Sunday, May 15, 2005

வலைப்பூ அறிமுகம்

திருத்தமிழ் வலைப்பூ - அறிமுகம்
இனிய தமிழன்பர் பெருமக்களே,வணக்கம். வாழ்க! தமிழ்நலம் சூழ்க!
திருத்தமிழ் வலைப்பூ உங்களை அன்புடன் வரவேற்கிறது. இதன் வழி தங்களைச் சந்திப்பதில் மகிழ்கிறோம். தமிழ் மக்களின் மனங்களில் தமிழைப் பற்றிய தாழ்வெண்ணங்களைக் களைந்து, தமிழ்ப்பற்றையும் தமிழ் உணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில்தான் இந்த வலைப்பூ தொடங்கப் பட்டுள்ளது.
தமிழ்மொழி - இனம் - சமயம் - பண்பாடு - வாழ்வியல் - வரலாறு தொடர்பான பயனான செய்திகள் இந்த வலைப்பூவில் இடம்பெறவுள்ளன என்பதை மகிழ்வுடன் தெரிவிக்க விழைகிறோம்.
தமிழைப் பற்றிய உயர்வான உண்மைகள் தமிழ் மக்களால் இன்னும் முழுமையாக உணரப்படவில்லை. முழுமையாகவும் உண்மையாகவும் உணர்த்தப்படாமை அதற்கொரு முகாமையான காரணமாகும். திருத்தமிழ் வலைப்பூ இனி இந்தச் செம்மாந்தப் பணியை முன்னெடுத்துச் செல்லும். தமிழைப் பற்றி தமிழர்களுக்கு உணர்த்துவதற்குப் பாடுபடும்.
தமிழர் ஒவ்வொருவரும் தம் தாய்மொழிப் பெருமையையும் இனத்தின் பெருமையையும் உண்மையாகவே உணர்ந்துவிட்டால் உலகம் மதிக்கும் உன்னத இனமாகத் தமிழினம் மாறும்காலம் வெகு விரைவிலேயே மலரும்.
தமிழ் உணர்ச்சி ஒன்றே தமிழ்த் தேசியத்தை மீட்டெடுக்கும்!
தமிழ் வாழ்க! தமிழியம் வெல்க!

2 comments:

Anonymous said...

தங்களின் "வலைப்பூவைக்" கண்டேன்; மட்டில்லா உவகை அடைந்தேன். தங்கள் வலைப்பூவின் நோக்கத்தை அறிந்தேன்.அந்நோக்கத்தை தாங்கள் இனிதே பெற்றிட வாழ்த்துகின்றேன். நன்றி

PETER JOHNSON'S BLOG said...

எனது 'தமிழ் இணையம் மலேசியா' எனும் வலைத்தள முகவரியினையும் உங்கள் வலைப்பிவில் இணைத்துக் கொள்ளும்படி வேண்டுகிறேன்.
தங்கள் தமிழ்ப் பணி போற்றுதற்குரியது. வாழ்க நீவிர்!
அன்புடன்
பீட்டர் ஜான்சன்
கோலாலம்பூர், மலேசியா

Blog Widget by LinkWithin