Thursday, March 11, 2010

நித்தியானந்தா: காவி உடையில் ஒரு போலி


காவி அணிந்த இளம் துறவி நித்தியானந்தா கடைசியில் தானும் ஒரு போலிதான் என்று நிரூபித்துவிட்டார்!

வாழுங் கலை கற்பித்த இவர் ஓர் உண்மைத் துறவியாக வாழுங் கலையைக் கற்றுக் கொள்ளாமல் உலக இந்துக்களுக்கு மற்றுமோர் அவமானச் சின்னமாக நிலைத்துவிட்டார்.

திரைப்பட நடிகை ஒருத்தியோடு இவர் இருந்த அந்தரங்கக் காட்சிகள் இன்று அகில உலகக் காட்சிகளாகிவிட்டன.

இந்தியாவில் பல பெரிய நகரங்களிலும் மலேசியா, சிங்கப்பூர் உட்பட உலகின் பல நாடுகளில் நித்தியானத்தாவுக்குக் கிளைகள் உள்ளன. (விரிவாக)
  • நன்றி: விடுதலைமலேசியாஇன்று

3 comments:

  1. தாலி கொடுக்கும் போலியானந்தா இந்த பட்டம் சரியாய்
    இருக்குமா ???????

    ReplyDelete
  2. நித்யானந்தர் தான் பிரம்மச்சாரியாகத்தான் இருக்கப்போகிறேன். நான் பெண்களுடன் உடலுறவு கொள்ளமாட்டேன் என்று இந்திய அரசாங்கத்திடமோ கருணாநிதி நடத்தும் தமிழ்நாட்டு அரசாஙக்த்திடமோ எழுதிக்கொடுத்தாரா? இல்லை. அவரிடம் கோரப்பட்டதா? இல்லை. ஆன்மீகத்தில் உள்ளவர் பெண்ணுறவு இல்லாதவராக இருக்கவேண்டும் என்று இந்து மதம் கோருகிறதா? இல்லை. ஆனால், நித்யானந்தரின் சீடர்கள், பக்தர்கள் புண்பட்டிருக்கிறார்கள். ஆகவே அவர் அவர்களிடம் தான் ஒரு பிரம்மச்சாரி என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறார். ஆகவே அவர் ஒரு ஏமாற்றுப் பேர்வழி என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை. ஆனால், ஒரு பெண்ணுடன் உறவு கொண்டதற்காக,அரசாங்கத்துக்கு அவரை கைது செய்யவோ, அவரை குற்றவாளியாக காட்ட சன் குழுமத்துக்கோ உரிமை உள்ளதா? (நன்றி திண்ணை சின்னக்கருப்பன்)

    ReplyDelete
  3. பல வகையில் சீர்குலைந்து வரும் நமது இளைஞர்களைத் திருத்த ஆன்மீகம் துணை புரியும் என்ற நம்பிக்கையில் இவரை வழிகாட்டியாக நினைத்த சில இளைஞர்கள் இன்று யாராலும் ஒழுக்கமாக வாழ முடியாது என்று எண்ணுமாறு செய்துவிட்டார்...... எடுத்த முயற்சிகள் ஒரு நொடியில் மறைந்து போனது வேதனைக்குறியது. இடைநிலைப்பள்ளியில் பாலியல் குற்றச்சாட்டில் ஈடுபடும் நம் இந்திய இளைஞர்களை எப்படி திருத்துவது? வழி தெரியாமல் தவிக்கிறேன் இங்கு ஓர் ஆசிரியர்....

    ReplyDelete

வணக்கம் திருத்தமிழ் அன்பர்களே. உங்கள் எண்ணங்களையும் ஏடல்களையும் இங்கே மறுமொழியாக இட்டுச்செல்லுங்கள். நன்றி.
அன்புடன்;
திருத்தமிழ் ஊழியன் சுப.நற்குணன்