Friday, September 21, 2012

STPM தமிழ்மொழி - இலக்கியப் பாடநூல் வந்துவிட்டது




இவ்வாண்டில் எசுடிபிஎம் (STPM) தேர்வில் தமிழ்மொழி - தமிழ் இலக்கியம் எடுக்கும் மாணவர்கள் பாடநூல்கள் இல்லாமல் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர். அவர்களுக்கு இஃது ஒரு நல்ல செய்தியாகும்.

தமிழ் தன் தாய்மொழி;
நான் தமிழ்ப்பள்ளியில் படித்தேன்;
தமிழ்மொழி மீது கொண்ட பற்றுதல்;
தமிழ் படித்தால் கண்டிப்பாகச் ‘சோறு போடும்’;
தமிழ் படித்து வாழ்க்கையில் முன்னேற முடியும்..

போன்ற காரணங்களின் அடிப்படையில் எசுபிஎம், எசுடிபிஎம் போன்ற அரசாங்கத் தேர்வுகளில் நமது மாணவர்கள் தமிழ்மொழி, தமிழ் இலக்கியம் ஆகிய தேர்வுகளை எழுதுகின்றனர். இவர்களின் தாய்மொழி உணர்வும், தமிழ்மொழிப் பற்றுதலும், தமிழ்க்கல்வியின் மீதுள்ள நம்பிக்கையும் பாராட்டத்தக்கது.

எனினும், மிகுந்த ஆர்வத்தோடு தமிழ்மொழி, தமிழ் இலக்கியப் பாடங்களைத் தேர்வில் எடுக்கும் மாணவர்களைப் பல்வேறு நெருக்கடிகளும் சிக்கல்களும் சூழ்ந்துகொள்கின்றன. இதனால், மாணவர்கள் பெரிதும் மன உலைச்சளுக்கு ஆளாகின்றனர்.

அப்படிப்பட்ட நெருக்கடிகளில் ஒன்றுதான், தமிழ் இலக்கியப் பாட நூல்கள் இல்லாமை. 2012 இறுதி காலாண்டில் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு பாடநூல்கள் இல்லை என்றால் அதனை மிக எளிமையாக எண்ணிவிட முடியாது. எசுடிபிஎம் தமிழ் இலக்கியப் பாடநூல் இல்லாத குறையை நீக்குவதற்கு யாருமே அல்லது எந்தத் தரப்பினருமே அக்கறை எடுத்துக்கொள்ளவில்லை என்பதை நினைத்தால் மனம் வேதனையாக உள்ளது. அதைவிட பெரிய வேதனையும் வருத்தமும் தமிழ் இலக்கியத்தைத் தேர்வுப்பாடமாக எடுக்கும் மாணவர்களை நினைத்தால் நமக்கு ஏற்படுகிறது.

எனினும், கடந்த ஏழெட்டு மாதங்களாகப் பாடநூல்கள் இல்லாமல் மன உலைச்சளுக்கு ஆளாகிப் போன எசுடிபிஎம் மாணவர்களுக்கு இப்பொழுது ஒரு நற்செய்தி வந்திருக்கிறது.

முனைவர் குமரன்
இவ்வாண்டு எசுடிபிஎம் தமிழ்மொழி இலக்கியத்திற்கான முதல் பருவ பாடநூல் அணியமாகிவிட்டது. மலேசியத் தமிழாராய்ச்சி நிறுவனம் இந்தப் பாடநூலை வெளியீடு செய்துள்ளது.

எசுடிபிஎம் தேர்வில் தமிழ்மொழி - தமிழ் இலக்கியம் எழுதவுள்ள மாணவர்களும் இப்பாட ஆசிரியர்களும்  இந்த நூலை விரைந்து பெற்றுக்கொள்ளலாம்.

முதல் பருவத்திற்கான இந்நூலின் விலை RM10.00 (பத்து வெள்ளி மட்டுமே)

நூலைப் பெற விரும்புவோர் கீழ்க்காணும் அதிகாரிகளைத் தொடர்புகொள்ளலாம்.

1.திரு.அ.இராமன் (தமிழ்மொழித் துணை இயக்குநர், சிலாங்கூர் மாநிலம்) 019-2307765

2.திரு.முனுசாமி (ஆசிரியர், சிலாங்கூர் மாநிலம்) 016-2084250

3.திரு.இரா.விஜயன் (தமிழ்மொழித் துணை இயக்குநர், சொகூர் மாநிலம்) 012-7552107

4.திரு.மா.பூபாலன் (தமிழ்மொழித் துணை இயக்குநர், பகாங் மாநிலம்) 09-5715700

5.திரு.தமிழ்ச்செல்வம் (தமிழ்மொழித் துணை இயக்குநர், கெடா மாநிலம்) 019-4807012

6.திரு.நாராயனராவ் (ஆசிரியர், கெடா மாநிலம்) 012-4075529

7.திரு.சபா.கணேசு (ஆசிரியர், பேரா மாநிலம்) 012-5615115

8.திரு.கார்த்திகேசு (ஆசிரியர், பேரா மாநிலம்) 012-4673141

9.திரு.இரா.அவடயான் (ஆசிரியர், நெகிரி செம்பிலாம் மாநிலம்) 019-6456349

10.முனைவர் குமரன் சுப்பிரமணியம் 012-3123753

11.முனைவர் கிருஷ்ணன் மணியம் 016-3164801

12.முனைவர் இரா.மேகனதாஸ் 012-2806345

மேற்கண்ட விவரங்களை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் செயலாளர் இணைப்பேராசிரியர் முனைவர் குமரன் சுப்பிரமணியம் வெளியிடுள்ள ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

@சுப.நற்குணன், திருத்தமிழ்

No comments:

Post a Comment

வணக்கம் திருத்தமிழ் அன்பர்களே. உங்கள் எண்ணங்களையும் ஏடல்களையும் இங்கே மறுமொழியாக இட்டுச்செல்லுங்கள். நன்றி.
அன்புடன்;
திருத்தமிழ் ஊழியன் சுப.நற்குணன்