Thursday, April 22, 2010

தமிழர்கள் உடனே விழிப்புற வேண்டியது எதில்?

மலேசியத் தமிழர்கள் இன்று பல துறைகளில் பின்தங்கி உள்ளனர். இந்தக் கருத்து உண்மையா?

கல்வி, பொருளாதாரம் போன்றவற்றில் உடன் வாழுகின்ற மலாய், சீன இனத்தாரைவிட மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனர் என்பதை மறுக்க முடியுமா?

அரசியல் விழிப்புணர்வு தமிழர்களிடையே எந்த அளவில் இருக்கிறது? இதிலாவது முன்னணியில் இருக்கிறார்களா?

இவைதாம் போகட்டும். சிறுபான்மை இனமாக இருக்கின்ற தமிழர்கள் தங்கள் சொந்த மொழி, இன, சமத்திலாவது முழு விழிப்புணர்வு பெற்றிருப்பது முக்கியம் அல்லவா? அப்படி இருக்கிறார்களா?

மொழி, இன, சமய, பண்பாட்டுக், கலை, இலக்கியங்களைக் பேணுவதில் நாட்டாத்தோடும் விழிப்போடும் இருக்கிறார்களா?
இந்த நிலைமை ஏன்? இதற்கு என்ன காரணம்? யார் காரணம்? இதற்குத் தீர்வு என்ன? எப்போது?

இவை பற்றியெல்லாம் சிந்திப்பதற்கு ஒரு களமாக, ‘சுழல் பட்டிமன்றம்’ நடைபெறவுள்ளது.

ஆறு பேச்சாளர்கள் சுழல் முறையில் பேசவுள்ள இந்தச் சுழல் பட்டிமன்றத்தின் தலைப்பு இதுதான்:-

மலேசியத் தமிழர்கள் உடனடியாக விழிப்புற வேண்டியது எதில்?
மொழி – இனம் – கல்வி – அரசியல் – பொருளாதாரம் - சமயம்


பினாங்கு மாநிலத் தமிழர் திருநாள் விழாவில் இந்தச் ‘சுழல் பட்டிமன்றம்’ பின்வரும் வகையில் நடைபெறும்.

நாள்:-24-4-2010(காரிக்கிழமை)
நேரம்:- இரவு மணி 7.30
இடம்:-எஃப் அரங்கம், 5ஆவது மாடி, கொம்தார் கட்டடம், பினாங்கு
தலைமை:-தமிழ்த்திரு மாருதி மகாலிங்கம்
முன்னிலை:-டத்தோ அருணாசலம்
நடுவர்:-தமிழ்த்திரு.க.முருகையனார்


பேச்சாளர்கள்:-
சுப.நற்குணன், கோவி.சந்திரன், சுப.நவராஜன், இராம.சரவணன், இராம.செல்வஜோதி, கி.விக்கினேசு

இலவயமாக நடைபெறும் இந்தச் சுழல் பட்டிமன்றத்தைக் கண்டுகளிக்க அனைவரும் அழைக்கப்படுகிறார்கள்.

மேல்விளக்கம் பெற:- செந்தமிழ்ச் செம்மல் சோ.மருதமுத்து (016-4598760)

No comments:

Post a Comment

வணக்கம் திருத்தமிழ் அன்பர்களே. உங்கள் எண்ணங்களையும் ஏடல்களையும் இங்கே மறுமொழியாக இட்டுச்செல்லுங்கள். நன்றி.
அன்புடன்;
திருத்தமிழ் ஊழியன் சுப.நற்குணன்