Thursday, July 10, 2008

யாருக்கு.. யார்தான் தெய்வம்? (தமிழமுது 3)

"குலமகட்குத் தெய்வம் கொழுனனே மன்ற
புதல்வர்க்குத் தந்தையும் தாயும் - அறவோர்க்(கு)
அடிகளே தெய்வம் அனைவோர்க்கும் தெய்வம்
இலைமுகப் பைம்பூண் இறை"
-குமர குருபரர்
இப்பாடல் கூறும் கருத்து:-
நல்ல குடியில் பிறந்த கற்புடைய ஒரு பெண்ணுக்கு அவரள் கரம்பற்றும் கணவனே தெய்வம்; பிள்ளைகளுக்குத் தந்தையும் தாயுமே தெய்வமாவர்; அறநெறி நின்று இல்லற வாழ்வில் இனிதே ஈடுபட்டிருபோருக்குப் பற்றறுத்தத் துறவிகள் தெய்வமாவர்; இலையினுடைய நுனி போலப் பசும் பொன்னால் செய்யப்பட்ட அணிகலன்களைக் கொண்ட அரசனே(இறைவனே) அனைவருக்குமான தெய்வமாவான்.
  • நன்றி:- தமிழ் மறை தமிழர் நெறி

(அமுது ஊறும்...)

1 comment:

  1. பழம்பாடல்களை விளக்க உரையுடன் படிப்பக வழங்குகிறீர்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete

வணக்கம் திருத்தமிழ் அன்பர்களே. உங்கள் எண்ணங்களையும் ஏடல்களையும் இங்கே மறுமொழியாக இட்டுச்செல்லுங்கள். நன்றி.
அன்புடன்;
திருத்தமிழ் ஊழியன் சுப.நற்குணன்