Monday, May 25, 2009

தலைவர் எங்கே?: பொய்ச் செய்தி திட்டமிட்டு பரப்பப்படுகிறதா?

மீண்டும் மீண்டும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை பற்றிய பல குழப்பச் செய்திகளை தொடர்ந்து விதைப்பதில் வெற்றி கண்டுள்ளது சிங்கள இனவாதம். அதற்கு துணை போவது ஊடக (மீடியா) பயங்கரவாதம்.

என்ன நடந்தது என்ற உண்மையைச் சொல்ல யாராவது எத்தனிக்க முயலும் போதெல்லாம் முன்னுக்குப் பின் முரணாக அறிக்கைகள் விடுத்து மக்கள் உணர்வுகளோடு விளையாடுவதும், போராட்டத்தை நீர்த்து விடச் செய்வதுமான வேலை நடந்து வருகிறது.

இலங்கையின் வல்லமை அத்தனை பெரிதா… அல்லது புலிகள் அந்த அளவு இந்த உலகை அச்சுறுத்திவிட்டார்களா… பார்ப்போம்.

இன்னும் ஒரு 24 மணிநேரம் பொறுத்திருந்து பதிவு செய்வோம். ஒரு தகவல் என்ற அடிப்படையில் மட்டுமே இப்போது பின்வரும் செய்தியைத் தருகிறோம். அதாவது... (மேலும் படிக்க)

1 comment:

  1. Anonymous26 May, 2009

    18/5/2009 - இல் இருந்து
    பிரபாகரன் இருந்தாரா இறந்தாரா ?
    இதுவே இன்று உலக அலசல்.....

    ஆனால்,
    பிரபாகரன் நமது முக்கியம் அல்ல.
    பத்து விரலில் ஏதோ ஒரு விரல் ..
    அவர் ஒரு செயலுக்கு காரணம் மட்டுமே.
    கர்த்தா அல்ல....

    கர்த்தா எனப்படுபவன் இறைவன் ..
    செயல் பிரபாகரன் உடையது ,
    செயலின் முடிவு இறைவனுடையது .
    செயல் தோற்றுவிட்டது என்று
    யாருக்கும் சொல்ல இங்கு உரிமை இல்லை.
    ஒரு செயலின் முடிவு .....
    அதத்குரிய பலாபலனை கொண்டு வந்தே தீரும்.

    இதனால் சோர்ந்து, துவண்டு , வருந்தி ,
    யாரும் ஆழ்ந்த துயரதிட்குள் போக கூடாது ...
    குதூகலிக்க வேண்டும் உள்ளம்...

    பிரபாகரன் இருந்தால் என்ன இறந்தால் என்ன ...
    அவனது ஒவ்வொரு அணுவும் ஒவ்வொரு தமிழனையும் பீடித்து
    ஒவ்வொருவனையும் பிரபாகரனாகவே ஆக்கும் .
    அது,
    தனி ஈழம் என்றே முழக்கம் இடும் .
    தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்று குரல் கொடுப்பது
    அவனாக இருக்க முடியுமே தவிர ,
    அது அவரவராக இருக்க முடியாது.
    க்ளோனிங் என்பது உலக சத்யமெனில்
    ஒவ்வொரு அணுவும் உயிர் பெறும் என்பதும் உலக சத்யம் தானே....

    யானை இருந்தாலும் ஆயிரம் பொன் , இறந்தாலும் ஆயிரம் பொன்.....
    பிரபாகரன் இருந்தாலும் ஆயிரம் பலம்.... இறந்தாலும் ஆயிரம் பலம்.

    உலகியல் மக்கள் பிரபாகரனை தலைவன் என்கின்றனர்
    ஆன்மீக வாதிகளோ ,
    அவன் செவ்வேல் முருகனே என்கின்றனர்.
    அவன் தேவருள் வைக்கப்படுவான் என்கின்றனர்.

    எனவே , உலக தமிழ் மக்களும் இலங்கை தமிழர்களும்
    இந்த பிரபாகரனின் ஆயுதப் போராட்டத்தை .....
    காந்தியின் ஆன்மீகப் போராட்டமாக ஆக்க வேண்டும்.

    தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் ........
    அந்த உச்சரிப்பு தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும்

    1993 - ல் எரிற்றியாவை எதியோபியாவில் இருந்து விடுவித்ததைப் போன்று...
    அல்லது
    செர்பியாவிடம் இருந்து கொசோவோவை பிரித்து
    ஐநா தமது பாதுகாப்பில் நிர்வகித்தது போன்று .
    அல்லது
    போஸ்னியா - ஹெர்செகோவினா சுயாட்சி போன்று ...
    தமிழீழம் விதைக்கப்பட வேண்டும்..

    இவ்விடயத்தில் உலகத் தமிழ் மக்கள் சத்தியமாக செயல் பட வேண்டும்....

    காலம் கோலத்தை மாற்றிவிட்டது...
    அது நமக்கு சாதகம் ...
    உலகம் .....
    தமிழரின் உலகளாவிய எழுச்சியைக் கண்டு விட்டது...
    உலகெங்கும் ஈழப் படுகொலையை எதிர்த்து எழுந்த அலைகள் ...
    என்றுமே பசுமை மிக்கது .....

    இது,
    இளைப்பாறும் நேரமில்லை...
    நன்கு துயிலும் தருணமில்லை...

    இதுவே காலம் !
    மீண்டும் ஒரு காந்தியம் ....
    அடக்கு முறைகளுக்கும் இடையிலேயும் ...
    புவியெங்கும் எழுந்திடல் வேண்டும்..
    ஒவ்வொரு அரங்கிலும் ஈழர் தம் கோரிக்கைகள் நியாயப்படுத்தப்பட வேண்டும்..

    "ஈழத்தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் "
    அதனை உலகெங்கும் ஒலிக்கச் செய்திட வேண்டும் .....

    ஓம் சக்தி !

    ReplyDelete

வணக்கம் திருத்தமிழ் அன்பர்களே. உங்கள் எண்ணங்களையும் ஏடல்களையும் இங்கே மறுமொழியாக இட்டுச்செல்லுங்கள். நன்றி.
அன்புடன்;
திருத்தமிழ் ஊழியன் சுப.நற்குணன்