரவரி 21'-ஐ தெரிவு செய்ததற்கு ஒரு சிறப்புக் காரணம் இருக்கிறது. 1952-இல் இந்த நாளில் அன்றைய கிழக்குப் பாக்கிசுதான் (இன்றைய வங்காளதேசம்) தலைநகரமாக இருந்த டாக்காவில் மொழிப் போராட்டம் வெடித்தது. வங்காள மொழியை ஆட்சிமொழியாக அறிவிக்க வேண்டும் என்று நடத்தப்பட்ட அந்தப் போராட்டத்தில் உயர்க்கல்வி மாணவர்கள் 4 பேர் சூடுபட்டு இறக்க நேரிட்டத்து. தாய்மொழிக்காக உயிர்நீத்த அந்த மாணவர்களின் நினைவாக இந்த நாள் உலகம் முழுவதும் நினைவுக் கூரப்படுகிறது. 

இந்த அனைத்துலகத் தாய்மொழி  நாளில் தமிழர்களாகிய நாம் நமது தாய்மொழியாம் தமிழ்மொழியை நினைந்துப் போற்றி, நம்முடைய தாய்மொழிக் கடமைகளை நிறைவாகச் செய்ய உறுதிகொள்ள வேண்டும். உலக இனங்கள் எல்லாம் தம்முடைய தாய்மொழியையும் பண்பாட்டு விழுமியங்களையும் மீட்டுக்கொள்ளவும் காத்துக்கொள்ளவும் முனைந்து செயல்படுவதை உணர்ந்துபார்த்து நாமும் அவ்வண்ணமே செயல்பட வேண்ட்டும். 

இல்லையேல், அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு.. அல்லது அடுத்த நூற்றாண்டில் நமது தமிழ்மொழியானது வரலாற்றில் மட்டுமே வாழும் மொழியாக மாறிப்போய்விடலாம்; அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்ட மொழியாக ஆகிப்போய்விடலாம்.

தமிழ்மொழி ஆளும் மொழியாக இருந்த நூற்றாண்டுகளை  வரலாற்றில்  கண்டிருக்கிறோம்; தமிழ் மக்களிடையே புழங்கும் மொழியாக இருப்பதைக் கண்டிருக்கிறோம்; புலம்பெயர்ந்து பரவிய மொழியாகக் கண்டிருக்கிறோம்;  பன்மொழிகட்கும் சொற்கடன் கொடுத்த மொழியாகக் கண்டிருக்கிறோம்.  இப்படியாகக் கடந்த நூற்றாண்டுகளைக் கடந்து வந்துவிட்ட  தமிழ்மொழி   இனிவரும் காலத்திலும் வாழும் மொழியாக தமிழ் மக்கள் வழக்கில்..  தமிழ் மக்கள் வீட்டில்..  தமிழ் மக்கள் நாவில் வாழ வேண்டடும்.

அதற்குப் பின்வருவனவற்றில் சிலவற்றையேனும் நாம் உடனடியாகச் செய்தாக வேண்டும்:-

1.குழந்தைக்குத் தமிழ்ப் பெயரைச் சூட்டுவோம்.
2.குழந்தைகளுக்குத் தமிழ்க்கல்வி கற்றுக்கொடுப்போம்.
3.குழந்தைகளைத் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்புவோம்.
4.இல்லங்களுக்குத் தமிழ்ப் பெயர் சூட்டுவோம்.
5.இல்ல நிகழ்ச்சிகளைத் தமிழில் நடத்திக் கொள்வோம்.
6.தமிழரிடம் தமிழில் பேசுவோம்.
7.தமிழ்ப் பண்பாட்டைப் பேணுவோம்.
8.தமிழினம் என்ற இன அடையாளத்தை மீட்டமைப்போம்.
9.தமிழ் இனத்தின் பெயரால் ஒன்றுபட்டு நிற்போம்.
10.நாம் தமிழர் என்று மார்தட்டி முழங்குவோம்.
11.தமிழனுக்குத் தமிழன் கைகொடுத்து உதவிடுவோம்.
12.தமிழிய நெறியில் குடும்பத்தை வழிநடத்துவோம்.
13.தமிழால் பூசித்து இறைமையை வழிபடுவோம்.
14.தமிழ் மொழி, இன, பண்பாட்டு, வரலாற்று அறிவு பெறுவோம்.
15.தமிழே மூச்சு, தமிழே உயிர், தமிழே வாழ்வு என வாழ முற்படுவோம்.
-சுப.நற்குணன்

Tuesday, December 27, 2011

மலேசியாவில் திருக்குறள் நாள் வாழ்த்து அட்டை

திருக்குறள் உலக சட்டத்திற்கு வேர்; மாந்தர் வாழ்வு நெறிக்கு வழிகாட்டி; தமிழர் வாழ்விற்கு அடிப்படை; உலகத் தமிழரை இணைத்துப் பிணைக்ககூடிய உயர்ந்த மறை. உலகிலேயே ஒரு மாண்புமிகு நூல் இஃது ஒன்றே என்ற தொடக்கத்துடன் மலேசியாவில் திருக்குறள் நாள் வாழ்த்து அட்டை வெளிவந்து உள்ளது.

கடந்த 20.01.1996-ல் மலேசியாவில் நடந்த உலகத் தமிழ் மறை திருக்குறள் வாழ்வியல் மாநாட்டில் ‘சனவரி முதல் நாளை திருக்குறள் நாள்’ என உலகிற்குப் பரிந்துரை செய்யப்பட்டது. இந்தப் பரிந்துரைக்கு மிக முகாமையாகப் பங்காற்றியவர் மலேசியாவின் மூதறிஞர். தமிழ்ப்புணல் மு. மணிவெள்ளையனார் அவர்களே.

திருக்குறளால் இளைய தலைமுறையினர் அடையும் பயன், திருக்குறளின் நன்மை, அதன் முகாமையான குறிக்கோள் என்ன என்பது போன்ற உலக பொது மறை திருக்குறளின் நோக்கம் இந்த வாழ்த்து அட்டையில் நன்கு விளக்கப்பட்டுள்ளது.

இந்த அற்புதமான திருக்குறள் வாழ்த்து அட்டையின் மூலமாக பலருக்கு நன்மை கிடைத்து பயனடைவர் என்பது திண்ணம் என்கிறார் ‘உலக பொது மறை திருக்குறள்’ வாழ்த்து அட்டையை தயாரித்து வெளியீடு செய்த இரவாங்கைச் சேர்ந்த தமிழ் நெஞ்சர் அரசேந்திரன்.

தமிழ்நெஞ்சர் அரசேந்திரன்
மின்னல் பண்பலை வானொலியில் காலையில் திருக்குறள் விளக்க உரை வழங்கும் மலேசியத் தமிழ் நெறிக் கழகத் தலைவர் இரா. திருமாவளன் இந்த வாழ்த்து அட்டை சிறப்பாக அமைவதற்கு நல்ல ஆலோசனை வழங்கியதாக கூறுகிறார் அரசேந்திரன்.
ஒவ்வொருவரும் சில திருக்குறள் வாழ்த்து அட்டைகளை வாங்கி நண்பர்கள், உறவினர்களுக்கு அனுப்பி வைத்தால் திருக்குறளின் காலத்தால் அழியாத பல சிறப்புகள் இன்னும் பலருக்குத் தெரிய வாய்ப்புண்டு. 

ஒரு வாழ்த்து அட்டையின் விலை RM1.50  மட்டுமே.

தொடர்புக்கு :- 
திருமதி மல்லிகா 016-6129554,
இரா. திருமாவளவன் 016-3262479,
அரசேந்திரன் 019-3243253.
நன்றி:- மலேசியாஇன்று

Wednesday, April 13, 2011

சித்திரைப் புத்தாண்டுச் சிந்தனை

சித்திரைப் புத்தாண்டு. இதனைச் சிலர் தமிழ்ப் புத்தாண்டு என்கிறார்கள். சிலர் இந்துப் புத்தாண்டு என்கிறார்கள். இன்னும் சிலர் “நமக்கேன் வேண்டாத வம்பு” என்றெண்ணி சித்திரைப் புத்தாண்டு என்று மட்டும் சொல்லி சமாளித்துக் கொள்கிறார்கள்.

இதுபற்றி ஆராய்வது என் நோக்கமன்று. மாறாக, சித்திரைப் புத்தாண்டு பிறக்கிறது என்று சொல்லிக்கொண்டு, மக்களை மடையர்களாக ஆக்கி வைத்திருக்கும் ஒரு விடயத்தைப் பற்றி விவாதிக்க விழைகிறேன். ஆர்வமுள்ளவர்கள் தொடருங்கள்... இங்கே..!!



Wednesday, July 28, 2010

தமிழுக்குப் பொருளியல் மதிப்பு உண்டு

நாளது 14.07.2010இல் பாரிட் புந்தார், தமிழியல் நடுவத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் நான் ஆற்றிய உரை நாளிதழில் செய்தியாக வந்தது. அதனை இங்குப் பதிவிடுகிறேன். - சுப.ந

பாரிட் புந்தார் ஜூலை 15,

உலகின் மிகப் பெரிய பணக்கார நிறுவனமாகிய பில் கேட்சின் மைக்ரோ சொப்ட் உள்ளிட்ட கணினி தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்கள் தமிழுக்குப் பொருளியல் மதிப்பு உண்டு என்பதை உணர்ந்துள்ள காரணத்தால் அவை மிக வெற்றிகரமாக தமிழைச் சந்தைப்படுத்தி வெற்றிப்பெற்றுள்ளன என்று செம்மொழி மாநாட்டையொட்டி கோவையில் நடைபெற்ற உலகக் கணினி மாநாட்டில் கட்டுரை படைத்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட சுப.சற்குணன் தெரிவித்தார்.


உலகின் மிகப் ¦ÀâÂô பணக்கார நிறுவனமாகிய பில் கேட்சின் மைக்§Ã¡ ¦º¡ப்ட், கூகிள், யாகூ மெக்கிந்§¾¡Š, லினிக்Š,§¿¡க்கியா முதலான கணினிò ¦¾¡ழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்கள் இன்று தமிழைச் சந்தைப்படுத்தி ¦À¡ÕÇ¢Âø ¿¢¨Ä¢ø ¦ÅüÈ¢ô¦ÀüÚûÇÉ.இதன் மூலம் §¸¡டிக்கணக்கில் பணத்தை ஈட்டி வருகின்றனர்.உலக அளவில் ¦À¡ருளாதார மதிப்பு இருப்பதால்தான் விண்§¼¡Š §À¡ன்ற கணினி மென்¦À¡ருள்களில் ¬ங்கிலத்§¾¡டு சேர்ந்து தமிழும் இடம்பெற்றுள்ளது.


இதே ¦À¡ருளியல் மதிப்பை உணர்ந்துள்ளதால் §¿¡க்கியா §À¡ன்ற கைப்பேசிகளில் தமிழும் இடம்பெற்றுள்ளன. இன்று ஆங்கிலத்திற்கு இணையாக தமிழ்¦Á¡ழி இணையத்தில் §¸¡§Ä¡ச்சி வருகின்றது எýபது உண்மை ±ýÚ þíÌ À¡Ã¢ð Òó¾¡÷ ¾Á¢Æ¢Âø ¿ÎÅò¾¢ø ¾Á¢Æ¢Âø ¬ö×ì ¸Çõ,¾Á¢ú Å¡úÅ¢Âø þÂì¸í¸Ç¢ø ²üÀ¡ðÊø ¿¨¼¦ÀüÈ Á¡¿¡ðÎô ÀÂý¸¨Çô À¸¢÷óÐ ¦¸¡ñ¼ì Üð¼ò¾¢ø ÍÀ.ºü̽ý §Áü¸ñ¼Å¡Ú ¦¾Ã¢Å¢ò¾¡÷.


அண்மையில் §¸¡வையில் நடந்த தமிழ் இணைய மாநாட்டில் தமிழ்¦Á¡ழியில் புதிய புதிய ¦¾¡ழில் நுட்பங்களை காண முடிந்தது. புதுப்புது மென்¦À¡ருள்கள், கணினி நிரலிகள் உருவாகி உள்ளன. முதன்முறையாக ¦¾¡டுதிரை கணினியை அந்த மாநாட்டில் காண முடிந்தது. பலரும் மிக வியப்புடன் அதனைப் பயன்படுத்தினர்.

கற்றல் கற்பித்தல் ¦¾¡டர்பாக பல ஆக்கங்கள் இன½யத்தில் நிகழ்ந்துள்ளன. இவை அனைத்தும் தமிழுக்குப் ¦À¡ருளாதார மதிப்பு இருப்பதைப் பறைசாற்றுகின்றன. இன்று உலக அளவில் தமிழ்¦Á¡ழி வணிக ¦Á¡ழியாக வளர்ந்துள்ளது என்பதற்கு கணினி, இணையம் சார்ந்த வளர்ச்சிகளும் கண்டுபிடிப்புகளும் நல்ல சான்றாக உள்ளன.


தமிழைப் ¦À¡ருளியல் மதிப்புள்ள ¦Á¡ழியாக வளர்த்தெடுக்க மலேசியத் தமிழர்களும் பாடாற்றியுள்ளனர். குறிப்பாக முத்து நெடுமாறன் முரசு தமிழ் மென்¦À¡ருளை வெளியிட்டு உலகச் சந்தையில் வணிகப்படுத்தி இருக்கிறார். மலேசியாகினி இன½யத்தளம் §Á¡பைல்கினி என்ற கைப்பேசி குறுஞ்செய்தி சேவையைத் தமிழில் ஏற்படுத்தி தமிழ்¦Á¡ழியைப் ¦À¡ருளியல் மதிப்புள்ள ¦Á¡ழியாக உருவாக்கியுள்ளது.


தமிழ் §º¡று §À¡டுமா? என்றும் தமிழுக்குப் ¦À¡ருளாதார மதிப்பு உண்டா?’ என்றும் இன்று தமிழர்களே கேட்க ¦¾¡டங்கிவிட்டனர்.ஆங்கிலம் உலக ¦Á¡ழி. அதை கற்றால்தான் முன்னேற்றலாம் என்று நம்புகின்றனர். அதனால் தமிழைப் புறக்கணிக்கின்றனர்.


எந்த ¦Á¡ழியும் தானாக வலிமை பெறுவது இல்லை, ¦À¡ருளாதார மதிப்பு பெறுவது இல்லை. ஆங்கிலம் உலக¦Á¡ழி ஆனது ஆங்கிலேயனால் தானே தவிர, அந்த ¦Á¡ழியினால் அல்ல. சீனம் வணிக ¦Á¡ழியாக இந்த நாட்டில் இருக்கிறது என்றால் சீனர்களின் முனைப்பினால்தா§É தவிர, சீன ¦Á¡ழி தானாக அப்படி ஆகவில்லை.



இதேபோல், தமிழ் வாழ வேண்டும், வளர வேண்டும், பொருளியல் மதிப்பு பெற வேண்டுமானால் தமிழர்கள் அதை நோக்கி சிந்தித்து செயல்பட வேண்டும்.அதைவிடுத்து, தமிழுக்கு ஒன்றுமே செய்யாமல் அல்லது தமிழில் எதையும் செய்யாமல், எல்லாச் சூழலிலும் தமிழை முன்படுத்தாமல் வாளாவிருந்துவிட்டு தமிழ் வளரவில்லை என்று குறை சொல்லுவது சரியல்ல என சுப.சற்குணன் குறிப்பிட்டார்.

  • நன்றி:மக்கள் ஓசை (22.07.2010)


Sunday, May 16, 2010

ஆசிரியர் நாள்:- நாட்டினத்தை உருவாக்குபவர் ஆசிரியர்

மே 16இல் மலேசியாவில் ஆசிரியர் நாள் கொண்டாடப்படுகிறது. ஒவ்வோராண்டும் ஒரு கருப்பொருளில் (Theme) ஆசிரியர் நாள் கொண்டாடப்படுவது வழக்கம். “நாட்டினத்தை உருவாக்குபவர் ஆசிரியர்” என்பது இவ்வாண்டிற்கான கருப்பொருள். இதனை மலேசியாவின் தேசிய மொழியாம் மலாயில் Guru Pembina Negara Bangsa என்கிறார்கள். மலாய்மொழிக்கு ஆசிரியரைக் குறிக்கும் சொல்லைக் கொடுத்ததே நம் மொழிதான் என்பது கவனிக்கத்தக்கது.

இந்த நன்நாளை முன்னிட்டு மலேசியத் தமிழ் ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் “ஆசிரியர் நாள் நல்வாழ்த்தினை” மிகுந்த அன்போடும் மரியாதையோடும் தெரிவிக்க விரும்புகிறேன். இந்த நன்னாளில், எதிர்காலத் தமிழ்ச் சமுதாயத்தை சிறந்த முறையில் வளர்த்தெடுக்கும் அரும்பணியை ஆசிரியர்கள் செம்மையாக செய்திட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

ஆசிரியர் நாளை முன்னிட்டு, மே திங்கள் ‘மயில்’ இதழில் அதன் ஆசிரியர் பெரியவர் ஐயா.ஆ.சோதிநாதன் அவர்கள் எழுதியிருக்கும் தலையங்கம் மிகவும் சிறப்பாக இருந்தது. அதனை பகிர்ந்துகொள்ள வேண்டி இங்கு பதிவிடுகிறேன். உள்ளத்தை நெகிழவைக்கும் வகையில் அமைந்திருக்கும் இதனை மலேசிய ஆசிரியர்களின் சிந்தனைக்கும் செயலுக்கும் முன்வைக்கிறேன்.

**குரு வாழ்க! குருவே துணை!**

ஓதலும் ஓதுவித்தலும் அந்தணர் தொழில் என்பர். அந்தணன் என்போன் அறவோன்; செந்தண்மை பூண்டொழுகுவோன். அவனே ஆசிரியனும் ஆவான்.

அரசனிமும் உயர்ந்தோன் ஆசிரியன். அரசனுக்கும் அறநெறி புகட்டி நல்வழி காட்டுபவன் ஆசிரியனே. குரு – ஆசிரியர் – அருள் இன்றேல் திருவருள் இல்லை என்பது நம் முன்னோர் மொழி. எழுத்தறிவித்தோனை – ஆசிரியனை, இறைவனாகவே கருதினர்.

இருளிலிருந்து ஒளியை நோக்கி அழைத்துச் செல்பவனும், அறியாமையிலிருந்து அறிவை நோக்கி வழிநடத்துபவனும், மரணத்திலிருந்து அமரத்துவத்தை – மரணமில்லாப் பெருவாழ்வை அளிப்பவனும் ஆசிரியனே என்பது வேதவாக்கு.

பிரம்மனாய், அரியாய், அரனாய் எல்லாம் தாமாகி அருளுபதேசம் புரியும் தென்னாடுடைய சிவனாய் = தட்சிணாமூர்த்தியாய் வீற்றிருப்பவரும் குருநாதரே!

ஆசிரியர் எப்பொழுதும் எரிகின்ற விளக்கைப் போன்றவர். அவர்தாம் பல விளக்குகளை – அறிவொளியை ஏற்றத்தக்கவர். கால நேரம் கருதாது உழைப்பவர். தம் மக்கள் – மாணவர் நலனையே முதன்மையாகக் கொள்பவர். ஊதியங் கருதி உழைகாது தம் மாணவர் உயர்வை எண்ணியே உழைபவர்; அவ்வுழைப்பில் இன்பம் காண்பவர்.

எப்பொழுது தாம் கற்பதை நிறுத்தினால் அப்பொழுதே நல்லாசிரியர் எனும் தம் நிலையிலிருந்து நழுவிவிடுவோம் என்றுணர்ந்து நாளும் கற்று மேன்மை பெறும் ஆசிரியப் பெருமக்களின் பெருந்தொண்டுக்குத் தலைவணங்குவோம்.

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது (குறள் 101)

இத்தகு சீர்மையும் சிறப்பும் மிக்க ஆசிரியரைப் பொற்றுவதற்குரிய நாள் – ஆசிரியர் தினம் மே 16. அன்றாவது அவருக்கு நம் அன்பின் காணிக்கையாக ஒரு போங்கொத்து வழங்கலாமே.

வாழ்க ஆசிரியர் தொண்டு;
வளர்க அவர்தம் பெருமை!

அன்புடன்;
ஆ.சோதிநாதன்

  • பி.கு:-ஐயா.ஆ.சோதிநாதன் அவர்கள் நிரம்ப தமிழ்ப்பற்றும் தமிழுக்காகப் பாடாற்றும் செயலூக்கமும் மிகுந்தவர்; அனைவராலும் மதிக்கப்படும் தமிழ்ப் பெருந்தகை; இல்லை என்னாது வாரி வழங்கி தமிழைப் புரந்துகாக்கும் வள்ளல் குணம்படைத்தவர்; ஓய்வெடுக்கும் அகவையிலும் ஓயாமல் தமிழ்ப்பணிகள் ஆற்றும் சான்றாளர். ஐயா அவர்களின் வாழ்மொழியில், ஆசிரியர் நாளை முன்னிட்டு வாழ்த்து பெறுவதை, ஆசிரியர்கள் அனனவரும் பெரும் பேறாகக் கருதவேண்டும்.

Wednesday, April 14, 2010

சித்திரைப் புத்தாண்டு பலன்கள் + பாடங்கள்

முக்கிய அறிவிப்பு:-இது எந்தத் தரப்பினரையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதப்பட்டது அன்று. உணர்ச்சிவயப்படாமல் அறிவான முறையிலும் தருக்க சிந்தனையோடும் இதனைப் படிக்க தாழ்மையுடன் வேண்டுகிறேன். கேள்வியே கேட்காமல் எல்லாவற்றையும் நம்புகின்ற காலத்தைக் கடந்து, எதையும் அறிவாராய்ச்சி முறையில் நிறுத்துப்பார்த்துச் சரியான முடிவைக் காணும் காலத்தில் வாழ்கிறோம். நமது அடுத்த தலைமுறைக்குத் தக்க வழிகாட்டுதலைச் சொல்ல வேண்டிய தருணத்தில் இருக்கிறோம். ஆதலால், எதையும் ஏன்? எதற்கு? என்று கேட்பது அறிவறிந்த மக்கட்பண்பு. அங்ஙனம் கேட்பது ஒன்றனுடைய சிறப்பைக் குறைக்கும் நோக்கமன்று; மாறாக, உண்மை தேடும் உயர்ந்த இலக்கைக் கொண்டது என்பதைத் தெளிவுபடுத்த விழைகிறேன்.-சுப.ந.
சித்திரைப் புத்தாண்டு. இதனைச் சிலர் தமிழ்ப் புத்தாண்டு என்கிறார்கள். சிலர் இந்துப் புத்தாண்டு என்கிறார்கள். இன்னும் சிலர் “நமக்கேன் வேண்டாத வம்பு” என்றெண்ணி சித்திரைப் புத்தாண்டு என்று மட்டும் சொல்லி சமாளித்துக் கொள்கிறார்கள்.



இந்தக் குளறுபடி இன்று நேற்றல்ல. பல ஆண்டுகளாகத் தொடர்கதையாக இழுத்துக் கொண்டிருக்கிறது. உண்மையில், எதுதான் சரி? 
இந்த விவாதத்திற்கு நான் போக விரும்பவில்லை. ஏற்கனவே, திருத்தமிழில் தமிழ்ப் புத்தாண்டு பற்றி நிறைய எழுதியாகிவிட்டது. இங்கு, சித்திரைப் புத்தாண்டை ஒட்டிய வேறொரு சிந்தனையை முன்வைக்க விழைகிறேன்.

சித்திரைப் புத்தாண்டில் மிக மிக முக்கியமான அங்கம் ‘புத்தாண்டு பலன்’ வாசிப்பதுதான் போலும். அதுவன்றி சித்திரைப் புத்தாண்டில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கது வேறெதுவும் இல்லாமல் போய்விட்டது. அந்த அளவுக்குச் சித்திரைப் புத்தாண்டின் செல்வாக்கு மழுங்கி - சுருங்கி - தேய்ந்து போய்விட்டது. சோதிடச் சகதியில் அழுந்திபோய் மீட்க முடியாத ஆழத்தில் கிடக்கிறது.


அதிகமான ஆரியத் தன்மைகள் கலப்பினாலும் - சமற்கிருத ஊடுருவல்களாலும் - மதச் சார்பினாலும் - பொருளற்ற சடங்கு முறைகளாலும் - சோதிடத் தாக்கத்தினாலும் சித்திரைப் புத்தாண்டு தன்னுடைய தொன்மையான செம்மையை இழந்து சின்னபின்னப்பட்டுக் கிடக்கிறது.

இதுவெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். இனி நான் சொல்ல வந்த விடயத்தைப் பார்ப்போமா?

சித்திரைப் புத்தாண்டு அன்று குட்டிக் கோயில் தொடங்கி, தெருக்கோயில், தோட்டக் கோயில், சிறுதெய்வக் கோயில், பெரியக் கோயில், மலைக்கோயில், குகைக்கோயில், நகரக் கோயில், புறம்போக்கு நிலக் கோயில் என ஒரு கோயில் விடாமல், புத்தாண்டுச் சிறப்புப் பூசை என்று பத்தர்களைக் கூட்டமாகக் கூட்டி வைத்துக்கொண்டு ‘புத்தாண்டு பலன் வாசிப்பது’ நம் நாட்டில் வழக்கமாகி விட்டது.


இன்னும் சொல்லப்போனால், இப்படி செய்வது என்னமோ மிகப் பெரிய சமயக் கடமை - மிகப் பெரிய இறை நம்பிக்கை - புனிதமான ஆன்மிகச் செயல் போல இன்று ஆகிவிட்டது.

இப்படி சித்திரைப் புத்தாண்டுக்குச் சோதிடப் பலன் வாசிப்பவர்கள் அல்லது நம்புபவர்களைப் பற்றி நாம் குறை சொல்லவில்லை. அது அவரவர் தனிப்பட்ட நம்பிக்கை; உரிமை. 

ஆனாலும், பொதுவாகவே சோதிடப் பலன்களை வாசிப்பவர்கள் - நேசிப்பவர்கள் - நம்புபவர்கள் - நாளிதழ்களில் போடுபவர்கள் - வானொலி தொலைக்காட்சியில் பேசுபவர்களை நோக்கி சில வினாக்களைத் தொடுக்க தோன்றுகிறது.
 
1.சித்திரைப் புத்தாண்டுப் பலன்கள் எந்த அளவுக்கு உண்மையானவை. இந்தச் சித்திரை தொடங்கி இன்னும் 12 மாதங்களுக்கு இந்தப் பலன்கள் நடக்குமா? பலிக்குமா? 

2.சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னர் ஆங்கிலப் புத்தாண்டு 2010 பிறந்தபோது இராசி பலன் சொன்னார்களே சோதிடர்கள். அது பலிக்குமா? அல்லது சித்திரைப் புத்தாண்டு பலன் பலிக்குமா? இவை இரண்டில் எந்தச் சோதிடப் பலன் பலிக்கும்? எந்தப் பலனுக்குச் சத்தி அதிகம்?

3.இவை போக, இடையிடையே குரு பெயர்ச்சி பலன், சனிப் பெயர்ச்சி பலன் என்று நாளிதழ்களில் ஒரு நாளுக்கு ஒரு இராசிக்கான பலன் என்ற கணக்கில் பக்கம் பக்கமாக எழுதுகிறார்களே ஏன்? இதுவும் பலிக்குமா? ஏற்கனவே சொல்லப்பட்ட ஆங்கிலப் புத்தாண்டு பலன், சித்திரைப் புத்தாண்டு பலன் ஆகியவற்றை மிஞ்சியதா இது? 

4.பிறகு, நாள் பலன், வாரப் பலன், மாதப் பலன் என்று சில நாளேடுகள், வார, மாத இதழ்கள் போடுகின்றன. இது எப்படி? இதுவும் வேலை செய்யுமா?

5.இத்தனை இராசி பலன்களுக்கு நடுவில், எண் கணிதம் என்று சிலர் பிறந்த தேதிக்கும், பெயர் எழுத்துகளுக்கும் பலன் சொல்லிக் கொண்டிருக்கிறார்களே அது என்ன? இந்த எண்கணிதம் எந்த அளவுக்கு வேலை செய்யும்? இராசி பலனைத் தாண்டி எண்கணிதம் ஆற்றல் கொண்டதா? 

6.எண்கணிதத்தைப் பின்பற்றி பெயரில் உள்ள சில எழுத்துகளை மாற்றி அமைத்துக்கொண்டால், இராசிக் கட்டம் போட்டுச் சொல்லப்படும் சோதிடத்தில் உள்ள பலன்களை அதிகப்படுத்திக் கொள்ளவோ அல்லது அதிலுள்ள ஆபத்துகளைக் குறைத்துக்கொள்ளவோ இயலுமா? 

7."இருள் என்பது விதி; விளகேற்றி இருளை விரட்டுவது மதி! மழை பெய்வது விதி; குடை பிடித்து மழையில் நனையாமல் பாதுக்காப்பது மதி!" என்றெல்லாம் எண்கணிதத்திற்கு வியாக்கியானம் கூறும் எண்கணித நிபுணர்கள் இயற்கை விதியை எண்கணிதத்தால் வெல்ல முடியும் என்கிறார்களா? எப்படி? நிரந்தரமாகவா? தற்காலிகமமகவா? அல்லது ஒரு மனவியல் உத்தி மட்டும்தானா?

8.இதற்கிடையில், அவ்வப்போது பட்டணத்திற்கும் திருவிழாவிற்கும் செல்லும்போது அங்கு யாரேனும் கிளி சோதிடரையோ, குறிசொல்பவரையோ கண்டுவிட்டால், உடனே ஓடிப்போய் பலன் கேட்கும் பழக்கம் பலருக்கு இருக்கிறது. ஒரு பருக்கை அரிசிக்காகக் கிளி எடுத்துப் போடும் அட்டையில் எழுதப்பட்டிருக்கும் பலன் பலிக்குமா? அல்லது சோலிகளை உருட்டிப் போட்டு குறி சொல்கிறார்களே அது பலிக்குமா? இவை இரண்டும் இராசி பலன், சென்ம பலன், எண் கணிதம் ஆகியவற்றைவிட சிறந்ததா?

 
9.அடுத்து எதைச் சொல்லப் போகிறேன் என்று உங்கள் கற்பனையும் வேகமாக ஒடுவது தெரிகிறது. கைரேகை சோதிடம் தான் அடுத்தது. பிறக்கும் போதே ஒவ்வொருவருடைய வாழ்க்கையை உள்ளங்கையிலேயே கொடுத்து அனுப்புகிறார் இறைவன் என்று சொல்லி கைரேகை பார்த்துக் கணிப்பதே சிறந்த சோதிடம் என்கிறார்கள் சிலர். ஒருவருக்கு இருப்பது போல இன்னொருவருக்குக் கைரேகை இருப்பதில்லை. ஆகவே, கைரேகையே ஒவ்வொருவர் வாழ்க்கையையும் தீர்மானிக்கிறது என்கிறார்கள். அப்படியா? கைரேகை வெகு சிறப்பாக ஒருவருக்கு இருக்கும் சூழலில் மற்ற எந்தச் சோதிடப் பலனும் பலிக்குமா? பலிக்காதா?

10.இப்போது நாடி சோதிடம் நாட்டில் புகழ்பெற்று வருகிறது. பெருவிரல் கைரேகை கொடுங்கள் நாடி சோதிடம் சொல்லுகிறோம் என்று ஒரு கூட்டம் நாட்டில் நடமாடிக் கொண்டிருக்கிறது. வேறு எந்த சோதிடத்தையும் விட இந்த நாடிச் சோதிடம்தாம் ஆதியானதாம்; உண்மையானதாம். ஒவ்வொருவருக்கும் ஓர் ஓலைச்சுவடி கண்டிப்பாக இருக்குமாம். இது எந்த அளவுக்கு உண்மை? நாடி சோதிடம் எல்லாவற்றையும் மிஞ்சியதா? அதில் உள்ள பலன்தான் உண்மை என்றால், மேலே சொன்ன பல சோதிடப் பலன்களின் நிலை என்ன?
11.இத்தனையும் போகட்டும். யார் யாரிடமோ போய் பரிகாரம் செய்கிறார்கள், முடிகயிறு கட்டுகிறார்கள், மந்திரித்துக் கொள்கிறார்கள், அருள் வாக்கு கேட்கிறார்கள், நவரத்தினக்கல் அணிகிறார்கள், வீட்டு யாகம் செய்கிறார்கள், மனையடி (வாஸ்த்து) சாத்திரம் பார்த்து வீட்டை மாற்றி அமைக்கிறார்கள், கோமியம் ஊற்றி வீட்டைக் கழுவுகிறார்கள், பசுமாட்டை வீட்டுக்குள் விடுகிறார்கள், சத்திமிகுந்த ஊதுவத்தி கொளுத்துகிறார்கள், மகா யோகம் நிறைந்த எண்ணெயில் விளக்கு ஏற்றுகிறார்கள், மூலிகை கலந்து செய்த திரியைப் பயன்படுத்துகிறார்கள், இன்னும் ஆயிரமாயிரம் பூசைகள், அருச்சனைகள், வேண்டுதல்கள், காணிக்கைகள், தொழுகைகள், தியானங்கள், விரதங்கள், பலிபூசைகள் என்று, சொல்லி மாளாத அளவுக்கு என்னென்னவோ; ஏதேதோ; எப்படி எப்படியோ செய்கிறார்கள் - நம்புகிறார்கள்.

இத்தனை இருக்க..
இவற்றில் எதுதான் உண்மை?
இவற்றில் எதுதான் பலிக்கும்?
இவற்றில் எதைத்தான் நம்புவது?

தெரியாதவன் - அறியாதவன் - புரியாதவன் கேட்கிறேன்... என்னைப் போல் பலரும் கேட்கலாம்.. அல்லது வாய்திறந்து கேட்பதற்கே தயங்கிக் கொண்டிருக்கலாம்..! 

தெரிந்தவர்கள் - அறிந்தவர்கள் - புரிந்தவர்கள் அருள்கூர்ந்து தெளிவு சொல்வார்களா?

Thursday, March 11, 2010

நித்தியானந்தா: காவி உடையில் ஒரு போலி


காவி அணிந்த இளம் துறவி நித்தியானந்தா கடைசியில் தானும் ஒரு போலிதான் என்று நிரூபித்துவிட்டார்!

வாழுங் கலை கற்பித்த இவர் ஓர் உண்மைத் துறவியாக வாழுங் கலையைக் கற்றுக் கொள்ளாமல் உலக இந்துக்களுக்கு மற்றுமோர் அவமானச் சின்னமாக நிலைத்துவிட்டார்.

திரைப்பட நடிகை ஒருத்தியோடு இவர் இருந்த அந்தரங்கக் காட்சிகள் இன்று அகில உலகக் காட்சிகளாகிவிட்டன.

இந்தியாவில் பல பெரிய நகரங்களிலும் மலேசியா, சிங்கப்பூர் உட்பட உலகின் பல நாடுகளில் நித்தியானத்தாவுக்குக் கிளைகள் உள்ளன. (விரிவாக)
  • நன்றி: விடுதலைமலேசியாஇன்று

Monday, March 01, 2010

செம்மொழி மாநாட்டுக்கு முன் செய்யத்தக்கன


எதிர்வரும் சூன் திங்களில் தமிழகம், கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடக்கவிருக்கிறது. இம்மாநாட்டின் வழியாக தமிழுக்கு எத்தகைய நன்மைகள் நடக்கும் என்பது தெரியவில்லை. இம்மாநாட்டின் மூலமாகத் தமிழ்மொழிக்கு ஏற்படவுள்ள ஆக்கங்கள் ஒருபுறம் இருக்கட்டும். அதற்கு முன்பாக தமிழுக்கு உருப்படியாகச் செய்ய வேண்டிய பணிகள் பல இருக்கின்றன. மாநாடு நடத்த முண்டியடிப்பவர்கள் இந்த உருப்படிகளை முதலில் செய்ய வேண்டும். உண்மையிலேயே தமிழுக்கு ஆக்கமாகச் எதையேனும் செய்ய விரும்புபவர்கள் உடனடியாக கீழே உள்ள 10 பணிகளை செய்து முடிப்பதே காலத்தால் தமிழுக்குச் செய்யும் அரும்பணியாக அமையும். -சுப.ந


********************************

அடுத்த கொண்டாட்டத்துக்குத் தயாராகிவிட்டது தமிழகம்! கோவை மாநகரில் ஜூன் மாதம் நான்கு நாட்களும் தமிழ் மழை பொழியப்போகிறது. ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு நடத்துவதற்குத்தான் முதல்வர் கருணாநிதி முதலில் திட்டமிட்டார். அது முடியாமல் போனதால், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டைக் கொண்டாடி முடிப்பதில் தீவிரமாகிவிட்டார். அரசியல் எல்லைகளைக் கடந்து சிந்திக்கும் தமிழறிஞர்கள் மத்தியில், இதுபோன்ற கொண்டாட்டங்களுக்கு முக்கியத்துவம் கிடைப்பதில்லை.

'தமிழ் வாழ்க வென்பதிலும் தமிழ் வாழாது
தமிழ்ப் பெயரை வைப்பதிலும் தமிழ் வாழாது
குமிழ்ச் சிரிப்பைப் பெருஞ் சிரிப்பாய் அவிழ்த்துக் கொட்டும்
கொக்கரிப்புப் பேச்சாலுந் தமிழ் வாழாதே!
அமிழ்கின்ற நெஞ்செல்லாம்; குருதியெல்லாம்
ஆர்த்தெழும் உள் உணர்வெல்லாம் குளிருமாறே
இமிழ் கடல் சூழ் உலகமெல்லாம் விழாக் கொண்டாடி
ஏற்றமிகச் செய்வதிலும் தமிழ் வாழாதே!'

என்று பாடினார் பாவலரேறு பெருஞ்சித்திரனார். எத்தனையோ நூற்றாண்டுகளைக் கடந்தும் வந்திருக்கிற தமிழ், இன்னும் தொய்வில்லாமல் தொடர வேண்டுமானால், ஆக்கபூர்வமாகச் சில காரியங்களில் தமிழக அரசு கவனம் செலுத்தியாக வேண்டும்.

1. தமிழுக்கு ஆசனம்!

இன்று பள்ளிகளில் தமிழ் முழுமையான பயிற்றுமொழியாக இல்லை. தமிழைப் படிக்காமல் ஒருவன் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்து உயர் கல்லூரிப் படிப்பை முடித்து அரசு வேலையை வாங்கிவிட முடியும். வேறு எந்த மாநிலத்திலும் அவர்களின் மாநில மொழியைப் படிக்காமல் இருக்க முடியாது. ஆனால், தமிழகத்தில்தான் ஆங்கிலம் பாட மொழியாகவும் இரண்டாவது மொழியாக ஹிந்தி, பிரெஞ்சு, தெலுங்கு, மலையாளம் ஆகியவற்றுடன் தமிழும் இருக்கும் நிலை தொடர்கிறது. விரும்பினால் தமிழைத் தேர்ந்தெடுக்கலாம். ஆனால், கட்டாயம் இல்லை என்ற நிலையில், யார் தமிழைச் சீந்துவார்? உயர் கல்வியைத் தமிழில் படிக்கப் புத்தகங்கள் இல்லை என்று மாணவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால், போதிய மாணவர்கள் முன்வராதபோது புத்தகம் தயாரித்து என்ன செய்ய என்று கேட்கிறது அரசு. இவர்களது கண்ணாமூச்சியில் தமிழ் மூச்சுத் திணருகிறது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அனைத்துப் பாடப் புத்தகங்களும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டன. அவற்றில் பல புத்தகங்களை அடுத்தடுத்து அச்சடிக்கவே இல்லை. அதேபோல் நீதிமன்றத்தில், கோயில்களில் தமிழ் கொலுவிருக்கவில்லை. இப்படி அனைத்து நிலைகளிலும் தமிழ் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது!

2. தெருவில் தமிழ் இல்லை!

'தமிழ் நாட்டுத் தெருவில் தமிழ்தான் இல்லை' என்று கவலைப்பட்டார் பாரதிதாசன். வணிக நிறுவனங்கள், கடைகள், தொழிற்சாலைகள் எனப் பெரியவை அனைத்தும் ஆங்கிலத்தில் தனது பெயரை அறிவிக்கின்றன. அதைத் தாண்டினால் தேநீர்க் கடைகள் 'ஸ்நாக்ஸ் ஷாப்'களாக மட்டுமே தங்களை அடையாளப்படுத்தி வருகின்றன. அனைத்துக் கடைகளிலும் தமிழில்தான் பெயர்ப் பலகைவைக்க வேண்டும் என்று உத்தரவு இருக்கிறது. ஆனாலும், கடைப்பிடிப்பார் இல்லை. வணிகர் சங்கங்களும் இந்தக் கொள்கையை ஆதரித்த பிறகும் ஆங்கில மணம் குறையவில்லை!

3. தமிழைத் தகுதி ஆக்க வேண்டும்!

தமிழை ஒரு பாடமாக எடுத்துப் படித்தவர்களைத்தான் பத்து, பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றவர்களாக மாநிலத்தில் முதலாவதாகத் தேர்ந்தெடுப்பார்கள். அவர்களுக்கு நிதி உதவி மற்றும் சலுகை தரப்படும். அது போன்ற ஏற்பாடுகள் கல்வியில் வேலைவாய்ப்பில் வழங்கப்பட வேண்டும். எந்தப் பட்டப் படிப்பாக இருந்தாலும், தமிழை ஒரு பாடமாகப் படித்தாக வேண்டும். தமிழ் வழி படித்தவர்களுக்குச் சிறப்பு இடஒதுக்கீடு வழங்க வேண்டும். தமிழ் வழி பயிற்றுவிக்கும் பள்ளி, கல்லூரிகளுக்கு அரசாங்கத்தின் மற்ற சலுகைகள் கிடைப்பதில் முன்னுரிமை வழங்க வேண்டும். பொதுமக்களை ஈர்க்கும்வகையில் தமிழை வலுவாக்க வேண்டும்!

4. முழுமையான வரலாறு என்ன?

தமிழ், தமிழன், தமிழ்நாடு மூன்றுக்கும் முழுமையான அதிகாரப்பூர்வ வரலாறு இன்று வரை இல்லை. தமிழ் வளர்ச்சித் துறை, சென்னைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை இணைந்து பல்லாண்டுகளாக தமிழ்நாட்டு வரலாற்றை எழுதி வருகிறார்கள். இதுவரை ஐந்து தொகுதிகள்தான் வந்துள்ளன. இந்த வேகத்தில் போனால், தமிழக வரலாறு வந்து முடிய பல ஆண்டுகள் ஆகும். அதேபோல், தமிழில் உள்ள சொற்கள் அனைத்துக்கும் வேர்ச் சொல் என்ன என்பதைக் கண்டுபிடித்து 'செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி' தொகுக்கும் வேலை கருணாநிதி முதல்வராக இருந்தபோது 1974-ல் தொடங்கப்பட்டது. அதுவும் இன்று வரை முழுதும் வெளிவரவில்லை. தொல்பொருள் ஆய்வுத் துறைக்கு நாகசாமி, நடனகாசிநாதனுக்குப் பிறகு ஆர்வமானவர் அமர்த்தப்படவில்லை. தமிழ் வளர்ச்சித் துறைச் செயலாளர் பதவியில் அவ்வை நடராஜனுக்குப் பிறகு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்தான் அமர்த்தப்பட்டார்கள். அருங்காட்சியகம் 'பிடிக்காதவரை' நியமிக்கும் இடமாக ஆகிவிட்டது. தமிழுக்கு ஆக்கப்பூர்வமான வேலைகள் பார்க்கும் நிறுவனங்களை முறையாக கவனிக்க வெண்டும்!

5. செம்மொழி ஆகி என்ன பயன்?

தமிழுக்குச் செம்மொழித் தகுதி முதல்வர் கருணாநிதியின் முயற்சியால் கிடைத்தது. மத்திய அரசு அதனை மனமுவந்து செய்துகொடுத்தது. தமிழ் வளர்ச்சித் துறை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தமிழ்ப் பல்கலைக்கழகம், தொல்பொருள் ஆய்வுத் துறை, அகரமுதலித் திட்ட இயக்ககம், திராவிட மொழிப் பல்கலைக்கழகம், ஆசியவியல் நிறுவனம் போன்றவை செய்யாத எதை இந்த நிறுவனம் செய்ய இருக்கிறது என்று அறிவிக்கப்படவில்லை. கடந்த 20 ஆண்டுகளில் இந்த நிறுவனங்கள் 100 கோடி ரூபாயைச் செலவு செய்துள்ளன. அவர்கள்விட்ட எதை இது செய்யப்போகிறது? கருணாநிதி பாடல் குறுந்தகடும், தொல்காப்பியத்தை பாகவதர்களைவைத்துப் பாடவைப்பதும் இதன் வேலையாக இருந்தால், மக்களுக்கு என்ன பயன்? ஏற்கெனவே, தொல்பொருள் ஆய்வுத் துறை இருக்கும்போது, அதே காரியம் செய்பவர்களுக்கு செம்மொழி நிறுவனம் பணம் ஒதுக்க வேண்டுமா என்ற கேள்வியும் எழுகிறது. இதற்கான விதிமுறைகளை வகுக்கக்கூட மத்திய அரசு தடையாக இருந்துள்ள நிலைமைதான் நடந்துள்ளது!

6. தமிழ்ப் பள்ளிகள்!

ஒவ்வொரு நாடும் தங்களது மொழியை வளர்க்கச் சிறப்புப் பள்ளிகளை நடத்திவருகின்றன. அதுபோன்று தமிழுக்கும் அமைத்தாக வேண்டும்.அனைவரும் தமிழ் படிக்க முடியாதுதான். ஆனால், தமிழ் மொழியின் வளம், சொல்லும் திறம், இலக்கியச் செழுமை, அதில் உள்ள கற்பனை ஆகியவற்றை அனைவரும் அறிந்துகொள்ள வசதியாக, தமிழ்ப் பள்ளிகளை அரசாங்கம் அமைக்க வேண்டும். இதில் ஆர்வமுடைய அனைவரும் சேரலாம். படிக்கலாம். பட்டங்களோ, தேர்வுகளோ இல்லை என்பது மாதிரி திட்டமிடலாம். இது நம்மவர்கள் மட்டுமல்ல, தமிழ் படிக்க வேண்டும் என்று நினைக்கும் மற்ற மொழிக்காரர்களுக்கும் சொல்லித்தர வாய்ப்பாக அமையும். வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் சிலவற்றில் தமிழ் மொழி கற்பிக்கும் வகுப்புகள் நடத்தப் பட்டு வருகின்றன. ஆனால், நாம் அதைச் செய்யவில்லை!

7. அதீத கற்பனை அவசியம் இல்லை!

மத்திய ஆட்சி மொழியாக தமிழை ஆக்க வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் 15 மொழிகளை அட்டவணை மொழிகளாகச் சொல்கிறது. இந்த 15 மொழிகளையும் ஆட்சி மொழிகள் ஆக்க வேண்டும் என்பது பல நாள் கோரிக்கை. 'அனைத்து மொழிகளையும் ஆட்சி மொழியாக ஆக்கி விட்டால், அனைத்துக்கும் மூத்த மொழியான தமிழை இந்தியாவின் ஆட்சி மொழி ஆக்க வேண்டும்' என்று பலத்த கைத்தட்டலுக்கு மத்தி யில் சொல்வார்கள். ஆனால், தமிழகத்தில் இருக்கும் மத்திய அரசு அலுவலகங்களிலும் ஹிந்தியும் ஆங்கிலமும் மட்டும்தான் இருக்கிறது. ஏற்கெனவே தமிழ், ஹிந்தி, ஆங்கிலத்தில் இருந்த பெயர்ப் பலகைகளில் தற்போது தமிழ் நீக்கப்பட்டுள்ளது. மாநில எல்லைக்கு உட்பட்ட மத்திய அரசு அலுவலகங்களின் பயன்பாடுகளில் தமிழுக்குத் தரப்பட வேண்டிய இடத்தைப் பெறுவதுதான் முதன்மையானதாக இருக்க வேண்டும்!

8. உலகத்தை ஒன்றாக்கும் மொழி!

பரந்து விரிந்த இந்த பூமிப் பரப்பில் 233 நாடுகளில் தமிழன் வாழ்கிறான். இங்குள்ள 6 கோடிப் பேரைத் தாண்டி, மீதி 4 கோடிப் பேர் இருக்கிறார்கள். இலங்கை, கனடா, அமெரிக்க ஐக்கிய மாநிலம், சிங்கப்பூர், மலேசியா, தென்னாப்பிரிக்கா, சுவிஸ், பிஜி, மியான்மர் ஆகிய நாடுகளில் அதிகம் வசிக்கிறார்கள். இவர்களுக்கும் தாய்த் தமிழகத்துக்கும் அதிகளவு ஒட்டும் இல்லை... உறவும் இல்லை. அங்கும் பல அமைப்புகள் உள்ளன. இங்கும் இருக்கின்றன. இவற்றுக்கு மத்தியில் தொடர்புகள் இல்லை. சென்னையில் இருக்கும் பிரெஞ்ச் இன்ஸ்டிட்யூட், பிரிட்டனுடன் தொடர்புவைத்து இயங்கி வருகிறது. இதுபோன்று அனைத்து நாட்டுத் தமிழர்களையும் இணைக்கும் ஒருங்கிணைப்பு மையம் அமைக்க வேண்டும்!

9. அனைத்து அறிவும் ஒரே இடத்தில்!

100 கோடி செலவில் மிகப் பிரமாண்டமான நூலகம் சென்னை கோட்டூர்புரத்தில் தயாராகி வருகிறது. மிகப் பெரிய முயற்சி. ஆவணக் காப்பகம், கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம், சென்னை இலக்கிய சங்கம், கன்னிமரா நூலகம் என்று பல்வேறு காலகட்டங்களில் இது போல் ஆரம்பிக்கப்பட்ட அமைப்புகள் சென்னையில் பிரிந்து பிரிந்துகிடக்கின்றன. இவையும் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் பிரமாண்டமானவைதான். அவற்றையும் தனியாகக் கவனிப்பாரற்று ஒதுக்கி விடாமல், இதனுடன் இணைத்தால் உலகளவில் குறிப்பிடத்தக்க நூலகமாக கோட்டூர்புரத்தில் அமைவது பெருமைக்குரியதாகும். தமிழ் மொழி தனது செல்வங்கள் அத்தனையையும் ஒரே இடத்தில் வைத்திருக்கிறது என்ற பெயர் கம்பீரமாக எழும்!

10.கண் கலங்கும் கணினித் தமிழ்!

ஓலைச்சுவடி காலத்து தமிழ் இன்றைய கணினி யுகத்திலும் அதையும் உள்வாங்கி வளர்ந்துகொண்டு இருக் கிறது. ஆனால், அதன் புத்தெழுச்சிக்கும் இருப்புக்கும் இன்னும் செய்ய வேண்டியவை எவ்வளவோ உள்ளன. ஆங்கிலத்தில் சொன்னால் குரலைப் பதிந்துகொண்டு அதை எழுத்தாக மாற்றிக்கொள்ளும் வல்லமை கணிணியில் வந்து விட்டது. கணிணியை வைத்துக்கொண்டு ஆங்கிலத் தில் அடைந்துள்ள எல்லைகளை இன்னும் தமிழ் நெருங்கவில்லை. யூனிகோட் குறியீட்டு முறை தான் அனைத்து உலக மொழிகளுக்குமான பொதுவான குறியீட்டு முறை. ஒவ்வொரு மென் பொருள் தயாரிப்பாளரும் வெவ்வேறு குறியீட்டு முறையைத் தமிழில் பயன்படுத்துவதால் ஒருவர் சேகரித்த தகவல் இன்னொருவரால் படிக்க முடியவில்லை. இந்த அடிப்படையில் தமிழ் மொழிக்கு 313 எழுத்துக் குறியீடுகள் தேவை. ஆனால், யூனிகோட் கன்சார்டியம் 128 இடங்களை தான் தந்துள்ளது. எனவே யூனிகோடில் தமிழுக்கு முழுமையான இடஒதுக்கீடு வழங்க வேண்டும். தமிழில் கீ-போர்டு இன்னும் வரவில்லை. எனவே, கணினியைப் பொறுத்தவரை அடிப்படையில் இருந்து ஆரம்பிக்க வேண்டியுள்ளது.

'தமிழ் தழைக்க இதுபோன்ற ஆக்கப்பூர்வமான வேலைகளைச் செய்துவிட்டு வெற்றி மாநாடாகக் கொண்டாடுவதுதான் சிறப்பானதாக இருக்கும்' என்பது பலதரப்பட்டவர் கருத்து!


  • நன்றி: ஆனந்த விகடன்

Blog Widget by LinkWithin