tag:blogger.com,1999:blog-12894539.post8142091663533889167..comments2024-01-09T22:36:03.298+08:00Comments on திருத்தமிழ்: நாட்டுப்புறப் பாடல்(2) – சிறுவர் பாட்டுசுப.நற்குணன்,மலேசியா.http://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-12894539.post-87397464099404645252008-12-07T18:30:00.000+08:002008-12-07T18:30:00.000+08:00திருத்தமிழ் அன்பர் பழமைபேசி,இப்படிப்பட்ட செய்திகளை...திருத்தமிழ் அன்பர் பழமைபேசி,<BR/><BR/>இப்படிப்பட்ட செய்திகளை இதைவிட மிக மிகச் சிறப்பாக எழுதி வரும் உங்கள் பாராட்டு மகிழ்வை அளிக்கிறது. நன்றி நண்பரே!<BR/><BR/>*****<BR/><BR/>திருத்தமிழ் அன்பர் சித்தன்,<BR/><BR/>என் சிறுகதையைப் பாராட்டியமைக்கு நன்றி. <BR/><BR/>//வேற்று மொழியைக் கலந்தால்தான் நிதர்சனத்தை வெளிக்கொணர முடியும் என்ற சிலரின் எண்ணங்களை, தாங்கள் உடைத்து தமிழுக்கு பெருமை சேர்த்திருக்கிறீர்கள்.//<BR/><BR/>கதையில் நடப்பியல்(யாதார்த்தம்) உணர்ச்சி இருக்க வேண்டுமானால், பிறமொழிக் கலப்பு தேவை என எழுத்தாளர் பலர் வாதிடுகின்றனர்.<BR/><BR/>என் கதையில்கூட நான் எழுதாத சில பிறமொழிச் சொற்கள் கலக்கப்பட்டுள்ளன. அதுவும் இந்த நடப்பியல் கருதிதான் திருத்தியுள்ளனர்.<BR/><BR/>நல்ல தமிழில் உணர்வுகளைப் பரிமாறிக்கொள்பவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள்..<BR/><BR/>நல்லவர்கள் நிறைந்த நல்லதமிழ் உலகம் ஒன்று உள்ளது..<BR/><BR/>என்பன போன்ற விவரங்கள் சிலருக்குத் தெரிவதில்லை..! தெரிந்தும் ஒப்புவதில்லை..!<BR/><BR/>கதையைப் பற்றிய தங்களின் பார்வையைத் தெரிவித்தால் மிக்க மகிழ்வேன்.<BR/><BR/>*****<BR/><BR/>திருத்தமிழ் அன்பர் அகரம் அமுதா,<BR/><BR/>அந்த நாட்கள் என்றுமே பசுமையானவை அல்லவா?<BR/><BR/>இன்றைய குழந்தைகளை நினைத்தால் சமயங்களில் மனம் வலிக்கிறது..!<BR/><BR/>எந்த நேரமும் படிப்பு.. கல்வி.. கணினி.. இசை வகுப்பு.. ஓவிய வகுப்பு.. பரதம்.. தற்காப்புக் கலை.. என்று துள்ளித்திரியும் பருவத்தில் சுவர்களுக்குள் சிறைப்பறவையாக வாழ்கிறார்கள்.<BR/><BR/>குழந்தைகளைக் குழந்தைகளாகவே வாழ விடாமல்;<BR/>குழந்தைகளைத் தங்களுக்காகவே வாழவைக்கிறார்கள் இன்றைய பெற்றோர்கள்.<BR/><BR/>நீண்ட காலத்திற்குப் பிறகு மீண்டும் வந்திருக்கும் தங்களை பணிவுகலந்த அன்போடு வரவேற்கிறேன்.சுப.நற்குணன்,மலேசியா.https://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-51750676682973439622008-12-07T16:52:00.000+08:002008-12-07T16:52:00.000+08:00தங்களின் இக்கட்டுரையைப் படித்தவுடன் என் இளமைக்காலங...தங்களின் இக்கட்டுரையைப் படித்தவுடன் என் இளமைக்காலங்கள் நினைவிற்கு வந்துவிட்டன. அப்பொழுதெல்லாம் சாப்பிடுவதென்றாலும் தூங்குவதென்றாலும் அம்மா அப்பா கதையோ பாட்டோ சொன்னால்தான் செய்வோம். விளையாடுகையில் கூட சகநண்பர்களைக் கிண்டல் செய்ய பாடல்களைப் பாடிக்கொண்டேவிளையாடுவோம். ஆனால் இன்று கணினி விளையாட்டுகள் பெருகிவிட்டதால் பலஇளையர் பாடல்களை இன்றைய தமிழ் சிறார்கள் இழந்துவிட்டார்கள். சில மணித்துளிகள் என்னை என் இளமைக்காலத்திற்கு அழைத்துச் சென்றமைக்கு நன்றிகள் அய்யா!அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-58826830698457247872008-12-07T12:56:00.000+08:002008-12-07T12:56:00.000+08:00இன்று நாளிதழில் உங்களுடைய சிறுகதை பிரசுரமாகியிருந்...இன்று நாளிதழில் உங்களுடைய சிறுகதை பிரசுரமாகியிருந்தது. அருமையான கதைக் கரு. வேற்று மொழி கலப்பில்லாமலேயே சிறப்பானதொரு சிறுகதையைப் படைக்க முடியும் என்பதற்கு நீங்கள் ஓர் அத்தாட்சி.<BR/><BR/>வேற்று மொழியைக் கலந்தால்தான் நிதர்சனத்தை வெளிக்கொணர முடியும் என்ற சிலரின் எண்ணங்களை, தாங்கள் உடைத்து தமிழுக்கு பெருமை சேர்த்திருக்கிறீர்கள்.சித்தன்https://www.blogger.com/profile/16657995947859578642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12894539.post-25230952697467531502008-12-06T01:14:00.000+08:002008-12-06T01:14:00.000+08:00ஆகா! மிக்க நன்றிங்க ஐயா!! இது போன்ற பாடல்களைத்தான்...ஆகா! மிக்க நன்றிங்க ஐயா!! இது போன்ற பாடல்களைத்தான் தேடிக் கொண்டு இருந்தேன்!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.com